ADS 468x60

08 May 2023

பிலோமினா அம்மா ஞாபகார்த்தமாக நந்தவனம் முதியோர் இல்லத்தில்


இன்று பிலோமினா அம்மா அமரத்துவம் அடைந்து 31ஆவது நாள் நினைவலையில், முதல்கட்டமாக அவருடைய ஞாபகார்த்தமாக நந்தவனம் முதியோர் இல்லத்தில் ஆதரவுக்காக் தஞ்சமடைந்திருக்கும் பெரியோர்களை கண்டு அவர்களுக்கு சிறு உதவிகளை வழங்கிவைத்தோம். 


மிகப்பெரிய கலைஞர், தமிழ் பற்றாளர், சமுக ஆர்வலர் எம்மை விட்டுப்பிரிந்த அந்த நொடி இன்னும் மனதை விட்டகலாத நிலையில் அவரது ஆத்ம நிம்மதிக்காய் அவர் கனவுகளை சுமந்து நினைவுகூருகின்றோம். 

அவர் எடுத்துச் சொல்லுமளவுக்கு பெண் ஆழுமைக்கு ஈழத்தில் உதாரணமாக உள்ள ஒரு சிறப்பான ஆழுமை. சிறந்த  ஒரு குடும்பத்தலைவி, எழுத்தாளர், சர்வதேச அவைகளிலெல்லாம் கருத்தாடும் வாண்மை கொண்டவர். இந்த சர்வதேச பெண்களை நினைவூட்டும் அன்னையர் தினத்தில் அவரை நினைவுகூருவதில் பெருமிதமடைகின்றேன்.




0 comments:

Post a Comment