ADS 468x60

22 February 2017

என்ற ஊரு!!

நாங்கள் வளர்ந்து மரமாக; மரமாய் கனி கொடுக்க;
உரம் சேர்த்த அன்னை,
பார்தால் பசி போக்கும் பசும் சோலையாக
தேத்தா மரங்கள் நிழல்தந்த தேத்தாத்தீவு தான்
எங்கள் தேனூர்க் கிராமம்

தோட்டமும் தொரவும் வயலும் வாய்காலும்
கடலும் களப்பும் குளமும் குட்டையும்
கலையும்  சிலையும் அலையும் அழகும்
நிலமும் நீருமென வளம் பல கொண்ட ஊரு!!

14 February 2017

காதலுக்கு எதுக்கடி பரிசு?

காதலுக்கு எதுக்கடி பரிசு?
மனசுக்குள் இருபதுதான் பெரிசு!
காதலிக்க கவிதை வேணுமா-உன்னை
கனவிலும் மறக்காத ஆணுமா

இன்றைக்கு கொடுக்கனுமா றோசி
அதுபோன்ற காதலெல்லாம் தூசி- இது
தெரியாதவங்க வாழ்க்கையில மோதல்
தெரிங்சிருந்தா அதுதானப்பா காதல்

உயிரிருந்தும் வாழாதே செத்து
உறவு மட்டும் மாழாத சொத்து
பயிர் விழைந்தால் வருகும் வித்து
பாசம் நுழைந்தால் காதல் முத்து

காதல் பழசுபட்டுப்போன உறவுகளில் துளிர்விடுவதில்லை

காதலர் தினம் காதலருக்கான ஒரு விடுமுறையாகக் கொள்ளப்படுகின்றது. காதலில் அன்புதான் அதை தூண்டி விட, பற்றவைக்க, ஊக்கப்படுத்த துரிதமாக இயங்கும் ஒரு கருவியாகும். இது வாழ்து அட்டைகளாலும், நகைப் பரிசுகளாலும், மலர்கொத்துக்களாலும் பரிமாறப்படும் வெறும் தினமல்லாமல் உள்ளத்தின் தேடல், கூடல், காணாமல் வாடல் கண்டதும் ஆடல் என்கின்ற உணர்வுகளின் சேருமானத்தினை பெறுமானம் சேர்த்து வெளிக்காட்டுகிற நாள்.

காதல் தேங்கிக் கிடக்கும் பழசுபட்டுப்போன  உறவுகளில் துளிர்விடுவதில்லை, இன்னும் இந்தக் காதலர் தினம் எம்முன் நீறு பூத்த நெருப்பாக இருக்கும் ஆசையினை, அன்பினை, உறவினை வெளிக்கொணரும் ஒரு சந்தர்ப்பம். அதனால் நீண்ட, உறுதியான, அழகான உறவின் அடிக்கல்லாக இருக்கும் காதலருக்கான ஒரு நாள் எனக் கொள்ளலாம். ஆனைத்து காதலர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

31 January 2017

வந்து உன்னை அள்ளுகிறேன்.....

கால் கழுவ களனிக்காடு
கண்டு மகிழ களத்து மேடு
பால் நிறைந்த வெள்ளைக் கதிர்
பருவம் வந்தால் தின்னும் புதிர்

வில்லுக் குளத்து வீச்சிமீன்
விடியக் கிளம்பும் சூரியன்
பல்லுத் தீட்ட ஆலங்குச்சி
பக்கத்து கோயில் மணி

உதவாதவா்கள் உள்ளவரை உருப்படாது ஒன்றும்.

மரத்தை தெய்வமாய் வழிபட்டனர் ஏன்? மரம் கனி தந்தது, காய் தந்தது, இலை குழை தந்தது, நிழல் தந்தது, நிலம் காத்தது, படுக்க மெத்தை, உடுக்க துணி, எடுக்க பை, அடுக்க அலமாரி, சுவாசிக்க காற்று, வாசிக்க கடதாசி இன்னும் எத்தனையே எத்தனையோ! ஆனா எங்க ஊரில இந்த தெய்வத்தை வைத்து பலன்பெறத் தெரியல்ல
கவலையாக இருக்கிறது, யாரும் பராமரிப்பார் இல்லை, நாட்டி நாலடி உயரமாக கூட்டி வளர்த்த இந்த மரங்களை சுற்றிய கம்பிக்கூடு, கூட இருந்த கம்புத்தடி என்பன சிலவற்றை களவாடிவிட்டனர்.
அப்பப்போ போகும்போது அழனும்போல தோணுது. ஊரில் எத்தனையோ சங்கம் கழகம் இருக்காம், எத்தனையோ உறுப்பினர்கள் இருக்கிறாங்க அது தவிர தொண்டர்கள் இவர்களுக்கு எல்லாம் ஏன் இந்த அக்கறை வருவதில்லையோ தெரியவில்லை. கோபால் எனும் ஒரு தொண்டா் எனக்கு அப்பப்போ உதவியாய் இருப்பது ஒரளவுக்கு ஆறுதலாக இருக்கிறது.

22 January 2017

ஜல்லிக்கட்டு

இது மாட்டுக்கான போராட்டம் மட்டுமல்ல தமிழ் நாட்டுக்கான போராட்டமாக இருப்பது மிக்க மகிழ்சி. இன்று இது உலகத்தில் ஒரு புரட்சியாகப் பார்கப்படுகின்றது. அது மாணவர்களின் திரட்சியாக நோக்கப்படுகின்றது. நெடுநாளாக அவதானித்து பெருமை கொண்டிருந்தேன், உலகத்தில் தமிழன் இவளவு தானே என்றெனக்கிருந்த சிறுமை கொண்றிருந்தேன்.

19 January 2017

நான் கற்ற பாடசாலைக்கு சென்றிருந்தேன்

நான் 16.01.2014 அன்று நான் கற்ற பாடசாலைக்கு சென்றிருந்தேன், அங்கு புதிதாக வந்திருக்கும் சின்னஞ்சிஞசுகளை ஆசையோடு பார்க்கச் சென்றேன். குழந்தைகள் எல்லோரும் சேர்ந்து குட்மோணிங் சொல்லி வரவேற்றது என்னை ஒரு கணம் பழய நினைவுக்கு கொண்டு சென்றுவிட்டது. 

17 January 2017

எமது மாவட்டத்தில் பெண்களின் நிலை கவலைக்குரியதே!!


பொதுவாக இலங்கையில் 150000 மாணவர்கள் வருடம் ஒன்றுக்கு உயர்தரத்தில் தோற்றுகின்றனர். அதில் 25000 மாத்திரம் தேசிய பல்கலைக்கழக நுழைவுக்கு தகுதியானவர்களாக இருக்கின்றனர். ஏனைய 125000 பேரின் நிலை? கேள்விக்குறியாகவே போகின்றது. "ஆசியாவின் அறிவு மையம்" என்ற எடுகோள் சரியான திட்டமிடல் இன்மை காரணமாக வேலையற்ற, வழியற்ற சமுகம் ஒன்றினை தோற்றுவித்துவரும் அபாயம் இன்று காணப்படுகின்றது.