இது எனது பல்கலைக்காலத்தில் யாக்கப்பட்ட கவிதை.....
காற்றினில் பறந்து
பூக்களில் உரசி
தேனினைக் குடிக்க
வண்டுகள் செய்யும் சரசம்
லீலைகள்.....
நிலவினைத் தீண்டி
ஒளியினை மறைத்து
முழுமுகம் கரைத்து
முகவரி மாற்றும்
மேகங்கள் உன்னில்
மோகம் கொள்வதும்
லீலைகள் .......
நாங்களும்
மதுவினில் தோய்ந்து
மார்பினில் பாய்ந்து
கிளுகிளுப்பூட்டி
தீனிகள் தீர்த்தி
சில்மிசம் செய்வதும்
லீலைகள் .........
GH இன் ஓரங்களில்
சத்தமாய் காதலி
பெயரினைச் சொல்லியும் ,,
வெளிச்சங்கள் அணைய ,,
வசைபாடியும் ,,
வேலிகளை பயமுறுத்த,,
வெற்றுப் போத்தல்களை
சுக்குநூறாக்கும் .......
ஆண்களின் வீரமும்
லீலைகள் தான்.
0 comments:
Post a Comment