கோவிட்-19 தொற்றுநோய் உலகளவில் கல்வி முறைகளை பாதித்துள்ளது, இது பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்விக் கல்லூரிகளை மூடுவதற்கு வழிவகுத்தது. கோவிட்-19 இன் பரவலைக் குறைக்கும் முயற்சியில் உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான அரசாங்கங்கள் கல்வி நிறுவனங்களை தற்காலிகமாக மூட முடிவு செய்தன என்பது நாம் அறிந்ததே.
அந்தவகையில், மிகமுக்கியமாக இந்த வளர்ந்து வருகின்ற நாடுகளில் அதிலும் எம்போன்ற யுத்தத்தினால் மற்றும் வேறுபல அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள பிராந்தியங்களுக்குள் ஏற்கனவே கல்வி பின்னடைந்துள்ள இந்தச் சூழலில், இது நமக்கு விழுந்த பேரிடியாகவே பார்க்கப்படுகின்றது.
இவற்றையெல்லாம் வெற்றிகொள்ளும் மனப்பாங்கை நாம் அனைவரும் சிந்தித்து வளர்த்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் நாம் உண்மையான வெற்றியாளர்களாக கருதப்படுவோம். இதற்கு அனைத்து வகையான சுகாதார பாதுகாப்பு முறைகளையும் நாம் நிச்சயம் கடைப்பிடித்து வாழப்பழகவேண்டும்.