ADS 468x60

09 August 2015

கொடுக்கிற மக்களுக்கு குடிக்க இல்லையா தண்ணீர்? மன்றாடும் உன்னிச்சை மக்கள்..

 மட்டக்களப்பு என்ற அழகுப் பெண்ணை வேலியாக காத்து நிற்கும் மக்கள் எமது எல்லைக் கிராமத்தவர்கள்தான். யுத்தம், அனர்த்தம், இருள், வறுமை, வேதனை என்னும் பேரிடிகளின் காப்பாக இருந்தவர்கள்,மழையிலும் வெயிலிலும் கல்லிலும் முள்ளிலும் கரத்தாலும் சிரத்தாலும் களனி செய்து உண்ணும்; சோற்றுக்கு நெல் விளைவிப்பவர்கள், மீனும் தேனும் பாலும் கூழும் பசிக்கு தருபவர்கள், வந்தோரையெல்லாம் வாழவைப்பவர்கள் என்ற அடைமொழியின் சொந்தக் காரர்கள், உபசரிப்பதில் உற்சாகமானவர்கள் இந்த உன்னிச்சை கிராம மக்கள்.

23 July 2015

போதையிலே பாதை மாறிப் போகாதே!

போகாதே தம்பி போகாதே – நீ
போதையிலே பாதை மாறிப் போகாதே
கண்ட கண்ட போதையெல்லாம் உண்ணுகின்றாயே –உன்
கடைசி நாளை விரலை விட்டு எண்ணுகிறாயே

நல்லவங்க போதையைத்தான் தொட்டதுமில்ல –அத
தொட்டவன லேசிலதான் விட்டதுமில்ல
பையில் உள்ள பணத்தையெல்லாம் போதை குடிக்குது –உன்
பரம்பரயே பசியிலதான் நாளும் துடிக்குது

குடும்பத்தையே தெருவினிலே கொண்டு வருகிது- இது
குடித்தவன அருகினிலே மரணம் நெருங்குது
உடும்பப்போல போதையை நீ இறுகப்ப பிடிப்பதால்- உனை
அடிமையாக்கி ஊருலகில் பெருமை குறைக்கிது

வேலியெல்லாம் பயிரை மேயும் கேலியினாலே –நம்ம
வீடுகளில் கூட ஒரு சுதந்திரம் இல்லே
நீதிகெட்டுப் போன நாட்டில் நிம்மதியில்ல –நல்ல
சேதிகெட்டு நாளும் நாளும் காது உடையிது

19 July 2015

மனிதன் வளமாக இல்லை

எம்மிடம் மனித வளம் இருக்கிறது ஆனால் மனிதன் வளமாக இல்லை. மனிதன் வளமாக இருக்க பயிற்ச்சியும், வழிகாட்டலும் தேவை. முன்னுக்கு செல்பவர்கள் பின்னுள்ளவரை கைவிட்டுச் செல்லும் பாணியிலான மனோபாவம் எம்மினத்தினரிடையே எப்போது மாறுமோ அப்போது நம் உறவுகள் இந்தக் கோலத்தில் இருக்க மாட்டார்கள். மனம் வைத்து மேம்படுத்துவோம்...
"மனித வள மேம்பாட்டின் நோக்கமானது மனிதவளத்தின் முழுமையை வளர்ப்பதற்காக அறிவூட்டுவதன் ஊடகவும் கல்வி, பயிற்சி சுகாதாரம் அனைத்து மட்டங்களின் ஊடாக வேலை வாய்ப்பு போன்றவற்றின் இணைந்த கொள்கைகளினால் பெறப்படுகின்ற ஒன்றாகும்.

04 March 2015

கையைக் கட்டி நில்லாதே!

கையைக் கட்டி நில்லாதே!
கண்டது எல்லாம் அஞ்சாதே!
குட்டக் குட்டக் குனியாதே தோழா!

வாழ்கை என்பது வட்டமடா
மேலும் கீழும் ஓட்டமடா
நீயும் ஒருநாள் மேலேவா தோழா!

இனி கவலைக்கு இடமில்லையே- பயமில்லையே
எங்கள் கழுத்தினில் விடமில்லையே- வியப்பில்லையே

உந்தன் வாழ்கையில் ஜெயிக்கும்வரை- நீ
கையைக் கட்டி நில்லாதே
கண்டது எல்லாம் அஞ்சாதே
குட்டக் குட்டக் குனியாதே தோழா!!

காடும் மேடும் உன்னோடு
கடலும் காற்றும் உன்னோடு
இறந்தும் இருப்போம் மண்ணோடு
இறக்கும் வரைக்கும் போராடு
கல்வியும் எமக்கொரு ஆயுதமே!
கைகளில் நீயெடு முன்னேறு
வறுமை எமக்கொரு தடையில்லையே- அட போராடு
இன்று மட்டும்தான் எமக்கு சொந்தம்
நேற்றையதை நினைத்து நீ வருந்தாதே!
மனங்கள் மட்டும் உறுதி கொண்டால்
மழை வெயில் எமக்கில்லை மனிதரில் பதரில்லை!

கையைக் கட்டி நில்லாதே!
கண்டது எல்லாம் அஞ்சாதே!
குட்டக் குட்டக் குனியாதே தோழா!

மேற்கே சூரியன் உதிக்காது
மேடைப் பேச்சும் உதவாது
வாக்கை அள்ளி வீசுவதால்
வாழ்க்கை ஒன்றும் உயராது....
ஒன்றாய் இருந்தால் ஜெயித்திடலாம்
உதவாக் கரைகளை ஒளித்திடலாம்
மக்கள் கூட்டம் விழித்து விட்டால்- அட அழியாது
நம்பி நம்பியே இழந்து விட்டோம்
நரிகளும் பரிகளும் புலியாச்சு
நம்பிக்கை மட்டும் நமது சொத்து
தடைகளை உடைத்திடு சரித்திரம் படைத்திடு..
கையைக் கட்டி நில்லாதே!
கண்டது எல்லாம் அஞ்சாதே!
குட்டக் குட்டக் குனியாதே தோழா!

வந்தவரை வாழ வைக்கும் மண்ணய்யா

வந்தவரை வாழ வைக்கும் மண்ணய்யா-நம்ம
மாநிலத்தில கிடைக்காதது என்னையா
கலைகள் எல்லாம் எங்களுக்கு மூச்சுங்க-ஒங்கள
ரசிக்க வைக்கும் மட்டக்களப்பு பேச்சிங்க

28 January 2015

ஆண்டு நூறு வாழ்க

ஆண்டு நூறு வாழ்க
அமைதி இன்பம் சூழ்க
நாடும் செல்வம் யாவும்
நாளும் வந்து கூடும்

06 January 2015

நில்லப்பா கொஞ்சம் நில்லப்பா

கண்ணணப்பா கொஞ்சம் நில்லப்பா
நில்லப்பா கொஞ்சம் நில்லப்பா
நான் கேட்கும் கேள்விக்கு
நீயுச்சும் சிந்திச்சு சொல்லப்பா பதில் சொல்லப்பா

18 November 2014

எங்க ஊரில் மழை.

மழையே -நீ
முகில்களை உதிர்த்தவில்லை
முத்துக்களை உதிர்த்துகிறாய்
இன்னும் பிரபஞ்சத்தின்
பச்சைக்கெல்லாம்
பிச்சை போடுகிறாய்
ஆக மொத்தம்- நீ
கொடுப்பவன் அதனால்
மேலேயும்- நாம்
பெறுபவர் அதனால்
கீழேயும் இருக்கிறோம்.