ADS 468x60

06 July 2019

விடுதலைக்காய்!

மனிதாபிமானம்- அது
மனுக்குலத்துக்கு அவமானம்
மனச்சாட்சி இல்லாமல்
மன்றில் உரைக்கின்றீரே
கடத்தப்பட்டு காணாமல் போன
தடுக்கப்பட்டு சிறையில் உள்ள
எம் இனத்துக்கு மாத்திரம்
தடைச் சட்டமா!
சரண் புகுந்தோர்கு அங்கு
கொலைப் பட்டமா!
உண்மையை கண்டறிய
ஒன்பது வருடம் தேவையா!
நல்லாட்சி என்றால்
இல்லாதார்க்கு நீதி எங்கே!!
எல்லோரும் பிரார்த்திப்போம்!
எம்மினத்தின் விடுதலைக்காய்!

0 comments:

Post a Comment