ADS 468x60

10 November 2010

வசந்த காலப் பறவைகள்..


பூமியில் பிறந்தோம்
உறவுகளில்,,,
குடும்பங்களையும் தாண்டி
இரத்த உறவிலும் மெத்தமாய்
தூரங்களைத் தொலைத்து....
சாதி மதங்கள்..
போட்ட வேலிகளைப்பிரித்துவிட்டு.....

ஒரு உணவுப் பொதி- அதில்
பல கரங்கள்
ஒரு பால் பாணம் -அதில்
பல உறிஞ்சல்கள்
ஒரு கட்டில்- அதில்
பல தலைகள்.......

ஒரு சோப்பு – அதில்
பலர் குளிப்பு
ஒரு ஜோக்கு – அதில்
பல புன்னகைச் சிதறல்கள்
ஒரு சோகம் -அதில்
பலர் கண்ணீர்த் துளிகள்......

ஒரு காதல் -அதில்
பல மோதல்கள்
ஒரு சண்டை –அதில்
பல சமாதானங்கள்.......

ஒ பறவைகளே!!!
இதமான காற்றுடன்
ரிதமான ஒலியுடன்
தாமரைகளின் புன்னகை
பூக்களின் நடுவே..
ஒரே குளத்தில்
ஒரே குதூகலத்துடன்.....

இன்று நாங்களும்
பல்கலைக்கழகம் எனும்
பாலாவிக் குளத்தில்
வசந்த காலப் பறவைகள்
நாளை????????????????????

0 comments:

Post a Comment