ADS 468x60

13 November 2020

இப்படித்தான் இம்முறை தீபவளி இருக்கவேண்டும்!

நண்பர்கள் மற்றும் வெள்ளிச்சரம் வாசகர்கள் அனைவருக்கும் முதலில் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்! 

இது பண்டிகைக்காலம் அதனால் நீங்கள் தீபாவளி கொள்வனவு செய்ய துணிக்கடை, மளிகைக்கடை, நகைக்கடை செல்லும்போது கொரோனா இன்னும் நம்மைவிட்டு போகவில்லை என்பதை நினைவுபடுத்தி கொண்டு தனிமனித, சமுக இடைவெளியைக் கட்டாயம் கடைப் பிடியுங்கள். கடையில் மற்றவர்கள் மறந்தாலும் வாங்கச் செல்லும் நாம் மறக்கவே கூடாது.

நீங்கள் செல்லும்போது மாஸ்க் கட்டாயம் அணிந்து கொள்ளுங்கள். எந்தக் கடையில் பொருள்கள் வாங்கச் சென்றாலும், கடைக்குள் செல்வதற்கு முன்பும், வெளியே வரும்போதும் கட்டாயம் சானிடைசரால் கையை சுத்தம் செய்ய தவறாதீர்கள்.

குறிப்பாக வயதானவர்களையும், குழந்தைகளையும் அழைத்துச் செல்லாமல் அவர்களுக்கு தேவையானவற்றையும் நீங்களே வாங்குங்கள்.

உங்களுக்கு நன்கு தெரியும் இது கொரோனா காலம். ஆதலால் தீபாவளி நேரத்தில் பலகாரங்களை, இனிப்புப் பண்டங்களை வெளியே ஓர்டர் செய்யாமல்; முடிந்த அளவு நீங்களே வீட்டில் தயார் செய்யுங்கள். கொரோனா எங்கே யாருக்கு இருக்குமோ என்பதால் வீட்டிலேயே செய்வது நல்லது. குறைவான செலவில் நிறைய பலகாரங்கள், இனிப்புப் பண்டங்கள் கிடைக்கும்.

ஆகவே தீபாவளியை கொரோனாவோடு கொண்டாட வேண்டி இருப்பதால் இந்த முன்னெச்சரிக்கைகள் மிகமிக அவசியம்.

இவைதவிர தீபாவளி பண்டிகை கொண்டாடத்தின் போது கடைபிடிக்க வேண்டிய சுகாதார விதிமுறைகள் தொடர்பாக இந்து மத தலைவர்கள் மற்றும் சமூகத் தலைவர்களை அறிவூட்டுவதற்கான சுகாதார அமைச்சின் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது உங்களுக்குத் தெரியுமா?

இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டங்கள்; இந்து மத சமூகத்திற்கிடையே கொவிட் - 19 வைரஸ் பரவுவதை தடுப்பது தொடர்பாக அதிக அவதானம் செலுத்தி அந்த பண்டிகை கொண்டாட வேண்டிய வழிமுறைகள் குறித்து இந்து மத தலைவர்களுக்கும் சமூகத் தலைவர்கள் உட்பட இந்து மத மக்களுக்கும் சுகாதார அமைச்சினால் ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும்; வழங்குகிறது.

அதன்படி, நாட்டில் தற்போது கொவிட் - 19 பரவும் சூழ்நிலையில் நவம்பர் 14 அன்று கொண்டாடப்படவுள்ள தீபாவளியை பின்வரும் சுகாதார நடைமுறைகளையும் ஆலோசனைகளையும் பின்பற்றி கொண்டாமாறு சுகாதார அமைச்சு இந்து மத சமூகத்திடம் கேட்டுக்கொள்கிறது.

• தீபாவளி பண்டிகையின் போது நல்ல மனநிலையை பேணுவதற்கும், பண்டிகை கொண்டாடத்தின் போது எந்தவொரு இந்து மக்களும்; வைரஸ் தொற்றுக்கு ஆலாகாமல் இருத்தல் வேண்டும்.

• மக்கள் ஒன்றுகூடாமல் தற்போதுள்ள இடங்களிலேயே தீபாளியை கொண்டாடுங்கள். கொழும்பு, கம்பஹா, களுத்துறை போன்ற அதி அவதானத்திற்குரிய பிரதேசங்களில் இருந்து உங்கள் ஊரில் உங்களின் அன்புக்குரியவர்களுக்கு நோய் பரவுவதை தடுத்தல் வேண்டும்.

• தூர பயணங்களை தவிர்த்து வீடுகளிலேயே தீபாவளியை கொண்டாட வேண்டும்.

• குடும்ப உறுப்பினர்களுக்கு, நண்பர்களுக்கு மற்றும் உறவினர்களுக்கு தொலைபேசியில் வாழ்த்துக்களை தெரிவிக்கவும்.

• கோயில்களில், சமூகத்தில் அல்லது தோட்டப்புறங்களில் மத கொண்டாட்டங்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

• உடனே தீப்பற்றக்கூடிய சிறிதளவு அற்ககோல் அடங்கிய கை கழுவும் திரவங்களை பயன்படுத்திவிட்டு ஒளி விளக்குகளை ஓளிரச்செய்வதை தவிர்க்கவும். மத செயற்பாடுகளுக்கு முன்னரும் பின்னரும் சவர்க்காரமிட்டு கைகளை கழுவவும்.

• கைகுலுக்கி வாழ்த்து தெரிவிப்பதை தவிர்த்து ´ஆயுபோவன்ஃவணக்கம்´ கூறி அல்லது வேறு வழியில் வாழ்த்துவது பொருத்தமானதாகும்.

• இந்த பண்டிகையின் போது மதுபானம் மற்றும் புகையிலை பாவிப்பதை தவிர்க்கவும்.

இந்த தீபாவளி பண்டிகையின் போது சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி கோவிட் - 19 பரவுவதை தடுப்பதற்கு உதவுமாறும், பொறுப்புடன் பாதுகாப்பாக செயற்பட்டு இந்த தீபாவளி பண்டிகையை ஒரு புது வழிமுறையில் கொண்டாடுவோம்! என சுகாதார அமைச்சு கூறுகிறது.

Thanks Adaderana and Dinamany


0 comments:

Post a Comment