22 January 2022
மட்டக்களப்பு மாவட்டத்தை கொவிட்டின் பின்னரான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்க உள்ள யோசனைகள்!
18 January 2022
பணிப்பாளர் Dr.சுகுணன் புதிய நியமனம்- காலத்தின் கட்டாயம்!
நண்பர் வைத்தியர் சுகுணன் அவர்கள் எனக்கு நெடுநாளாக தெரிந்த ஒரு பெரு முயற்சியாளர், வேலையில் புதுமை புனைகின்ற ஒரு அசாத்திய நிருவாகத் திறமை மற்றும் தலைமைத்துவப் பண்புக்கு சான்றாக உள்ளவர். பிற உத்தியோகத்தர்களுடன் மிகச் சாதுரியமாக தொடர்பாடலை மேற்கொண்டு திட்டமிட்ட பல செயற்பாடுகளை நடத்திக்காட்டும் வல்லவர்.
13 January 2022
நாம் நமது பொங்கல் விழாவுக்கு முக்கியம் கொடுப்பதில்லை.
நமக்கென்று இருக்கின்ற அடையாளம், பண்பாடு, விழா அதை நாம் போற்ற வேண்டும் அல்லவா! ஆனால் நாம் அதை விடுத்து நட்சத்திரங்களை முதன்மைப்படுத்தி ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஆரிய விழாக்களைக் கொண்டாடுகின்றோம். நமக்கென தமிழருக்கென பிரத்தியேகமாக இருக்கின்ற தை மாதத்தில் வருகின்ற தமிழ் முதலாம் திகதியினை கொண்டாடுவது குறைந்து வருகின்றது.
02 January 2022
எமது நாட்டில் கொவிட்டின் பின் கட்டியெழுப்பவேண்டிய தொழில்துறைகள்!
இலங்கையில் உள்ள நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறை (MSME) துறையானது நாட்டிலுள்ள அனைத்து துறைகளுக்குள்ளும் 90% வீதம் பங்களிப்பை வழங்குகிறது, அது மொத்த வேலைவாய்ப்பில் 45% வீதம் வேலைவாய்ப்பை வழங்குகிறது மற்றும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அது 52% வீதம் பங்களிப்பை வழங்குகிறது. கடந்த சில தசாப்தங்களாக, சேவைத் தொழில், உற்பத்தி, பேக்கேஜிங், உள்கட்டமைப்பு, உணவு பதப்படுத்துதல், தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் இரசாயனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய MSME துறையானது, இலங்கைப் பொருளாதாரத்தின் மிகவும் ஆற்றல்மிக்க ஆதாரமாக வளர்ந்துள்ளது.
01 January 2022
புத்தாண்டில் எடுக்கும் உறுதிப்பாடுகளை பலர் தொடர்கின்றோமா!
நம்மில் பலர் பொதுவில் ஒவ்வொரு புத்தாண்டிலும் அநேகர் பல பல உறுதிகளை எடுப்பார்கள். உதாரணமாக
• நான் இனி வீணாகக் காலம் கழிக்கமாட்டேன்.
• நான் இனி முறையாய் உடற்பயிற்சி செய் வேன்.
• நான் இனி குடிக்க மாட்டேன்.
• நான் நன்றாகப் படிக்கவேண்டும்.
அரசு 2022 இல் என்ன செய்ய வேண்டும்?
31 December 2021
நம்மையும் நாட்டையும் வளமாக்குவோம்!
எத்தனை ஆண்டுகளைக் கடந்தேன் ஆனால் சில வருடங்களை கடக்க விருப்பமில்லாமல் இருந்திருக்கின்றது வாழ்நாளில். ஆனால் இந்த 2020 மற்றும் 2021 ஆகிய வருடங்கள் எந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் இல்லாத சபிக்கப்பட்ட ஆண்டுகளாகவே கழிந்துள்ளன.

