ADS 468x60

09 November 2010

மது


மெய்யை உருக்கும்
நெருப்பு
மையல் கொண்டோரின்
விருப்பு
காசை கரியாக்க
கொழுத்த உரம்
வாழ்கை பின்னடையும்
வழுக்கு மரம்
பலவீனமானோர்
பக்கத்துணை
பருகுவோர்கு விலக்கும்
வெட்கத்தினை
நீராய் இருந்து
முள்ளாய் குத்தும் நெருஞ்சி

மடையர்களின் 
சிறைச்சாலை -இது
ஆக்குவதோ துன்பச்சோலை...

இன்றைய இளைஞர் யுவதிகள் மத்தியில் மது அருந்துதல், புகைத்தல் ஆகியன ஒரு பஷனாக மாறிவிட்ட நிலையில் விருந்துபசாரம் போன்ற களியாட்ட நிகழ்வுகளில் மதுபான வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றன.ஏதாவது கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு வருமாறு இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தால் வைன், பியர், பிஸ்கி, பிறண்டி வழங்கப்படுகின்றனவா என்று கேட்டுக்கொண்டே மேற்படி கொண்டாட்டங்களில் கலந்து கொள்கின்றனர்.
இவ்வாறு பலர் ஒன்றுகூடும் களியாட்ட நிகழ்வுகளில் மது அருந்துதல் என்பது சாதாரண நிகழ்வாகிவிட்டது என்பதுடன், மது அருந்தாது விடுபவர்களை பட்டிக்காடு என்று நோக்கும் நிலையும் வந்துவிட்டது.

0 comments:

Post a Comment