ADS 468x60

11 November 2010

மிலேனியம் அபிவிருத்தி இலக்கும் அனர்த்த இடர் தணிப்பும்.


அனர்த்த இடர் தணிப்பு என்பது அபிவிருத்தி செயற்பாடுகளில் ஒரு ஒருங்கிணைந்த பாகமாகும். இது மிலேனியம் அபிவிருத்தி இலக்கில் பரிந்துரைக்கப்பட்ட ஒன்றாகும். இவ் மிலேனியம் அபிவிருத்தி இலக்குக்கான பரிந்தரை 191 நாடுகளுக்குமான மனித அபிவிருத்திக்கு உதவும் வகையில் குறிப்பாக 2000ம் ஆண்டின் 08 மிலேனியம் அபிவிருத்தி இலக்குகள் முன்மொழியப்பட்டுள்ளன. இந்த 08 மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளும் 18 உப பிரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அது மேலும் இலக்குகளுககான 48 சுட்டிகளாக வகைப்படுத்தப் பட்டுள்ளமையும் தெழிவாக உள்ளது.

இவ் மிலேனியம் அபிவிருத்தி இலக்கானது அபிவிருத்தி மற்றும் அனர்த்த இடர் தணிப்பு கொள்கைகளுக்கிடையிலான ஒரு குறுக்கு வெட்டாகவே இருக்கின்றது. இவை ஒவ்வொன்றும் நடைமுறைச் செயற்ப்பாட்டுக்கான விசேட குறிகாட்டியாகவும், குறிக்கோளாகவும் பின்னப்பட்டிருக்கின்றன. இந்த இலக்கினை அடைந்து கொள்வதில் அனைத்து ஐ.நா. சபையில் ஒப்பமிட்டுள்ள நாடுகளும் மற்றும் நிதி உதவியாளர்களும் அவர்களது செயற்பாட்டினை முன்னெடுத்து வருவதனைக் காணலாம்.

விசேடமாக மிலேனியம் முன்மொழிவில் நான்காவது சரத்தில் இயற்கை அனர்த்தம் மூலமாக வருகின்ற பொருளாதார அபிவிருத்திக்கான இடர்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. இது எமது ' எதிர்காலத்தினைப் பாதுகாத்தல்' எனும் தலைப்பில் வருகின்றது. இத்தலைப்பினுள் ஒரு விடயம் குறிப்பிடப்படுகின்றது. அதாவது இயற்கை மற்றும் மனிதர்கள் மூலம் வருகின்ற அனர்த்தங்கள் ஊடாக ஏற்ப்படுகின்ற தாக்கங்கள், அதன் விளைவுகள் என்பனவற்றைக் குறைப்பதற்க்கான கூட்டு முயற்சியினை வலுப்படுத்தல் பற்றி சொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இயற்கை அனர்த்தமானது ஒரு சமுகத்தில் அல்லது ஒரு சமுதாயத்தில் நிகழக்கூடிய அபத்தான நிகழ்வுகளை நன்கு விளங்கி இருக்கும் போது அல்லது தெரியாமல் இருக்கும்போது இடம்பெறுகின்றது. உதாரணமாக மிகக்கடுமையான மழை, அதிக உஸ்னம், அல்லது வேகமான காற்று மற்றும் நில அதிர்வு என்பனவற்றைக் குறிப்பிடலாம். மற்றது மக்கள் அனர்த்தம் மூலமான விளைவுகளில் இரந்து மீழுதல் அதன் ஆபத்துகளை உணர்ந்து கொள்ளாமல் இருக்கும் போது அனர்த்தம் ஏற்படுகின்றது. குறிப்பாக பொதுவாக இடம்பெறுகின்ற இயற்கை அனர்த்தத்தின் மூலம் வருகின்ற நலிவுற்றோரின் தொகை அற்றும் அதன் மூலமாக வரகின்ற ஆபத்து மனிதனுடைய செயற்ப்பாட்டிலே தங்கியுள்ளது.

இனனொரு வகையில் கூறப்பொனால் இயற்கை அனர்த்த மூலமான அதன் தாக்கம், அதன் அளவு என்பனவற்றினை குறைக்கும் செயற்ப்பாடுகள் இவைகள் அபிவிருத்திக்கான பாரிய சவாலாகவே இருக்கின்றது. இது ஒட்டு மொத்தமான இடர்களை மற்றும் அதன் மூலம் மனிதர்கள் நலிவுறும் தன்மை என்பனவற்றை ஏற்படுத்த ஏதுவாக இருக்கின்றது. இதுதான் அதிகப்படியான அனர்த்தத்தினை(pசநகபைரசந னளையளவநச) உண்டு பண்ணுகிறது.

ஓட்டு மொத்த அனர்த்தத்துக்குமான இடர் தணிப்பு, அதே போல் அனர்த்தத்திற்கு பின்னர் வரும் பாதிக்கப்பட்டவர்களுக்கான சமமான வளப்பகிர்வு என்பன ஒரு நாட்டின் அபிவிருத்திப்பாதையில் பாரிய தடைக்கற்களாகவே இருந்து வருகின்நறை குறிப்பிடத்தக்கது. இயற்கை அனர்த்தற்கள் அபிவிருத்தி அடைவுகளை அழிவுபடுத்துகின்ற போதும், மறுபக்கம் அபிவிருத்திச் செயற்பாடுகள் அதன்பாட்டுக்கே செயற்படுவதனையும் காணக்கூடியதாய் இருக்கின்றது.

முன்பு நாம் பார்த்த உதாரணற்களுக்கு அமைவாக குறிப்பாக ஒரு அனர்த்த இடர்தணிப்பு இல்லாத பாடசாலை கட்டிடத்தினை எடுத்துக் கொள்வோமெனில், ஒரு அதிர்வு ஏற்ப்படும்போது, இது அபிவிருத்தியினை இல்லாமல் செய்கின்ற அனர்த்த இடருக்கான உதாரணமோ, அல்லது பொருத்தமற்ற அபிவிருத்தி மூலம் விளைகின்ற அதிகப்படியான அனர்த்தமா? என்ற கேள்வி எழுகின்றது.

மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளுக்கான திட்டங்களை எடுத்துக்கொண்டால், இவை முன்னூiமை அடிப்படையில் அமைகின்றது. வெளிப்படையில் பார்ப்போமானால், இந்த இலக்குகள் அனைத்தும் மனிதன் நலிவுறும் தன்மையை இயற்கை அனர்த்தங்களின்போது குறைப்பதனையே நோக்காக கொண்டுள்ளது. இச்செயற்ப்பாடுகள், இலக்குகள் என்பன அனர்த்தங்கள் மூலமான பாதிப்பக்களை அதிகரிக்காமல் குறைப்பதற்கு தீர்மானங்களை மேற்கொள்ளும். உன்மையில் பாடசாலை கட்டிவிட்டால் அது போதாது அது நிலைத்திரக்கக்கூடிய, அதேவேளை நீண்ட நாள் அபிவிருத்தியினை மையமாகக் கொண்டதாக ஒர் அனர்த்தத்தினை தடை செய்யக்கூடிய, மக்களின் அனர்த்த முன் அயத்தத்திற்கு பொருத்தமான கட்டிடங்க்ள அமைவதையே இவ் இலக்குகள் தீர்மானிக்கும். 

மிலேனியம் அபிவிருத்தி இலக்கானது இரு வகையில் அமுல்படுத்தப்படுகின்றது: ஒன்று மிலேனியம் அபிவிருத்தி இலக்கினை அடைவதற்து வழிப்படுத்தக்கூடிய அபிவிருத்தி திட்டமிடல்களை குறிக்கினறது. மற்றது நடைமுறையில் வருகின்ற ஒட்டுமொத்த அனர்த்த இடர்களை தடுக்கக்கூடிய அபிவிருத்தி செயற்ப்படுத்தகையைக் குறிக்கின்றது. இவ்வாறு இல்லாவிடின் எல்லா அபிவிருத்திச் செயற்பாடுகளிலும் ஒரு பிரதான காரணியாக இவ் அனர்த்த இடர் அமைந்திருக்கும். இது நன்கு நடைபெறக்கூடிய பொருளாதார , சமுக அபிவிருத்தியில் தலைகீழான மாற்றத்தினையே கொண்டு வரும். இந்த மிலேனியம் அபிவிருத்தி இலக்கினை அடைவதற்கான பொறுப்புணர்சி ஒவ்வொரு தனிநாட்டிலேயுமே தங்கி இருக்கின்றது.

21ம் நூற்றாண்டுக்கான வலுவான உறுதிவாய்ந்த சர்வதேச ரீதியான மிலேனியம் பட்டயம் தயார் செய்யப்பட்டுள்ளது. எடடு வகையான அபிவிருத்தி சார்ந்த இலக்குகள் மிலேனியம் அபிவிருத்தி இலக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ் எட்டு குறிக்கோள்களிலும் அனர்த்த இடர் தணிப்பு பற்றி கூடியளவு கவனம் செலுத்தப்பட்டள்ளது குறிப்பிடத்தக்கது.

1. கொடிய வறுமை பசி என்பனவற்றை இல்லாமல் செய்தல்.
அனர்த்த இடர் சுட்டிக்காட்டியின் தரவடிப்படையில் பார்க்கும்போது இயற்கை அனர்த்தம் மூலம் ஏற்ப்படும் நலிவுறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் வருமானம் வறுமை என்பன ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டுள்ளது.

வெள்ளம், வரட்சி இவற்றுடன் சேர்ந்து மனிதர்களால் உருவாக்கப்படும் அனர்த்தங்கள் 2015இல் எட்ட இருக்கும் மிலேனியம் அபிவிருத்தி இலக்கினை குன்றச் செய்துவிடும். குறிப்பாக 2004 இல் இடம் பெற்ற சுனாமி அனர்த்தம் மூலம் பாதிக்கப்பட்ட 30 தொடங்கி 50 வீதமான மக்கள் பட்டினிச் சாவை எதிர்கொள்வது அதிகரித்து வருகிறதென அறிக்கை வெளியிட்டுள்ளது

2. அனைவரும் ஆரம்பக் கல்வியை அடையச் செய்தல்.
உலகலாவிய ரீதியில் ஏற்ப்படுகின்ற அனர்த்தங்கள் கல்வியின் அடைவுமட்டததினை பின்தள்ளிவிடுகின்றது குறிப்பாக உட்கட்டுமானததினை சிதைவடையச் செய்வதுடன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உயிர்களை இழக்கின்றனர். 2001ம் ஆண்டு குஜராத்தில் ஏற்ப்பட்ட நிலநடுக்கம் காரணமாக 1359 ஆரம்பப் பாடசாலைகள், 992 உயர்தரப் பாடசாலைகள் முற்றாக அழிந்துபோனமை குறிப்பிடத்தக்கது.

3. பால் நிலை சமத்துவத்தினை ஏற்ப்படுத்ததலும் பெண்களுக்கான வலுவூட்டலும்.
அனர்தங்களின்போது மிக மோசமாக பாதிக்கப்படுவது அல்லது இலகுவில் நலிவுறுவது பெண்கள் ஆகும். இதனால் அவர்களது வேலைப்பழு அதிகரிப்பதோடு குடும்பச் சுமையும் அதிகரிக்கின்றது. ஆத்துடன் துஸ்ப்பிரயோகங்களுக்கு ஆளாகும் அளவும் அதிகரிக்கின்றது.

4. பிறப்பிலே இறக்கும் குழந்தைகளின் அளவினை குறைத்தல்.
சுhதாரண இறப்புடன் ஒப்பிடுகையில் அனர்த்தங்களின் போது இறக்கின்றவர்கள் மிக அதிகமாகும். 1971 இல் வங்களாதேசில் ஏற்ப்பட்ட புயல் அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டோர் 10 வயதுக்கு குறைந்த சிறுவர்களாகும்.

5. கற்பினித் தாய்மாரின் சுகாதார விருத்தி
குறிப்பாக கற்பினித்தாய்மார்கள் மற்றும் இளம் தாய்மார்கள் அனர்த்தங்களின்போது பாதிக்கப்படும் நலிவுற்றவர்களாக இருக்கின்றனர். 40000 கற்பனித்தாய்மார்கள் பாகிஸ்த்தானில் 2005இல் ஏற்ப்பட்ட நில நடுக்கத்தின்போது பாதிப்படைந்திருந்தனர் நலிவு நிலையிலுள்ள கற்பனித்தாய்மார்களே அனர்த்தங்களின்போது கூடியளவு ஆபத்தினை எதிர்கொள்கின்றனர். ஊதாரணமாக குறைமாத பிரசவம், நிறை குறைந்த குழந்தைப் பிரசவம்  அத்துடன் பிறந்த உடன் இறக்கின்ற குழந்தைகள். இவையனைத்தும் அனர்த்தங்களின் போதான நெருக்கடியான நிலமைகளிலேயே ஏற்படுகின்றன.

6. HIV, AIDS,  மலேரியா மற்றும் ஏனைய தொற்று நோய்களை குறைத்தல்.
ஆனர்த்தங்கள் பொதுவாக வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ உட்கட்டுமானங்களை எல்லாம் வெகுவாகப் பாதிக்கின்றது. ஆத்துடன் தொற்று நோய்களான மலேரியா, டெங்கு, வயிற்றோட்டம் என்பன அனர்த்தங்களின்போது இரட்டிப்பாக பரவி விடுகின்றது. றுர்ழு இன் தரவுகளின் அடிப்படையில் 2004இல் வங்களாதேசில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குக்கு பின்னர் கிட்டத்தட்ட 17000 பொதுமக்கள் வயிற்றோட்டத்தினால் பாதிக்கப்பட்டனர்.

அதேபோன்று HIV தொற்றும் அனர்த்த காலங்களில் மிக வேகமாக பரவுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அனர்த்தப் பகுதிகளில் பணிபுரிபவர்களின் பாலியல் நடத்தைகள் மற்றும் பெண்களின் வறுமை நிலமை காரணமாக பாலியல் தொழிலில் ஈடுபடல் என்பனவற்றினால் இத்தொற்றுகள் பரவுகின்றன.

7. சுற்றுச்சூழல் நிலைத்திருத்தலை உறுதிப்படுத்தல்.
உலகிலே மிக முக்கியமான வளங்களான பயிர்ச்செய்கை நிலங்கள், காடு, பெறுமதி மிக்க தாவரங்கள் மற்றும் இதர இயற்கை வளங்கள் எல்லாம் அனர்த்தங்களின்போது மிக மோசமாக அழிந்து விடுகின்றது. இவ்வாறு அழிவடைகின்ற வளங்களை குறுங்காலத்தில் மீட்டெடுத்தல் என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும்.
நாகலாந்தில் உள்ள மாயோ பட்டினத்தில் 2004 இல் ஒரு பாரிய மண்சரிவு ஏற்ப்பட்டது. ஆதில் 80 வீடுகள் சேதமடைந்ததுடன் பாரிய வீதிகளும் மோசமாக பாதிக்கப்பட்டது. இதில் 38,600 க்கும் அதிகமான நீர் நிலைகள் அழிந்து போனது குறிப்பிடத்தக்கது.

8. அபிவிருத்திக்கான உலக நட்புறவை கட்டியெழுப்புதல்.
அனர்த்தங்களின் போது வளங்கப்படுகின்ற உதவித் தொகுதிகளில் இருந்து பெரியதொரு வளப் பகுதியினை நிவாரணம் மற்றும் மீள் கட்டுமானம் போன்றவற்றுக்கு மாற்றீடு செய்கின்றனர். சிறிய நாடுகளின் பொருளாதாரங்கள் மிகவும் இலகுவில் இவ்வனர்த்தங்களின்போது முற்றாகப் பாதிப்படைகின்றன. குறிப்பாக இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் மாலைதீவு போன்ற நாடுகளுக்கு சுனாமி அனர்த்தங்களின்போது நிவாரணக் கடன் உதவியாக 23.1 பில்லியன் டொலர் தொகையை செல்வந்த நாடுகள் மற்றும் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றன வளங்கி இருந்தன.

0 comments:

Post a Comment