ADS 468x60

25 March 2018

இலங்கையில் ஆறாவது தமிழ் முழுநீளத் திரைப்படம் மட்டக்களப்பில் வெளியீடு!

தமிழில் இலங்கைத் சினிமாத்துறை பெரிதாக வளர்சி பெறவில்லை காரணம் இந்திய சினிமாக்களின் செல்வாக்கு மற்றும் அதனுடன் போட்டிபோட முடியாத நிலை. ஆதனால் ஒரு சில கலைப்படைப்புகள் மாத்திரம் வெளிவந்துகொண்டிருந்தாலும் அவை கோலோச்ச
வில்லை, பிரகாசிக்கவில்லை. அந்த நிலையில் வெறும் ஐந்து திரைப்படங்களே கடந்த முப்பது ஆண்டுகளில் இலங்கையில் தமிழில் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

18 March 2018

எல்லைகளில் பிள்ளைகளின் நிலை- கவலைக்கிடமாகும் போஷாக்கும் கரம்கொடுக்கும் திட்டமும்

சிறுவர்களிடையே போஷாக்கின்மை எமது மாவட்டத்தின் பாரிய சவாலாக இருந்து வருகின்றது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ள உண்மை. இது இடை குறைந்த பிள்ளைகளை எமது கிராமப்புறங்களில் அதிகரித்துக் கொண்டுள்ளதுடன் அவர்களது போஷாக்கு மட்டம், கல்வி என்பனவற்றில் முன்னேற முடியாத நிலையினையும் உருவாக்கியுள்ளது. எல்லா வகையிலும் பின்தங்கிய எமது மக்களிடையே இவ்வாறான குழந்தைகளை இனங்கண்டு அவர்களுக்கு உதவுகின்ற திட்டங்கள் மந்த கதியிலேயே எடுத்து வரப்படுவது அனைவரும் அறிந்ததே.

27 January 2018

புதிய மாற்றம்!

காக்காச்சிவட்டை அறநெறி மாணவர்களுக்கு அறநெறி சார்ந்த போட்டிகளின் பின் சான்றிதழ் வழங்குதலும் ஊக்குவித்தலும் இடம்பெறும் தருணம்!

21 January 2018

நீரோடும் நாட்டில் மீன்பாடக் கேட்டு நெல்லாடும் பூமியிது!



இந்தப்பாடல் என்னால் இற்றைக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டு பெரும்பாலும் அனைவராலும் அறியப்பட்ட பாடல். இப்போது இந்தப்பாடலுக்கான இசையை செல்வன் மனோ யோகராஜ் அவர்களால் அமெரிக்காவில் இருந்து அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அவருக்கு எனது மனம் நிறைந்த நன்றிகள்.

06 January 2018

அடையாளங்கள் நம்கையை விட்டுப்போகாமல் கட்டிக்காப்பது நமது கையில்தான் உள்ளது.

நமது பாரம்பரியத்தினை போற்றும் விதமாகவும் நினைவூட்டும் விதமாகவும் சர்வதேச வேஷ்டி தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. எமது தமிழர்கள் சாதி மதம் கடந்து அவர்களது அடையாளமாக ஆண்கள் அணிய விரும்புவது வேஷ்டியைத்தான். ஆண்களின் கம்பீரத்துக்கு அடையாளமாகவும் நமது கலாசாரத்துக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்வது இந்த வேஷ்டிதான். நமது  தட்ப்ப வெட்ப நிலைக்கு 100 சதவிகிதம் பொருத்தமானதும் வேஷ்டிதான்.

தமிழர்களின் பாரம்பரிய அடையாளச் சின்னமாகத் திகழும் உணர்வுமிக்க ஆடையான இந்த வெண்ணியற ஆடை வேஷ்டியை உடுத்துக்கொண்டு செல்லும்போது இனம்தெரியாத ஆழுமைத் தோற்றமும் கம்பீரமும் தானாகவே வந்துவிடுகின்றது. வேஷ்டி உடுத்துபவர்களின் மனசி நேர்மையாகவும், தூய்மையானதாகவும் இருக்கும் என்பதுதான் எமது மூதாதையர்களின் நம்பிக்கை. அது இப்போது இருக்கிறதா இல்லையா என என்னிடம் கேட்காதீர்கள்.

04 January 2018

மட்டக்களப்புக்கு வாங்க- சும்மா மனசு மகிழ்ந்து போங்க!!


வாவி வளைந்து ஓட
வரும் மீன்கள் விளையாடி
கூவி குரவைபோட்டு
கூடி நல்ல பாட்டிசைக்கும்
மட்டக்களப்புக்கு வாங்க- சும்மா
மனசு மகிழ்ந்து போங்க

03 January 2018

ஓன்றுபட்டால் வென்றிடலாம் தோழா!

ஓன்றுபட்டால் வென்றிடலாம் தோழா- நீயும்
உணா்வில்லாமல் ஒதுங்குகின்ற ஆளா
ஏங்கித் தவிக்கும் எம் இனத்தை
எழுச்சி பெற எழுந்து வந்து
வாக்களிப்பை கையிலெடு தோழா ஓகோ

02 January 2018

மீண்டும் எதற்கு வந்தீங்க! எம்மை ஆண்டு என்னத்த தந்தீங்க!

பாரு மகனே பாரு- இங்கு
பாழாப் போகுது ஊரு
வேறு ஒருவர் ஆழக் கொடுத்து
வேதனை தந்தது யாரு!
வேதனை தந்தது யாரு!

பேசிப் பேசி காலங்கழித்து
வீதியில் எறிந்த யாரு- எமை
பேதையாக்கி பாதையெல்லாம்
போதை வளர்த்த யாரு
மீண்டும் எதற்கு வந்தீங்க- எம்மை
ஆண்டு என்னத்த தந்தீங்க
கட்சி பார்த்து களைத்த எமக்கு என்றும்
காரியம் செய்திடும் ஆள்வேண்டும்