நான் இன்று உங்கள் முன் நிற்பது, மனித வரலாற்றின் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றின் அழியாத வடுக்களையும், அதன் ஆறாத காயங்களையும் உங்கள் மனசாட்சியில் பதிய வைப்பதற்காகவே. இவற்றையெல்லாம் பார்த்துவிட்டு எப்படி கடந்துசெல்வது எனத் தெரியவில்லை. மனித வாழ்வின் துயரமான பக்கங்களில், வார்த்தைகளால் விவரிக்க முடியாத வலிகளும், காலத்தால் அழியாத சோகங்களும் புதைந்து கிடக்கின்றன. அப்படியானதோர் துயரப் பக்கம்தான் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள செம்மணி என்ற நிலப்பரப்பு.
அங்கே கண்டெடுக்கப்பட்ட, ஒரு குழந்தையின் பொம்மை – வெறும் விளையாட்டுக் கருவியல்ல அது. அது கண் விழித்த சாட்சியாக நின்று, செம்மணியின் ஆழங்களில் புதைந்துள்ள ஒரு சோகக் கதையை உலகுக்கு உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறது. இந்தப் பொம்மை உருக்குலைந்த நிலையில், மண்ணின் நிறம் பூசி, ஒருபுறம் நீலமும் மறுபுறம் செம்மண்ணின் தடயங்களுமாய் கிடக்கிறது. ஆனால், அதன்கண்களைப் பாருங்கள்... அவை இன்றும் திறந்திருக்கின்றன.





.jpg)


