மனசு உடைஞ்சு போனது
மாதா மறைந்த சேதி கேட்டு
கல்லை உடைத்து உடைத்து
சிலைகள் படைத்து படைத்து
கற்பக் கிரகங்களில் காட்சி
கரங்கள் குவிக்க வைப்பதில்லையா!
நீயும் ஒரு அழகிய சிலை!
துன்பங்களைச் சுமப்பதே- பிறர்க்கு
சுகம் என்றெண்ணி
சிலுவையில் முட்கிரீடம்
சிரசில் போட்டதை
தாங்கிக் கொண்டே
பிறருக்காக வாழ்ந்தவர்
உலகுக்கு கடவுளானார்
நீ ஒரு தெய்வப்பிறவி
என் வலி தாங்கொணாது
உன் வலியாய்
உள்ளெடுத்து எனை மீட்க
நீ சிந்திய கண்ணீரால்
நான் பல முறை மீண்டேன்
எனக்காக அழுத மனிதப்பிறவி
எதை மறந்தாலும் மறக்கமுடியாத
சதைப் பிண்டமான
இந்தப் பாழுடல் மாழும்வரை
உனைப் பாதுகாக்கும்
இறைவனை தொழும்....
தையிரியம் அது நீ
சொல்லித் தந்தவைதான்
அரவணைப்பு அது நீ
பழக்கிவைத்தவைதான்
கனிவு அது உன்
வாய் வார்த்தை
துணிவு அது உன்
அறிவு, தெய்வ நம்பிக்கை
அந்த நம்பிக்கையை- யாரையும்
உன்னை விட எடுக்கவில்லை
இறைவன் பரீட்சிக்க!
தையிரியம் கொள்
நீயே உனக்கு என்றும் நிகரானவள்!
0 comments:
Post a Comment