ADS 468x60

11 November 2016

விறகு ராட்டி அடுப்புகள் 50 குடியிருப்பு மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.


பட்டிருப்பு தொகுதியின் பழம் பெரும் கிராமங்களில் ஒன்றான குடியிருப்புக் கிராமம் 38 குடும்பங்களைத் தன்னகத்தே கொண்டு, மட்டக்களப்பின் தெற்கே சுமார் 24 கிலோ மீற்றருக்கு அப்பால் ஆற்றங்கரையில் அமைந்துள்ள வறிய கிராமமாகும். இந்தக் கிராமம் வயல்வெளிகள் சூழ வெண்மணற்த் திடலில் அமைந்திருக்கின்ற போதும், வருடா வருடம் ஏற்ப்படுகின்ற வெள்ள அனர்த்தத்தினில் பாதிக்கப்பட்டு வந்திருக்கின்றது. 

கல்வியில் வறுமை மட்டக்களப்புக்கு சொந்தமானதா?

வறுமை என்பத,, உணவு, உடை, உறைவிடம் பாதுகாப்பான குடிநீர், கல்வி பெறும் வாய்ப்பு, பிற குடிமக்களிடம் மதிப்புப் பெறுதல் போன்றவை உட்பட்ட, வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிப்பவற்றை இழந்தநிலை ஆகும். 

எமது மாவட்டத்துக்குள்ளும் இந்த வறுமை காரணமாக பல ஏற்றத்தாழ்வு காணப்படுகிறது. இதில் குறிப்பாக கல்வி பெறும் வாய்ப்பு பல குடும்பத்தில் மிக கஸ்ட்டமானதொன்றாகவே காணப்படுகிறது. இதனால்தான் எம் குழுமத்தினர் அந்தக் கல்வியில் அதிக அக்கறை கொள்ளுகின்றமை தெரிந்த விடயம்.

என் அன்புக்குரிய சகோதர சகோதரிகளே!


மீண்டும் ஒரு முறை உங்களுடன் உறவாடலாம் என நினைக்கிறேன். நாங்கள் பல காரணங்களால்; கடந்த தசாப்தங்களில் பிளவுபட்டு, துன்பப்பட்டு, துயரப்பட்டு நாலா பக்கமும் தாய் வேறு, பிள்ளை வேறென சிதைந்து, நாடு விட்டு நாடு போய், சில்லாங்கொட்டை போல் கலைந்து கிடக்கிறோம். 

தொழில் வாய்ப்பற்ற குடிமக்களாக மாற்றம் பெற்றுவிட்டோம்

தொழில் வாய்ப்பற்ற, தொழில் பாதுகாப்பற்ற ஒரு குடிமக்களாக மாற்றம் பெற்றுவிட்டோம். அறிவாளிகளாக உருவாக்கப்படுபவர்களும் இம்மக்களுக்கு பிரயோசனமற்றவர்களாக வெளியேறிச் சென்றுவிட்டனர்...கொச்சிக்காய் இருந்து கொள்ளிக் கட்டுவரைக்கும் இன்னொருவனிடம் கொடுக்கும் தரகு வர்த்தகத்துக்கு அப்பால் வியாபார தந்துரோபாயம் அற்று பெறுமதியான வளங்களை பெறுமதியற்று கொடுக்கும் எமது கூட்டத்தை நாங்கள்தான் வழிப்படுத்தனும். இன்றைக்கு இறைத்ததுபோதும் என நாம் ஓய்ந்துவிடலாகாது என்றைக்கும் இறைக்கவேண்டும் அப்போதுதான் எம் இனம் பசுமைபெறும்.

05 November 2016

காதல் வயப்பட்டதும் வயப்படுத்தியதும்

தெரிந்தும் தெரியாமலும்
புரிந்தும் புரியாமலும்
கண்ணில் கதையில்
பேச்சில் பெயரில்
சிரிப்பில்  செல்லத்தில்
கோபத்தில் பாவத்தில்
கவனிப்பில் கையணைப்பில்
செயலில்  சேவையில்
வயப்பட்டதும்.......

எழுத்தால் இதயத்தால்
சிரிப்பால் சினேகிதத்தால்
குரலால் கொள்கையால்
பாடால் பரிந்துரையால்
கொஞ்சலால் கெஞ்சலால்
கொடுமையால் கடுமையால்
கண்களால் கவிதையால்
வயப்படுத்தியதுமுண்டு.............

28 October 2016

தீபத்திருநாள் வாழ்துகள்!

ஒளிரும் ஒருநாள் உனக்காகவே எழுந்திடு மனமே!
இருள் போகும் போனால் மறையும் துன்பம்
வாழ்ந்திடு இனமே!!
எழுந்திடு மனமே! வாழ்ந்திடு இனமே!!
போருக்குள் வாழ்வைத் துலைத்து
போதாமை உள்ளே வைத்து
தூங்காமல் தொலைத்த காலம் போனதம்மா
கையுண்டு காலுமுண்டு கரைசேர்க்க ஆளுமுண்டு
நம்பிக்கை தீபம் கொண்டு முன்னேறுவோம்
ஒளியின் பக்கம் நடைபோடுவோம்
உன்மை பேசி உறவாடுவோம்
வாருங்கள் கொண்டாடுவோம்- ஒன்றாய்
சேருங்கள் முன்னேறுவோம்.

27 October 2016

'மட்டக்களப்பு மாநிலம் என்னும் மண்ணுக்கும் ஒரு வரலாறு உண்டு' .

'மட்டக்களப்பு மாநிலம் என்னும் மண்ணுக்கும் ஒரு வரலாறு உண்டு' என்பது மறுக்க முடியாத ஒன்று. இருந்தும், மட்டக்களப்பு பிரதேசத்துக்கு வரலாறு கிடையாது, அல்லது நீண்ட பண்டை வரலாறு இல்லை என்றுதான் அனேகர் நினைக்கின்றார்கள். மட்டக்களப்புக்கு போர்ந்த பண்பாடு இல்லை என்பது பலரது மனதில் தீர்க்கமாய் உறைந்திருக்கிறது.

இலக்கியம் கலை, மொழிச் செழுமை, வித்துவத்திறன், பிரதேச சமுக மேன்மை ஆகியவற்றில் மட்டக்களப்பு பிரதேச சமுதாயம் ரொம்பவும் பிற்ப்பட்டது என்கின்ற எண்ணப்பாடு நீண்ட காலமாக உலவுகிறது.

11 October 2016

நீர் ஓடிடும் தேனாட்டில்

அ) மீன்பாடுற நம்ம நாட்டில நம்மட நாட்டு வளம் கலை கலாசாரம் பற்றி ஏன் நம்ம ஒரு பாட்டு பாடக்கூடாது? 
ஆ) அது தானே

நீர் ஓடிடும் தேனாட்டில்
மீன் பாடுது கேளுங்களேன்
ஏர் பாய்ந்திடும் வளநாட்டில்
நெல் ஆடுது பாருங்களேன்

கூத்து கும்பி கரகம் வசந்தன்
பூத்துக் குலுங்கும் கலையிடும்
சேத்து காவியம் காதில் ஒலிக்க
உடுக்கை முழங்கும் தமிழ் நிலம்