ADS 468x60

05 January 2019

தேனூர்ப் பதியப்பா

கலியுகப் பெருமானே காத்தருள் புரியும் தேனூர்ப் பதியப்பா
தொழுவேன் தொழுவேன் தொழுவேன் நான்
திருமேனி உலகுயர் கணபதியே
ஓம் கணபதி ஓம் கணபதி ஓம் கணபதி


கருணை முகம் கொண்டு காவல் புரி தெய்வம்
கோயில் எழுந்த தீவு –தேனூர்
கோயில் எழுந்த ஊரு- 2
கடலும் ஆறும் கரை தொடும் நடுவினில்
வரும் அடியார் குறை தீர்கும் தலம்!
ஓம் கணபதி ஓம் கணபதி ஓம் கணபதி

மனதில் வலி துன்பம் மாயை தரும் இன்பம்
மறையும் வந்து பாரு- தேனூர்
மறையும் வந்து பாரு- 2
நினைத்தால் கிடைத்திடும் வரங்கள் கொடுத்திடும்
நிறை தெய்வம் வந்து அருளும் பதி
ஓம் கணபதி ஓம் கணபதி ஓம் கணபதி

0 comments:

Post a Comment