ADS 468x60

14 May 2011

சிலுவை சுமக்கும் காதல்...


Fantasy Women Graphics Dark angels Clipart
P/
ஆவியாகும் ........
என் நெஞசக் கனவுகள்
இன்னும் இன்னும்
உவப்பு மழையாக,
சொரியும்; கண்ணீர்;
மேகங்களுடன்..
அடித்துச் செல்லும்
சோக அலையில்
நானும்,,
எனது ஆசைகளும்
கரையைத் தேடியே..
காலங் கழிக்கும் வேதனை....
மதவெறி பிடித்த
மங்கையின் சோதனை..
எல்லாம்..
என்னை காதல் சிலுவை
சுமக்க வைக்கின்றனவே......

09 May 2011

இந்தியாவில் தாயாகாத பெண்ணுக்கு சன்மானம்....


முழு சந்தோசங்களையும், வாழ்கைகளையும் நேரத்தையும் செலவிட்டு எம்மையெல்லாம் முழுமையாக உருவாக்குவதற்க்காக தன்னை அர்ப்பணிக்கும் ஜீவன் இவ்வுலகில் யார் இருக்கின்றார் என்று கேள்வி கேட்டால், அது தாயாகத்தான் இருக்க முடியும். இவள் உருவாக்க முடியாத உறவு, கண்களில் எண்ணையை வைத்து கருத்தாக காக்கும் உயிர், மன்னவனும் விண்ணவனும் போற்றும் கருணைக்கடல்... அது தாய் ஒன்றாக மாத்திரம்தான் கருதலாம். ஆதனால்தான் அன்னையர் தினம் உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் கொண்டாடப்படுகின்றது.. அது சாலப் பொருத்தமானதும் கூட.

தாய்மை பற்றி ஒரு புதிய தகவல் விடயம் பற்றி தெரிவிக்கலாம் என விரும்புகிறேன். யாரும் திருமணத்தின் பின் தாய்மை அடையக் கூடாது என்று விரும்புவதில்லை மாறாக தாய்மையடைவதை ஒரு பேறாகவே எம்மத்தியில் கருதி வருகின்றமை காணக்கூடியதாய் உள்ளது..

மேற்கு இந்தியாவின் ஒரு சட்டார் எனும் விவசாய பிராந்தியத்தில் அரசாங்கம் 106 அமெரிக்கன் டொலர்களை, திருமணத்தின் பின் இரு வருடங்களுக்கு பிள்ளை பெற்றுக் கொள்ளாமல் இருப்பவர்களுக்கு ஊக்குவிப்புத் தொகையாக வழங்கி வருகின்றது. இதனிடையே அனேகமான பிள்ளைகளை மிகக் குறைந்த இடைவெளியில் பெற்றுக்கொள்ளுவது அவ்வளவுக்கு அரோக்கியம் இல்லை என்பதற்க்கில்லை, என்றும் கருத்துக் கூறப்பட்டு வந்துள்ளது. இது சனத்தொகை அதிகரிக்கும் இந்தியா போன்ற நாடுகளில் அமுலாக்குவது பொருத்தமாகவும் இருக்கலாம் என்பதற்கு இது நடைமுறைப்படுத்துவது என்னவோ உன்மைதான்.

இப்பொழுது இந்தியாவின் சனத்தொகை 1.2 பில்லியனாக இருந்து வரும் நிலையில் இது இன்னும் ஒரு தசாப்த காலத்தினுள் சைனாவின் சனத்தொகையினை விஞ்சி 1.5 தொடக்கம் 1.9 பில்லியன் சனத்தொகையாக மாறி உலகிலே அதிக சனத்தொகையினைக் கொண்ட நாடு என்ன பெயரினை பொறிக்க இருக்கிறது. இது அந்நாட்டு அரசை குறைந்து வரும் வளத்தினிடை கூடிவரும் சனத் தொகையை வைத்து என்ன பண்ணுவது என்ற சங்கடத்திற்குள் உள்ளாக்கியுள்ளதாம். என "சேஞ்ச்" என்ற இணையத்தளம் தகவல் வெளியிட்டு அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

உலகலாவிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆரோக்கியமான ஒரு சமுகத்தில் சராசரியாக 2.1 என்ற விகிதத்தில் குழந்தைகள் இருப்பது உலகத்தின் சமநிலையை பாதுகாக்க உதவியாய் இருக்கும் என கூறப்பட்ட நிலையில், இதனை அதிக வருமானங்களைப் பெறுகின்ற கல்வியில் வளர்ச்சி கண்ட நாடுகள் பின்பற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஆனால் வறுமையான மூன்றாம் மண்டல நாடுகளிடையே ஒரு குடும்பத்தில் 4 குழந்தைகளுக்கு மேல் சராசரியாகக் காணப்படுகின்றமை காட்டப்பட்டுள்ளது.

இருப்பினும் மேற்கிந்தியாவில் மாத்திரமல்ல பல நாடுகளில் காட்டமாக குழந்தைகளை பெறக்கூடாது என்ற சட்டரீதியாக பல கொள்கை அமுலாக்கலை கொண்டு வருவதும், ஊக்குவிப்பு தொகையினை அறிமுகப்படுத்தி தாய்மையை அழிப்பதும் உன்மையிலே தாய்மைக்கு நாங்கள் செய்யும் அவமானமாகத்தான் இருக்கிறது. குழந்தை பெற்றுக் கொள்ளுவதும் பெறாமல் இருப்பது;ம அத்தாயின் முடிவில் இருக்கவேண்டும் என்ற ஒரு பொதுக் கருத்து காணப்படுகின்றது.

இருப்பினும் சிறுவயதில் சட்டரீதியற்ற முறையில் திருமணம் செய்வோர் இந்த பிராந்நியத்தில் 25 விகிதமாக இருக்கின்றது என்றும், இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியம் இல்லாமல் இருக்கின்றனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆகவே எது எப்படி இருப்பினும் தாய்மை பற்றி இந்த உலகம் மிகுந்த அக்கறை காட்டி தான் வருகின்றது. மிக நுணுக்கமான முறையில் சட்டங்களையும் கொள்கை அமுலாக்கங்களையும் செய்து ஆரோக்கியமான ஒரு சமுகத்தினை கட்டியெழுப்புவதனூடாக தாய்மைக்கு நல்ல மரியாதையைப் பெற்றுக் கொடுக்கலாம் அல்லவா. நாங்கள் எங்கள் தாயை மாத்திரமல்ல, பாட்டியை, மனைவியை எல்லாம் தாயாக அன்னையர் தினத்தில் மாத்திரமல்ல நாள்தோறும் ஆராதிக்கப் படவேண்டியவர்களே...

அம்மானா சும்மா இல்லடா..











உலகுக்கு உணவளிக்க
களத்து மேட்டு கண்ணம்மா!
உள்ளவரின் பிள்ளைகட்கு
ஊட்டி வளக்க சின்னம்மா!!

நிழலில் நீயிருக்க
வெயில் குளிக்கும் உன்னம்மா!!!
மடியில் சுமந்து
மனிதனாக்கிய என்னம்மா!!!!

காட்சிதந்தும் கருணைதந்தும் 
கடவுள் வேண்டும் இன்னுமா!!!!??

29 April 2011

மட்டக்களப்பு பாடும் மீன் ஓசை..

"மட்டு மா நகரை மீன் பாடும் போது, ஏன் நான் பாடக் கூடாதா!' என்ற நட்பாசை தான்...இது எனது நீண்ட நாள் ஆசை. மிக சில தொழில் நுட்ப்பங்களை மட்டும் கொண்டு இன்பனின் மதுரக் குரலில் என் செல்ல மருமகள்மார்களுடன் இதை முடித்து இருக்கிறேன்....

25 April 2011

முகம் பார்க்க ஏங்கும் மூட்டுவலி

Myspace Hugs Graphics Kisses Clipart
தூரல் நின்ற வானம்
அலைகள் ஓய்ந்த கரை
வேகம் சாய்ந்து,
சோகம் தோய்ந்த,
இவன் சங்கற்ப்பங்கள்,
இப்போ........

பூக்களின் வாசத்தில்...
வண்டுகளின் ஓசையில்....
மீன்களின் துள்ளல்களின்...
நடுவில்...
கரைகளில் தவழும்....
நெஞ்சக்கனத்துடன்....
பரவசப்படும் நான்..
நான் அல்ல...

காது வழியால்- ஒரு
புதிய நுழைவு- என்
நெஞசத்தின்
இடம் நிரப்பி.......
வேலிகள் உடைக்கும்
சந்தோசம் இருந்தும்,,
முகம் பார்க்க ஏங்கும்
மூட்டு வலியில் நான்.........
படுக்கை மறந்து
பரிதவிக்கிறேன்..

16 April 2011

சி‌த்ரா பௌர்ண‌மி


மாதந்தோறும் பெளர்ணமி வந்தாலும்இ சித்திரையில் வரும் பெளர்ணமிக்கு என்று ஒரு தனி சிறப்பு உள்ளது.‌சி‌த்ரா பவு‌ர்ண‌மி அ‌ன்று காலை‌யி‌ல் கு‌ளி‌‌த்து முடி‌த்து பூஜையறை‌யி‌ல் ‌விநாயக‌ர் பட‌த்தை நடு‌வி‌ல் வை‌த்துஇ ‌சிவனை எ‌ண்‌ணி பூ‌ஜி‌க்க வே‌ண்டு‌ம். ச‌ர்‌க்கரை‌ப் பொ‌ங்க‌ல் செ‌ய்து படை‌த்து அதனை எ‌ல்லோரு‌க்கு‌ம் அ‌ளி‌க்கலா‌ம். 


‌பழ‌ங்கால‌த்‌தி‌ல்இ சி‌த்ரா பவு‌ர்ண‌மி அ‌ன்று ஆ‌ற்ற‌ங்கரை‌யி‌ல் உற‌ல் தோ‌ண்டி அத‌ற்கு ‌திருவுற‌ல் எ‌ன்று பெய‌ர் சூ‌ட்டிஇ அ‌ங்கே இறைவனை வல‌ம் வர‌ச் செ‌ய்வா‌ர்க‌ள். ‌சி‌த்‌திரை மாத‌த்‌தி‌ல் தாராளமாக‌க் ‌கிடை‌க்கு‌ம் மா, பலா, வாழை போ‌ன்ற பழ‌ங்களை இறைவனு‌க்கு படை‌த்து பூ‌ஜி‌ப்பா‌‌ர்க‌ள்.


இந்த நாளில் உறவினர், நண்பர்களுடன் நதிக்கரையில் உரையாடியபடி உண்பதுதான் பழங்காலம் தொட்டு இருக்கும் வழக்கமாகும்.புழுக்கத்தையும், வெயிலின் உஷ்ணத்தையும் சமாளிக்க இப்படி நீர்நிலைக்கு அருகில் மக்களை வரவைப்பதே இந்த சித்ரா பெளர்ணமியின் விஞ்ஞானப் பூர்வ உண்மை.அதிலும், உறவினர், நண்பர்கள் புடை சூழ அமர்ந்து உரையாடிஇ பாடி, மகிழ்ந்து உண்பது எல்லோருக்கும் பிடித்தமான விஷயம்தான்.


அன்றைய தினம் ப‌ல்வேறு கோயில்களிலும் ‌திரு‌‌விழா‌க்க‌ள் நட‌த்த‌ப்படு‌கி‌ன்றன. எ‌ங்கு‌ம் அதிகமான கூட்டம் காணப்படும். புராண‌க் கதைக‌ளி‌ன்படி, ம‌னித‌ர்க‌ளி‌ன் பாவ, புண‌ணிய‌க் கண‌க்குகளை எழுது‌ம் ‌சி‌த்ர கு‌ப்த‌ன் அவத‌ரி‌த்த நாளு‌ம் இ‌‌ன்றுதா‌ன். அவ‌ர் ‌சிவ‌ன் வடி‌த்த ‌சி‌த்‌திர‌த்தை‌க் கொ‌ண்டு உருவா‌க்‌ப்ப‌ட்டதாலு‌ம், ‌சி‌த்‌திரை மாத‌த்‌தி‌ல் ‌பிற‌ந்ததாலு‌ம் ‌சி‌த்ர கு‌ப்த‌ன் எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌கிறா‌ர்

12 April 2011

மட்டக்களப்பு மக்களின் சித்திரை வருடம்-

ஐயா வாங்க அம்மா வாங்க, தங்கச்சி வாங்க கொழுத்தும் வெய்யிலில் அழுத்தம் கொடுத்து பொருட்கள் விற்ப்பதை பார்க்கும் போது ஒரே குதூகலம் கொண்டாட்டம். ஓமாடியாமடுவில் இருந்து ஒரு குலாம், ஓந்தாச்சி மடத்தில் இருந்து ஒரு குலாம், விளாவட்டுவானில் இருந்து ஒரு குலாம், வாழைச்சேனையில் இருந்து ஒரு குலாம், மற்றது மாங்கேணியில் இருந்து ஒரு குலாம், செட்டிபாளையத்தில் இருந்து இன்னொரு குலாம்,  இப்படி அலை அலையாக அழகழகாக தமது பாரம்பரியங்களை இரண்டு மூன்று தசாப்தங்களுக்கு அப்பால் குழந்தைகள் இருந்து இளையவர்கள் முதியவர்கள் என படை படையாய் மட்டு நகர் வீதியெங்கும் எட்டி எட்டி போய் ஆர்வத்துடன் பொருட்களை வாங்க உழைத்த காசெல்லாம் செலவு செய்யும் ஒரு பரபரப்பான காட்சி அழகாய் இருக்கிறது.

11 April 2011

இது தான் தமிழர் புது வருடமா?.....

    
தமிர்களின் உண்மையான வருடம் எது?
தமிழர் தம் மரபைத் திரித்த விநோதங்களுள் ஒன்று வருடப் பிறப்பை சித்திரையிலிருந்து, தை மாதத்திற்கு மாற்றியது.உன்மையில் இந்துக்களின் புதுவருடம் சித்திரை மாதத்தில்தான் ஆரம்பமாகின்றது.

தொன்மை கொண்ட சித்திரை. 
'திங்கள் பன்னிரண்டு என்பதும், அவற்றுள் தை, மாசி, பங்குனி, கார்த்திகை முதலிய மாதப் பெயர்களைச் சங்கப் பாடல்கள் குறிப்பதனாலும் ஓர் ஆண்டில் சித்திரைத் திங்கள் முதற்கொண்டு பங்குனி ஈறாக எண்ணும் தமிழ் ஆண்டின் மாதப் பெயர் வழக்கும் பழமையானவை என்பது போதரும்' என்பார் பேரா.சண்முகம் பிள்ளை.எனவே கடந்த 2000 ஆண்டுகளுக்கும் குறைவில்லாமல் சித்திரை முதலான மாதங்கள் வழக்கத்தில் இருந்து வருகின்றன என்பது தெளிவு.