நொரு.... நொறு........
சடார்..... புடார்......
சட்டிகள் உடையும்
சத்தம்!!
கா...கூகூகூகூ.....
கீகீ...கே..கே...
விச வார்த்தைகள்
சூழலை சுடுகிறது..
வரார்... வரார்....
சரார்.... புரார்.....
பானையில் ஒட்டிய சோறு
குடிச்ச வாய்கு.....
பட... பட...
பட... பட....
பயத்தில்! அணைகிறது விளக்கு!
அவளது கல்வியைப்போல்!!!...
பிள்ள... பிள்ள...
பிள்ள... பிள்ள....
அம்மா தட்டினாள்,
அப்பா வீசிய
சோற்றுப் பருக்கையுடன்....
அப்போதுதான் பார்த்தேன்,
அவளின் கன்னம் சிவந்திருந்தது!
எமது வறுமையைப்போல்!!!
.
0 comments:
Post a Comment