ADS 468x60

06 December 2020

கொவிட்-19 பாதிப்பினை ஏற்றுக்கொண்ட பொருளாதாரத் தந்திரோபாயங்கள்!

ஏன்னதான் என்றாலும் பல அனர்த்தங்களைக் கடந்து அவற்றில் இருந்து மீண்டெழும் பல அனுபவங்களைக் கொண்ட நாடு இலங்கை என்றால் மிகையாகாது. அவ்வாறிருக்கையில் கொவிட் -19 ஐ வைத்துக்கொண்டு எமது கொருளாதாரத்தினை முன்னோக்கி கொண்டு செல்வது அல்லது அவற்றை தடையின்றி இயங்கச் செய்வதானது ஒரு சவால் நிறைந்தது. அது எமது மக்களின் வாழ்விலும் வாழ்வாதாரத்திலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகின்ற படியினால் பொருளாதாரத்தினை மீண்டும் செயற்படுத்த நாம் பாரிய விலை கொடுக்க நேரிட்டுள்ளது. ஆகவே நாம் கொவிட உடன் இணைந்தே பொருளாதாரத்தின் செயல்பாட்டினை கொண்டு செல்வது மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பொருளாதாரத்துக்கும் இன்றியமையாதது.

05 December 2020

கொரோணாவில் வறுமைக்கு உட்பட்டவர்களை மீட்டெடுக்கும் மூன்று வழிகள்.

கோவிட் -19 நாட்டிற்குள் மாத்திரமல்ல உலகத்தினையே ஆட்டங்காணச் செய்துள்ளது. இது ஒருவருக்கு ஒருவர் உதவ முடியாத ஒரு அவபாக்கிய நிலமையை உருவாக்கியுள்ளது. அதனால் எம்ரைமப் போன்ற வளர்ந்து வருகின்ற நாடுகள் வளர்ச்சியடைந்த நாடுகளை மையமாக்கொண்ட நிறுவனங்களின் எல்லாவிதமான உதவிகளையும் பெறமுடியாத நிலையில் உள்ளது. இதனால் சொந்தக் காலில் எழுந்து நிற்க்க பல போராட்டங்களை வலிந்து செய்ய வேண்டியுள்ளோம். இருப்பினும் உலக வங்கியின் மீட்புக்கான பலதரப்பட்ட உதவியானது இந்த இக்கட்டான நேரத்தில் பாரிய உந்துசக்தியாகவே பார்க்கப்படுகின்றது. எனவே சமகாலத்தில் இந்த உதவிகள் எவ்வாறு பயன்படுத்தப்படவேண்டும் என்பதை தெரிந்துகொள்வது அவசியமானதாகும்.

இவ்வாறான உதவிகள்; இந்த நாட்டில் மிக முக்கியமாக வடகிழக்கில் பிரயோகிக்கப்படவேண்டும். ஏனெனில் இங்கு பல கால பின்னடைவுகளால் மக்கள் வறுமையில் வாடும் நிலை உருவாகி, பன்னெநுங்காலமாக வறுமையில் முன்னிற்கும் மாவட்டங்கள் இப்பிராந்தியத்தில் இருப்பது தரவுகள் சொல்லும் உண்மை இதற்கு பாகுபாடற்ற அற்பணிப்பான மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பும் அதிகாரிகளின் ஈடுபாடும் அதிகம் தேவைப்படுகின்றது.

04 December 2020

அறிவியல் கொண்டு அளக்க முடியாது ஆன்மீகத்தை.


கடவுள் பக்தி மாத்திரமா நமது வாழ்வாதாரமும் இன்று நம்பிக்கை சம்மந்தப்பட்டது. ஆம் இன்று இந்த கொவிட்-19 பலரை நம்பிக்கை இழக்க வைத்திருக்கிறது. இதனால் கடவுளையே கைத்தடியாகப் பிடிக்க நாடியவர்களும் இருக்கின்றார்கள் கைவிட்ட கடவுளை வெறுத்து ஓடியவர்களும் இருக்கின்றார்கள். எது எவ்வாறிருப்பினும் இன்றய காலகட்டத்தில் ஆண்டவனை கூப்பிடுபவர்கள் அதிகமாயிட்டார்கள். அதேபோல் அறிவியலை அள்ளிப்பிடிப்போரும் கூடிப்போச்சி. காரணம் காலமாற்றம்தான். 

ஆகவே, முதலிலேயே ஒன்றைத் நான் தெளிவாக்கிவிடுகிறேன். நான் நாத்திகனும் அல்ல. பகுத்தறிவு பாசறை பக்கம் தலை, கால் வைத்துப் படுத்ததும் கிடையாது. படுக்கும் உத்தேசம் துளிக்கூட இல்லை. இதைக் கேட்டுவிட்டு 'கடவுளை நிந்திக்கிறாயா' என்று குடையாதீர்கள். மதத்தில் மண்வைக்கிறாயா என்று மிரட்டாதீர்கள். 'கடவுள் கண்ணை குத்தும்' என்று கவலை கொள்ளாதீர்கள்;. நம்மில் பலருக்கு பக்தி என்பது வேலைக்காரனைக் கூப்பிடும் அளவுக்கு வெரி; சிம்பிளாகப் போயிற்று.

03 December 2020

கொரோணாவுககு பின்னரான வர்த்தகத்தினை மேம்படுத்த தேசிய அறிவுசார் சொத்துரிமையைப் பயன்படுத்துவதின் முக்கியம்.

உலகம் வேறு ஒரு உலகத்துக்குள் காலடி எடுத்து வைத்திருக்கின்றது. இந்த புதிய மாற்றத்துக்குள் எம்மையும் எமது பொருளாதார வர்த்தக விடயங்களையும் பழக்கிக்கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது. குறிப்பாக இந்த நெருக்கடியான நிலைக்குள் கண்டுபிடிப்புக்களை ஊக்குவிக்கவும் வியாபார நடவடிக்கைகளை விஸ்த்தரிக்கவும் தேசிய அறிவுசார் சொத்துரிமையை நாம் கையில் எடுக்க வேண்டும். இங்கு தேசிய அறிவுசார் சொத்துரிமையின் முக்கியத்துவம் நாம் அறியாமல் இருக்கின்றோம். அவை பல்கலைக்கழக மட்டத்தில் திட்டங்களாக கொண்டுவரப்பட்டாலும் இன்னும் அவை அந்த சமுகத்திடம் ஏன் அந்த மாணவர்களிடையே அதேபோல் தொழில் முயற்சியாளர்களிடையேயும் மிகக் குறைந்தளவிலேயே கொண்டு சேர்க்கப்பட்டிருப்பது எமது துர்பாக்கியமே. எனவே இவ்வாறான நிலையை மாற்றி இந்த கொரோணாவுக்குப் பின்னரான புதிய நிலைமைக்குள் நாம் எவ்வாறு மீண்டெழுவது என்பனபற்றி இக்கட்டுரையில் ஆராயலாம்.

கொரோனாவுக்குப் பின்னர் இன்று 2020 ஆம் ஆண்டிற்கான உலக அறிவுசார் சொத்து அமைப்பின் ((World Intellectual Property Organisation’s (WIPO) உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் (Global Innovation Index (GII)  இலங்கை 101 வது இடத்தில் உள்ளது - கடந்த ஆண்டை விட 12 இடங்களின் கணிசமான வீழ்ச்சி - மற்றும் ஒரு பரிதாபகரமான மதிப்பெண் 23.78, இல் 0-100, ஆனால் 100 மிகவும் பெறுமதியான மதிப்பெண்.

02 December 2020

சீனப்பொருளாதார வளர்சி முறைமை இலங்கைக்கு எடுத்துக்காட்டு!

நாம் எந்த அளவில், எங்கு இருக்கின்றோம் என்பதனை இன்னொருவருடன் அல்லது இன்னொரு நாட்டுடன் ஒப்பீட்டு ரீதியிலே பார்க்க முடியும். பொருளாதாரத்திலும் அப்படித்தான் நாம் எம்மை அளவிட்டுக்கொள்ளுகின்றோம். கடந்த தசாப்தங்களில், பல கிழக்கு ஆசிய பொருளாதாரங்கள் தொடர்ச்சியான நிலையான பொருளாதார வளர்ச்சியை அனுபவித்துள்ளன, அதே நேரத்தில் தங்கள் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தில் குறிப்பிடும்படியான முன்னேற்றங்களை அடைந்துள்ளன, இது ஒரு சாதனை புகழ்பெற்ற உலக வங்கி ஆய்வில் 'ஆசிய அதிசயம்' என்று விவரிக்கப்பட்டுள்ளது. ஹொங்கொங், தாய்வான், சிங்கப்பூர் மற்றும் கொரியா குடியரசு  ஆகியவை இந்த சாதனையின் பங்காளிகளாக இருந்தன.

ஒரு ஆய்வாளர் இந்த அதிசயத்தை 'ஒரு தலைமுறையை மேற்கு ஐரோப்பாவின் முன்னேறிய பொருளாதாரங்களை போல் சமூக பொருளாதார வளர்ச்சியில் மாற்றியமைத்துள்ளன' என்று விளக்கினார். இந்த நாடுகளின் குழு இப்போது வறுமையை நீக்கியுள்ள கம்யூனிஸ்ட் சீனாவினையே வியத்தகு முறையில் முந்தியுள்ளது.

01 December 2020

நாம் விவசாயத்தில் சாதிக்கும் தருணம் இது.

என்னதான் மாற்றம் வந்தாலும் நாம் உண்டுவாழ உணவு தேவை, அந்த உணவை உற்பத்தி செய்ய விவசாயிகள் தேவை. நாம் ஒவ்வொருவரும் நாள்தோறும் மூன்று வேளைக்கு சாப்பிட்டு உயிர்வாழ, கோடிக்கணக்கான இலங்கை மக்களின் பசியைப் போக்கும் மாபெரும் சேவை புரிபவர்கள் விவசாயிகள். நம் உழவர் பெருமக்கள், அன்னபூரணியைப் போல, வயிற்றுக்கு உணவு அளித்து வருகின்றனர். ஆனால் அவர்களில் பலர் வறுமையின் பிடியில் இருந்து இன்னும் மீண்டபாடில்லை. இதற்காக பல திட்டங்களை அரசு தனியார் என அனைவரும் எடுத்துவருவதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் விவசாயிகள் விவசாயத்தில் புதிய வகையில் சிந்திக்க வேண்டும். அவர்களது பல பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.

30 November 2020

வியாபார உலகில் டிஜிடல் மீடியா தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறியுள்ளது.

இன்று எமது நாடு மாத்திரமல்ல முழு உலகமே பாரிய மாற்றத்தினை வர்த்தக உலகில் சந்தித்துள்ளது. இதனை நாம் ஒரு இடராக நினைத்து முடங்கி விடாமல் இந்த இடருக்குள் எவ்வாறு எமது வியாபார செயற்பாடுகளையும் அதனோடிணைந்த சேவைகளையும் மக்களிடம் கொண்டு செல்வது, எப்படி எமது வியாபார நடவடிக்கைகளை நிருவகிப்பது என்பனவற்றையெல்லாம் நாம் இன்றய டிஜிடல் உலகில் மாற்றிக்கொள்ளவேண்டும் கற்றுக்கொள்ளவேண்டும். அதற்கான பல டிஜிடல் தளங்கள் உருவாகி எம்மத்தியில் அவை கல்வி வர்த்தக மற்றும் சேவைகள் செயற்பாடுகளில் மெதுமெதுவாக அறிமுகமாகி வருவதனை நாம் உணரத்துவங்கியுள்ளேம். இவற்றை எம் முயற்சிகளுக்குள் நிச்சயம் உள்வாங்கி எம்மை இந்த தொற்றுக்குள்ளும் வாழும் நிலையை உருவாக்கவேண்டும்.

29 November 2020

இளைஞர்கள் தொழில் முயற்சியாண்மையில் வெற்றிபெறுவது எப்படி?

இலங்கைப் பூர்வீக வரலாற்றின்படி எமது சமுகம் தமக்குத் தேவையானவற்றை தாமே உற்பத்தி செய்து தன்னிறைவானவர்களாக வாழ்ந்து வந்துள்ளனர். அன்று அவரவர்கள் செய்த தொழில்களை இன்று 'முயற்சியாண்மை' என பிரத்தியேகமான துறையாக வளர்சி பெற்றுள்ளது. இந்த வியாபார முயற்சிகள் இலங்கை போன்ற நாடுகளின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக இருந்துவருகின்றது. இருப்பினும் வேறு வளர்ந்துவரும் நாடுகளுடன் ஒப்பிட்டு நோக்கும்போது மிகக் குறைந்தளவே இவர்கள் இருந்துவருவது குறைபாடாக உள்ளது. அதற்குக் காரணம் இளைஞர்கள் மத்தியில் இன்னும் இவைபற்றிய குறைந்தளவான ஈடுபாடும் மறுபுறத்தில் அவர்களுக்கு அரச துறையில் இணைந்து வேலைசெய்வதற்கான ஈர்புமே இவற்றின் வளர்சிக்கு தடையாக உள்ள காரணம். இவற்றை மேவி, இன்றைய இளைஞர்கள் மத்தியில் எவ்வாறு இவற்றை ஊக்கப்படுத்தி வெற்றிபெறும்படியாக வழிப்படுத்துவது என்பது பலரது வினாவாக உள்ளது.