எத்தனை ஆண்டுகளைக் கடந்தேன் ஆனால் சில வருடங்களை கடக்க விருப்பமில்லாமல் இருந்திருக்கின்றது வாழ்நாளில். ஆனால் இந்த 2020 மற்றும் 2021 ஆகிய வருடங்கள் எந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் இல்லாத சபிக்கப்பட்ட ஆண்டுகளாகவே கழிந்துள்ளன.
நாம் பல பாரிய அனர்தங்களையும் அழிவுகளையும் அலாக்காகக் கடந்துவந்த அனுபவம் எதிர்காலத்தை பிரகாசமாக்க நேர்மறையாகத் திட்டமிடும் எதிர்மறை பயத்தை வானில் பட்டமிடும். 2022 சிறிய நேரத்தில் பிறக்கும் அது அனைவருக்கும் புதிய பாதை திறக்கும் நம் கவலையெல்லாம் மறக்கும் வானில் சிறகடித்து மனது மகிழ்ச்சியில் பறக்கும் நிச்சயம்!
இயன்றளவு திறனை வளர்ப்போல் இருக்கும் நேரமெல்லாம் இல்லாதவற்றையெல்லாம் கற்போம் உரம் இல்லையென உறங்காமல் வியர்வையை உரமாக்குவோம்! பட்டிதொட்டியெல்லாம் படியளக்கு அதிக உற்பத்திகளை வரமாக்குவோம். நம்மையும் நாட்டையும் வளமாக்குவோம்! அனைவருக்கும் ஆங்கிலேயரின் புதுவருட நல்வாழ்த்துக்கள்!
உங்கள் அன்பின் எழுத்தாளன் சி.தணிகசீலன்
0 comments:
Post a Comment