ADS 468x60

29 October 2019

இருவயது உலக ஆசான்- சுஜித்

என்ன வளம் திருநாட்டில் இல்லை
இந்தியாவே நாசாவின் பிள்ளை
உலகிற்கு உணவூட்டும் நாடு
ஊiமையும பேசிய இறை வீடு

விஞ்ஞானமும் அதை மிஞ்சிய மெய்ஞானமும்
அஞ்ஞானம் அகற்ற அருகதையான சொத்து
இருந்தும் பிள்ளையை எடுத்தென்ன செத்து

தீபாவளிகூட உன்னால் தெரியாமல் போனதடா
தேம்பி அழுதழுது உயிர் தேய்ந்து மாயுதடா

ஒற்றை உயிரை காப்பாற்ற முடியாத
வல்லரசு பலத்தையெல்லாம்
பிரபஞ்ச கண்ணில் நிறுத்தி
இரண்டு வயதிலேயே
உலகத்துக்கு ஞானப்பால் தந்த அப்பன்- இனி
உன்னைப் போல் குழந்தையை
கொல்லாமல் காக்கும் வெப்பன்

நீ இன்று உலகத்தாய்மாரின் பிள்ளை
இன்றோடு அழியட்டும் அறியாமைத் தொல்லை
மகனே உன் கதறல் மனது மறக்குதில்லை
நீ மறைந்தாலும் உன்துயர் இன்னும் துறக்கவில்லை

உன் ஆத்மா இத்தனை பேரின்
வேண்டுதலில் நிச்சயம் அமைதியின்
உலகில் நிலைத்திருக்கும்

சாந்தி சாந்தி சாந்தி

0 comments:

Post a Comment