ADS 468x60

29 June 2017

மட்டக்களப்பில் கேடு விளைவிக்கும் புற்றுநோய்க்கு சூடு வைக்கும் கருவி அன்பளிப்பு..

"இலங்கையிலயே கிழக்கு மாகாணத்தில்தான் அதிகளவான புற்றுநோயளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்னும் சுகாதார அமைச்சின் அதிர்ச்சி தகவல் அனைவருக்கும் தெரிந்த விடயமே'" இருப்பினும் யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்களுக்குள் பாரிய உட்கட்டுமான வளர்ச்சிகள் ஏற்ப்பட்ட போதிலும் சுகாதாரம், வாழ்க்கைத்தர உயர்வு என்பன பெரிய அளவில் ஏற்படவில்லை என்பது கசப்பான உன்மை.

உலகில் வளர்ந்த நாடுகளில் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து காணப்படுவதற்கு அவர்களால் அனுபவிக்கப்படும் தரம் வாய்ந்த அடிப்படை வசதிகளே காரணங்களாகும். கடந்த யுத்த காலத்தில் குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழுகின்ற மக்கள் இடப்பெயர்வு, வாழ்வாதார இழப்பு, உயிர் இழப்புக்கள், காரணங்களாக தங்களது அடிப்படை வசதிகளைக்கூட அனுபவிக்க முடியாதவர்களாக இருந்து விட்டமை துரதிஸ்ட்டமே.

குறும்படத்தின் வெளியீட்டு நிகழ்வு..

ஜோயல் J.R  இன் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள  ''தேவதை Returns'' குறும்படத்தின்  வெளியீட்டு நிகழ்வு, நேற்று   25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கல்முனைநெற் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலை நல்லதம்பி மண்டபத்தில் சிறப்பாக  நடைபெற்றது.

திரு. சபா. சபேசன் தலைமையில் இடம்பெற்ற   இந் நிகழ்வில் என்னுடன் அதிதிகளாக மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் திரு. வீ.தவராசாவும், கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர்  ஆர். முரளீஸ்வரனும்  கலந்து கொண்டு வெளியீட்டு வைத்தனர்.

28 June 2017

எல்லைக் கிராமங்களை எடுத்தேத்துதல்- 40ம் கொலனி

கிழக்கிலங்கை இந்து சமூக அபிவிருத்தி சபையானது மற்றுமொரு தொகுதி இசைக்கருவிகளை 40 ஆம் கொலனியிலுள்ள வம்மியடியூற்று சிவசக்தி கலாமன்றத்திற்கு 26.06.2017ஆம் திகதியன்று வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் இந்த நிகழ்வை சிறப்பிக்கும் முகமாக பல கலையாற்றுகை நிகழ்வுகளையும் சிறுவர்கள் அரங்காற்றுகை செய்தனர். அந்தச் சிறுவர்களுக்கு செய்த சிறுவர்களுக்கு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

27 June 2017

சத்துணவுத் திட்ட மீளாய்வு- சுரவணையடியூற்று பாலா் பாடசாலை

கிழக்கிலங்கை இந்து சமூக அபிவிருத்தி சபையின் ஒருங்கிணைப்பில் Nick & Nelly foundation  நிதியுதவியுடன் சுமார் ஒரு மாத காலமாக ஆரம்பிக்கப்பட்ட பாலர் பாடசாலைக்கான சத்துணவு வழங்கும் திட்டம் நடைபெற்றுக் கொண்டிருப்பதை மீளாய்வு செய்யுமுகமாக இன்று பாலர் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோரகள்;, சங்கங்கள், கழகங்களின் பிரதிநிதிகள் போன்றோரைச் சந்தித்து இந்நிகழ்ச்சித் திட்டத்தின் குறை நிறைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. 

24 June 2017

தலைவர்களாக வரத் தகுதியானவர்கள்!

இந்த முகங்களில் நீங்கள் எதை படித்துக் கொள்ளுகிறீா்கள்! இவைகள் இலகுவில் ஏமாறக்கூடிய முகங்கள்! ஏங்கித் தவிக்கும் முகங்கள், பசியில் வாடிய முகங்கள், பாசத்துக்கு ஏங்கும் முகங்கள் இல்லலையா! ஆம், பாதுகாப்பால், பணத்தால், இடத்தால், வசதியால் கல்வியால் மிகவும் பின்தங்கிய குழந்தைகள், மிக்க நலிவுற்றவர்கள் எதிலும் இலகுவில் பாதிக்கப்படக்கூடியவர்கள்... இதனால்தான் இவா்களை இலவில் மதமாற்றிக் கொள்ளுகிறார்கள், திருமணம் செய்து இடையில் விட்டுச் செல்லுகிறார்கள், இவர்களது வியர்வை சிந்திய உற்பத்தியை கண்ணைப் பொத்தி களவாடுகிறார்கள், இவா்களது ஆட்டையும் மாட்டையும் அடாத விலைக்கு ஆட்டைபோடுகிறார்கள், அஞ்சிக்கும் பத்துக்கும் நிலத்தை சுவீகரிக்கிறார்கள் பாவம்.

21 June 2017

பெற்றவா்கள் எல்லாம் அப்பாக்கள்!

கூடு கட்டும் குருவி
வயலில் பாயும் அருவி
தோகை விரிக்கும் மயில்
தொடர்ந்து பாடும் குயில்

வண்டி இழுக்கும் காளை
பொதி சுமக்கும் கழுதை
நிழல் தரும் மரம்
நிலவினை தொட்டவர்
அத்தனையும் அப்பாக்கள் தான்

இருந்தும்,

16 June 2017

நஞ்சை உண்ணுகிறோம்!

எம்மைப் பொறுத்தளவில் உழவுத் தொழில் அல்லது விவசாயம்; என்பது உணவு மற்றும் பிற பயன்பாடுகளுக்காக சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துகொள்கிறான். 

நம்புங்கள் முருகன் நல்லவன் .


நான் சிறு வயதில் அப்பாவுடன் மாரிப்போக வேளாண்மை செய்வதன் நிமித்தம், ஆலயடி முன்மாாிக்குள்ள உழவுவதற்காக கலப்பையை கொழுவி இரண்டு வெள்ளை மாடுகளை விரட்டிக்கொண்டு மதிரங்கேட்டியை மரத்தில் வெட்டி எடுத்து, காலைவேளையில் கட்டோரமாக வில்லுக்குளம் நோக்கி நடந்த நாட்கள் ஞாபகம் வருது.