ADS 468x60

09 November 2010

மது


மெய்யை உருக்கும்
நெருப்பு
மையல் கொண்டோரின்
விருப்பு
காசை கரியாக்க
கொழுத்த உரம்
வாழ்கை பின்னடையும்
வழுக்கு மரம்
பலவீனமானோர்
பக்கத்துணை
பருகுவோர்கு விலக்கும்
வெட்கத்தினை
நீராய் இருந்து
முள்ளாய் குத்தும் நெருஞ்சி

மடையர்களின் 
சிறைச்சாலை -இது
ஆக்குவதோ துன்பச்சோலை...

இன்றைய இளைஞர் யுவதிகள் மத்தியில் மது அருந்துதல், புகைத்தல் ஆகியன ஒரு பஷனாக மாறிவிட்ட நிலையில் விருந்துபசாரம் போன்ற களியாட்ட நிகழ்வுகளில் மதுபான வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றன.ஏதாவது கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு வருமாறு இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தால் வைன், பியர், பிஸ்கி, பிறண்டி வழங்கப்படுகின்றனவா என்று கேட்டுக்கொண்டே மேற்படி கொண்டாட்டங்களில் கலந்து கொள்கின்றனர்.
இவ்வாறு பலர் ஒன்றுகூடும் களியாட்ட நிகழ்வுகளில் மது அருந்துதல் என்பது சாதாரண நிகழ்வாகிவிட்டது என்பதுடன், மது அருந்தாது விடுபவர்களை பட்டிக்காடு என்று நோக்கும் நிலையும் வந்துவிட்டது.

லீலைகள்..


இது எனது பல்கலைக்காலத்தில் யாக்கப்பட்ட கவிதை.....

காற்றினில் பறந்து
பூக்களில்  உரசி
தேனினைக் குடிக்க
வண்டுகள் செய்யும் சரசம்
லீலைகள்.....

நிலவினைத் தீண்டி
ஒளியினை மறைத்து
முழுமுகம் கரைத்து
முகவரி மாற்றும்
மேகங்கள் உன்னில்
மோகம் கொள்வதும்
லீலைகள் .......

நாங்களும்
மதுவினில் தோய்ந்து
மார்பினில் பாய்ந்து
கிளுகிளுப்பூட்டி
தீனிகள் தீர்த்தி
சில்மிசம் செய்வதும்
லீலைகள் .........

GH இன் ஓரங்களில்
சத்தமாய் காதலி
பெயரினைச் சொல்லியும் ,,
வெளிச்சங்கள் அணைய ,,
வசைபாடியும் ,,
வேலிகளை பயமுறுத்த,,
வெற்றுப் போத்தல்களை
சுக்குநூறாக்கும் .......
ஆண்களின் வீரமும்
லீலைகள் தான்.

08 November 2010

வறுமையும் அமெரிக்காவும்



பாவையர்  உடையில்  வறுமை
பள்ளியில்  கல்வி  வறுமை
படித்தோருக்கு வேலை வறுமை
பாதீட்டில்  மீதி வறுமை



வறுமை மிகவும் கொடியது இது ஆசியா போன்ற வறிய நாடுகளில் மட்டுமல்ல அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளையும் இது விட்டுவைக்கவில்லை

வறுமை என்பது, உணவுஉடைஉறைவிடம், பாதுகாப்பான குடிநீர்கல்விபெறும் வாய்ப்பு, பிற குடிமக்களிடம் மதிப்புப் பெறுதல் போன்றவை உட்பட்ட, வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிப்பவற்றை இழந்தநிலை ஆகும். பல நாடுகளில் முக்கியமாக வளர்ந்துவரும் நாடுகளில் வறுமை ஒழிப்பு என்பது ஒரு முக்கியமான இலக்காக இருந்துவருகிறது. வறுமைக்கான காரணம், அதன் விளைவுகள், அதனை அளப்பதற்கான வழிமுறைகள் போன்றவை தொடர்பான வாதங்கள், வறுமை ஒழிப்பைத் திட்டமிடுவதிலும், நடைமுறைப் படுத்துவதிலும் தாக்கத்தைக் கொண்டுள்ளன. இதனால் இவை, அனைத்துலக வளர்ச்சிபொது நிர்வாகம் ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளன.

வறுமையினால் ஏற்படும் வலி, துன்பம் என்பவை காரணமாக, வறுமை விரும்பத்தகாத ஒன்றாகவே கொள்ளப்படுகின்றது. சமயங்களும், பிறஅறநெறிக் கொள்கைகளும் வறுமையை இல்லாது ஒழிப்பதற்கான நடவடிக்கைகளைச் சிறப்பித்துக் கூறுகின்றன. என்னும், சில ஆன்மீகச்சூழல்களில் உலகப் பொருட்களைத் துறந்து பொருள்சார் வறுமை நிலையை ஏற்றுக்கொள்ளல் சிறப்பானதாகக் கருதப்படுவதும் உண்டு.


வறுமை தனிப்பட்டவர்களையோ அல்லது குழுக்களையோ பாதிக்கக்கூடும். இது வளர்ந்துவரும் நாடுகளில் மட்டுமன்றி வளர்ந்த நாடுகளிலும், வறுமை வீடின்மை போன்ற பல வகையான சமுதாயப் பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைகின்றது.
வாஷிங்டன்: உலகின் பணக்கார நாடு என்று சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வர்ணிக்கப்பட்ட அமெரிக்காவில் 7 பேரில் ஒருவர் வறுமையில் வாடுவதாக சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

கடந்த 2008-ம் ஆண்டு கணக்கெடுப்பில், 13.2 சதவீதம் பேர், அதாவது, 3 கோடியே 98 லட்சம்பேர் வறுமையில் வாழ்ந்து வருவது தெரிய வந்தது.

ஆனால், தற்போதைய கணக்கெடுப்பில், இந்த எண்ணிக்கை 4 கோடியே 36 லட்சமாக (14.3 சதவீதம்) உயர்ந்துள்ளது. இதன்மூலம், அமெரிக்க மக்கள் தொகையில், 7 பேரில் ஒருவர் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர்.

இன்னொரு பக்கம் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கையும் அங்கு அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பு கூறுகிறது. முன்பெல்லாம் பெரிய நகரங்களில் மட்டுமே பிச்சைக்காரர்கள் அதிகம் காணப்பட்டதாகவும், இப்போது சிறு நகரங்களிலும் பிச்சைக்காரர்கள் பெருகி விட்டதாகவும் அக்கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே அமெரிக்க எம்.பி.க்கள் வாங்குவதை கட்டாயம் ஆக்கும் 2 மசோதாக்கள், அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டன.......

31 October 2010

மரம் மனிதனுக்கு வரம்...



நமக்குள் உயிர் இருப்பதுபோல மரத்துக்கும் உயிர் உணர்வுகள் இருக்கிறது, அதாலதான்
மரம் உனக்கு நிழலாகிறது,
குடிக்க நீராகிறது,
குளிக்க கொட்டாகிறது,
இன்னும் 
குருவிக்கு கூடு,
மிருகத்துக்கு காடு,
மருந்துக்கு இலை, 
மனதுக்கு தென்றல், 
விருந்துண்ண பழம், 
விளையாட கிட்டிப்பொல் இன்னும் எத்தனை எண்ணவும் முடியாது! மண்ணில் நாம் பெற்ற இன்பம் மரங்கள் தந்த வரமல்லவா!

15 October 2010

சத்தி முழக்கம்....

அயிகிரி நந்தினி நந்தித மேதினி
விஸ்வ வினோதினி நந்தனுதே
கிரிவர விந்த்ய ஸிரோதி நிவாஸினி
விஷ்ணு விலாசினி ஜிஸ்துனுதே
பகவதி ஹே ஸிதிகண்ட குடும்பினி
பூரி குடும்பினி பூரி க்ருதே
ஜய ஜயஹே மஹிஷாசுரமர்த்தினி
ரம்ய கபர்த்தினி ஷைலஸுதே!

என் வலைப் பூக்களில் வலம் வரும் மண்வாசனை மாறாத பதிவுகளை ஊக்குவிக்கும் உங்கள் அனைவருhர்க்கும் எனது மனமார்ந்த நன்றிகலந்த வணக்கங்கள்.. இந்த புனித நவராத்திரி நாட்களை சிறப்பிக்கும் முகமாக மட்டக்களப்பு மாநகரமே விழாக்கோலம் பூணத் தொடங்கி விட்டது... எங்கள் தேனூர் அதற்கு விதிவிலக்கல்ல.. தேத்தாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்தில் நவராத்ரி பெருவிழா எடுப்பது வழக்கம், அதுபோல் படபத்திர காளி அன்னை ஆலயத்திலும் விழா நடைபெறுகிறது.. இவற்றை முன்னிட்டு தேத்ததத்தீவு இந்து இளைஞர் மன்றத்தினர் சக்தி முழக்கம் எனும் ஓர் இறுவட்டு சென்ற வருடம் வெளியிட்டு இருந்தனர்... அதில் ஓர் பாடலை இங்கு இடுகிறேன்.....


05 October 2010

களுகு மலைப் பத்து.

களுகு மலைப் பத்து இது கருத்துடைய சொத்து தொழுவதுக்கு முத்து இது கந்தனின் சித்து.. கதிர்காம் யாத்திரிகர்கள் இதை கைத்தடியாய் பிடித்து கந்தனருள் பெற்றதுதான் ஆயிரம்...  தேத்தாத்தீவு இந்து இளைஞர் மன்றத்தினர் இதனை பெருமையுடன் அளிக்கை செய்கின்றனர்.

01 October 2010

சிறுவர்கள் எமது எதிர்காலத்தின் நம்பிக்கைச் சொத்தாகும்

இன்றய சிறுவர்களே நாளைய தலைவர்கள் என்பதற்கு இலக்கணமாக பல வளர்முக மேற்கத்தய நாடுகளுக்கு உரித்தான சிறுவர்கள் மேதைகளாகவும், ஆய்வாளர்களாகவும் உருவாக்கப்பட்டு அவர்கள் தான் கணிசமான அளவு கீழைத்தேய நாடுகளை வழிநடத்தும் துர்ப்பாக்கிய நிலையில் இருப்பது வருத்தத்திற்கும் திருத்தத்திற்கும் உரியதாகும். சிறுவர்கள் சார்பாக இன்று உலகலாவிய ரீதியில் பெரும் முக்கியத்துவம் செலுத்தப்பட்டு வருவது அறியக்கிடக்கின்றது. அவர்களுக்கென்று புதிய சட்டங்கள், உரிமைகள் மற்றும் உரித்துடமைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் விசேடமாக ஒழுங்கு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் இவ்விடயம் சரியாக மக்களை சென்றடயவில்லை என்பதையே மேலைத்தேய நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது தரவுகள் வெளிக்காட்டுகின்றன.

சிறுவர்கள் எமதென்று எப்போதும் எழுவோம்...


போதுமே!
இளமையில் வறுமை
பாலியல் பரிதவிப்பு,
கூலிக்கு வேலை
பள்ளிக்கு வேலி,
பாசத்துக்கோ நாசம்,
விளையாடத் தடை,
விலைபோகும் நிலை,
பெற்றோரின் பிரிவு,
போதுமே!
சட்டங்கள் சாக்குப் பைக்குள்
உறையிட்டுத் தூங்கும்போது,
திட்டங்கள் போட்டு என்ன பயன்?
இது ஒன்னும்,
மொகஞ்சதரோ ஆராய்ச்சி இல்லை!
புதிதாய் கண்டறிய...
வீட்டுக்கு வீடு ரோட்டுக்கு ரோடு.....
நீதியின் கண்ணில் மிளகாய் தூவி!
அரங்கேறும்
துஸ்ப்பிரயோக நாடகம் தான்!
மலரா மொட்டுகள்
வாசன அறிய முன்னே,
உலர விடுவதுதான் நியாயமா?
ஆசியாவின் மூலைகள் எங்கும்
அளிக்கையாகும் லீலைகள்தான்...

திறந்த சிறையில்...
ஆயுட் கைதிகளாய்..
நிரபராதிகள் இங்கே!
ஞானிகள், விஞ்ஞானிகள்,
மன்னர்கள் மகாத்மாக்கள்,
எத்தனை எத்தனை...
ஓ! கடவுளே!
அத்தனையும்
கருவிலே கருக்கப்படும்
நரகத்தின் வீடா!
பேசிப் பேசி என்ன பயன்?
யோசிக்க வேண்டும்.....
சட்டங்களுக்கு உயிர் கொடுப்போம்
திட்டங்களை அமுலாக்குவோம்
கலங்கரை விளக்குகளை,
வாழவிடவோம்..
எல்லோரும் தொழுவோம்..
சிறுவர்கள் எமதென்று
எப்போதும் எழுவோம்....