ADS 468x60

05 January 2019

உயிரைப் பறித்து உலை மூட்டாதிங்கோ!!!

நிலாச்சோறு திண்டகாலம்
கலாசாரம் கலந்தகாலம்
என் அணியில் நீயும்
உன் அணியில் நானும் என
பிட்டும் தேங்காப்பூவுமாய்
பின்னி பிணைந்த காலம் போய்

இரத்தத்தில் கை களுவும்
இரக்க மற்ற மனிதங்களாக
ஏன்தான் மாறினீர்கள்!




புல்லை பூண்டையா உண்ணுகிறோம்
குத்திக் குதறுவதற்க்கு
நெல்லையல்லவா உண்டோம்
நேசம் எங்கே போச்சோ!
உன்னில் வியர்வை இனிக்கிறதா
இவனில் இரத்தம் கறுக்கிறதா
சித்தாத்தன் சொன்னவை
செத்தாடா போயிற்று!
அல்லா என்கிறோம் ஆத்தா என்கிறோம்
எல்லாம் ஒன்றுதானே!
கடவுள் போரைச் சொல்லி- ஏன்டா
கருமாரி செய்யிறீங்கோ!
வேணாம்டா மக்காள்
வீட்டுச் சனம் பாவம்டா
கூட்டம் கூடி கூட்டம் கூடி
கொல்லத் திட்டம் வேணாம்டா!
பசிக்கிறதா அதற்க்காய்
காய்கறி பழம் இருக்கு
பறித்து தின்!
உயிரைப் பறித்து உலைமூட்டாதிங்கோ!!!

0 comments:

Post a Comment