ADS 468x60

22 January 2022

மட்டக்களப்பு மாவட்டத்தை கொவிட்டின் பின்னரான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்க உள்ள யோசனைகள்!

பல வளக்குவியல்களுடன் ஒரு அழகான பாரம்பரிய வரலாற்றை தன்னகத்தே கொண்ட மாவட்டம் மட்டக்களப்பாகும். உலகில் பல நாடுகள் வளர்சியடைய இருந்த சவால்கள் என்றால் அந்தந்த நாட்டில் காணப்பட்ட வளப்பற்றாக்குறைகளே. ஆனால் பகைமை காரணமாக வளம் இருந்தும் வழாமல் போன சரித்திரம் எமது மக்களுக்குக் கிடைத்த சாபக்கேடு. இதற்கிடையில் பல முதலைகளின் வளச்சுரண்டல்கள் இன்று பூதாகரமாக ஆரம்பித்து இருப்பது நம்மை நாம் இன்னும் அறியவில்லை என்பதனை காட்டுகின்றது. நாம் நமது சந்ததிகளுடன் பல ஆண்டுகள் வாழ இங்குள்ள இயற்கை மனித வளங்கள் மிகத் தாராளமானவை.

18 January 2022

பணிப்பாளர் Dr.சுகுணன் புதிய நியமனம்- காலத்தின் கட்டாயம்!

இன்று ஒரு செய்தி கேட்டு அகமகிழ்ந்து போனேன். நண்பரும் வைத்தியருமாகிய சுகுணன் எமது மாவட்டத்துக்கு பிராந்தியப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 2022 ஒரு மாற்றத்துக்கான ஆண்டாக இருக்கின்றது என்பதற்கு இது சான்றாக இருக்கும்.

நண்பர் வைத்தியர் சுகுணன் அவர்கள் எனக்கு நெடுநாளாக தெரிந்த ஒரு பெரு முயற்சியாளர், வேலையில் புதுமை புனைகின்ற ஒரு அசாத்திய நிருவாகத் திறமை மற்றும் தலைமைத்துவப் பண்புக்கு சான்றாக உள்ளவர். பிற உத்தியோகத்தர்களுடன் மிகச் சாதுரியமாக தொடர்பாடலை மேற்கொண்டு திட்டமிட்ட பல செயற்பாடுகளை நடத்திக்காட்டும் வல்லவர். 

13 January 2022

நாம் நமது பொங்கல் விழாவுக்கு முக்கியம் கொடுப்பதில்லை.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தமிழ் மாதங்களில் தனிச் சிறப்பு வாய்ந்த மாதமாக தை மாதம் விளங்குகின்றது. தை மாதத்தின் பிறப்பை அறுவடைத் திருநாளாக, பொங்கல் தினமாக உலகத் தமிழினம் கொண்டாடி வருகிறது. தமிழ்ப் புத்தாண்டின் முதல் நாளாகவும் இந்த நாள் ஆரம்பத்தில் கொண்டாடப்பட்டது. இனியும் கொண்டாடவேண்டும்.

நமக்கென்று இருக்கின்ற அடையாளம், பண்பாடு, விழா அதை நாம் போற்ற வேண்டும் அல்லவா! ஆனால் நாம் அதை விடுத்து நட்சத்திரங்களை முதன்மைப்படுத்தி ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஆரிய விழாக்களைக் கொண்டாடுகின்றோம். நமக்கென தமிழருக்கென பிரத்தியேகமாக இருக்கின்ற தை மாதத்தில் வருகின்ற தமிழ் முதலாம் திகதியினை கொண்டாடுவது குறைந்து வருகின்றது. 

02 January 2022

எமது நாட்டில் கொவிட்டின் பின் கட்டியெழுப்பவேண்டிய தொழில்துறைகள்!

கொவிட்டின் பின்னர் பல முக்கிய துறைகள் பொருளாதார ரீதியாக பின்னடைந்துள்ளன. அரசாங்கம் என்ற வகையில் பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றபோதும் அவை மீட்டெடுக்க பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றன. இருப்பினும் எமது நாட்டினைப் பொறுத்தவரையில் சிறிய மற்றும் நடுதடதர தொழில்துறையினரே அதிக பங்களிப்பினை எமது நாட்டின் பொருளாதார வளர்சிக்கு கொடுத்துவந்தாலும் இவை இன்னும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக இருக்கின்றது.

இலங்கையில் உள்ள நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறை (MSME) துறையானது நாட்டிலுள்ள அனைத்து துறைகளுக்குள்ளும் 90% வீதம் பங்களிப்பை வழங்குகிறது, அது மொத்த வேலைவாய்ப்பில் 45% வீதம் வேலைவாய்ப்பை வழங்குகிறது மற்றும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அது 52% வீதம் பங்களிப்பை வழங்குகிறது. கடந்த சில தசாப்தங்களாக, சேவைத் தொழில், உற்பத்தி, பேக்கேஜிங், உள்கட்டமைப்பு, உணவு பதப்படுத்துதல், தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் இரசாயனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய MSME துறையானது, இலங்கைப் பொருளாதாரத்தின் மிகவும் ஆற்றல்மிக்க ஆதாரமாக வளர்ந்துள்ளது. 

01 January 2022

புத்தாண்டில் எடுக்கும் உறுதிப்பாடுகளை பலர் தொடர்கின்றோமா!

தமிழரின் புதிய ஆண்டு பிறக்கப்போகின்றது, ஆங்கிலப் புதுவருடம் பிறந்திருக்கின்றது இந்தவேளையில் எத்தனை பேர் நம்மை வாழ்த்தினார்கள்! வாழ்த்துவார்கள்! எவ்வளவு பேர் நமக்கு வாழ்த்து செய்திகள் அனுப்பினார்கள்! அனுப்புவார்கள்! இந்த ஆக்கப்பூர்வமான வார்த்தைகள் மனதுக்கு மகிழ்ச்சியாய் இருக்கின்றன இருக்கும் ஊக்குவிக்கின்றன மற்றும் ஊக்குவிக்கும். இவை அனைத்தும் நிகழவேண்டும் என்பதே அனைவரின் ஆசையாக இருக்கும். நிகழும் என்று நம்புவோம்.

நம்மில் பலர் பொதுவில் ஒவ்வொரு புத்தாண்டிலும் அநேகர் பல பல உறுதிகளை எடுப்பார்கள். உதாரணமாக 

நான் இனி வீணாகக் காலம் கழிக்கமாட்டேன்.

நான் இனி முறையாய் உடற்பயிற்சி செய் வேன்.

நான் இனி குடிக்க மாட்டேன்.

நான் நன்றாகப் படிக்கவேண்டும்.

அரசு 2022 இல் என்ன செய்ய வேண்டும்?

நாம் பல வரலாறுனகளைப் பார்த்திருக்கின்றோம், கடந்து வந்திருக்கின்றோம். அவற்றில் வெற்றிகளும் தோல்விகளும் அந்தந்த தலைமையின் நம்பிக்கையிலேயே தங்கியிருந்துள்ளது என்பது நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் இல்லையா. 

மிகவும் அவநம்பிக்கையான நேரங்களில் கூட, ஒரு நல்ல நாளுக்கான நம்பிக்கை எப்போதும் இருக்கும். 2022 விடியும் போது, இலங்கை முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது என்பது இரகசியமல்ல. இருப்பினும், மீண்டு வருவதற்கான நம்பிக்கை இன்னும் உள்ளது, மேலும் இந்த தாமதமான நேரத்திலும் சரியான முடிவுகள் எடுக்கப்பட்டால் பேரழிவு தரும் பொருளாதாரச் சரிவைத் நாம் தவிர்க்கலாம். இப்போதைய தேவை மீழெழுச்சி கொண்ட ஒரு தலைமைத்துவம், அந்தத் தலைமையின் மூலம் இந்தப் படுகுழியில் இருந்து வெளிவர விரும்பும் இலங்கையின் அனைத்து மக்களினதும் ஒருங்கிணைந்த மற்றும் ஒருங்கிணைந்த முயற்சியுமாகும்.

31 December 2021

நம்மையும் நாட்டையும் வளமாக்குவோம்!

வெள்ளிச்சரம் வாசகர்களுக்கு முதலில் 2022 நல்வாழ்த்துக்கள்!

எத்தனை ஆண்டுகளைக் கடந்தேன் ஆனால் சில வருடங்களை கடக்க விருப்பமில்லாமல் இருந்திருக்கின்றது வாழ்நாளில். ஆனால் இந்த 2020 மற்றும் 2021 ஆகிய வருடங்கள் எந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் இல்லாத சபிக்கப்பட்ட ஆண்டுகளாகவே கழிந்துள்ளன. 

மாற்றங்கள் தேவைதான் அவை ஏமாற்றங்களாகவே சென்ற வருடங்களில் இருந்துள்ளது. வரும் ஆண்டு வெறும் ஆண்டாக இருக்கக்கூடாது என்பது உங்களைப்போல எனக்கும் இருக்கும் ஆதங்கம்! பல உலகநாடுகள் இந்தக் கொவிட்டுக்குப் பின்னர் படிப்படியாக மீண்டுகொண்டிருக்கும் வேளையில் எமது நாடுமட்டும் வாழ்க்கைச் சுமைகூடி மாண்டுகொண்டிருக்கிறது.

25 December 2021

2022 ஆம் ஆண்டின் துவக்கம் 2021 ஆண்டின் முடிவைவிட பயங்கரமானது.

என்னைப் பொறுத்தமட்டில் சுதந்திரத்திற்குப் பிறகு மிக மோசமான ஒரு வருடத்தை நாம் நெருங்குகிறோம். சோகமான மற்றும் கொடூரமான ஆண்டுகள் நாம் கடந்து வந்துள்ளோம் இருப்பினும் வரப்போகும் இந்த ஆண்டைப்போல் போல பயங்கரமானவை எதுவும் இல்லை என்றே பல பொருளாதார அரசியல் நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக சந்தேகத்திற்கு இடமின்றி, வரும் ஆண்டு பொருளாதார ரீதியாக மோசமான ஆண்டாக இருக்கும் என பலர் ஆரூடம் கூறிவருகின்றனர். ஏன் எனில் நாம் கடன்பட்டு கடன்பட்டு கடனின் உச்சத்தில் இருக்கின்றோம்.