ADS 468x60

23 April 2022

போராட்டக்காரர்கள் மீது அரச படைகள் தாக்குதல் நடத்தினால் சர்வதேச நாணய நிதியம் என்ன முடிவுகளை எடுக்கும்!

சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கையில் இப்படி ஒரு வேடிக்கையான அரசாங்கம் எப்போதாவது தோன்றியிருக்கிறதா? முற்றிலும் இல்லை என்றே வரலாறு சொல்லும்.

இலங்கையில் கடந்த சில மாதங்களாகப் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் அமைச்சரவை மாற்றம் உள்ளிட்ட பெரும் அரசியல் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பு, பஸ் கட்டணம், கோதுமை மாவு, உணவு வகைகள் மற்றும் ஏனைய அனைத்துப் பொருள்களின் விலைகளும் வெகுவாக அதிகரித்து உள்ளன. இந்த பொருள்களின் விலை உயர்வால் மக்கள் இலங்கையின் பல பகுதிகளில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

 கடந்த 2022 April 18 ஆம் திகதி நள்ளிரவில் இந்நாட்டு மக்களுக்கு  மீண்டும் எரிபொருள் விலையை அரசாங்கம் அதிகரித்துள்ளது. எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் ஓயவில்லை. ரம்புக்கன அதன் உச்சக்கட்டமாக இருந்தது. இதற்குப் பின்னால் வேறு ஏதேனும் நோக்கங்கள் இருந்ததா என்பது எங்களுக்குத் தெரியாது, ஆனால் எரிபொருள் முறையாக வழங்கப்படாமையே இதற்குக் காரணம் என்று நாங்கள் நம்புகிறோம். 

22 April 2022

அரசாங்கம் முற்போக்காக செயல்படும் வாய்ப்பு வேகமாக குறைந்துவருகின்றது

"இந்தக் கட்சிகளில் ஏதேனும் ஒன்று பதவி விலகி, ஜனாதிபதி அல்லது பொதுத் தேர்தலுக்குச் செல்ல வேண்டும்"

இன்று நாடு நாளுக்கு நாள் சீரழிந்து வருவது நம் அனைவருக்கம் தெளிவாகிறது. இந்த நெருக்கடி நிலை முற்றி ஒரு நாள் இந்த நாட்டில் உணவுகக்கான கலவரம் நடந்தால், அங்கிருந்து தொடங்கும் போராட்டம், தற்போது சில ஆப்பிரிக்க நாடுகளில் நடக்கும் உள்நாட்டுப் போர்களைப் போன்றே இருக்கும். இந்த முக்கியமான தருணத்தில் அரச தலைவர்கள் மற்றும் அரசாங்கம் ஒரு தீர்வுக்கு வர வேண்டும். 

அரசாங்கமும் ஜனாதிபதியும் இராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்குச் செல்வதுதான் ஒரே தீர்வு என அனைத்து மக்களும் சேர்ந்த ஒரு குரலில் ஓங்கி ஒலிக்கின்றன. ஆனால் இவை இரண்டும் ஒரே நேரத்தில் நடந்தால் நாட்டில் அராஜகம் தலைதூக்கும். அப்படியானால், இந்தக் கட்சிகளில் ஏதேனும் ஒன்று பதவி விலகி, ஜனாதிபதி அல்லது பொதுத் தேர்தலுக்குச் செல்ல வேண்டும்.

21 April 2022

இதைவிடவும் மக்கள் தாங்கிக்கொள்ள என்ன இருக்கின்றது?

இந்தியா- 1 லீ பெற்றோல்   101.85/=
நேபாள்- 1 லீ பெற்றோல்      158/=
பாகிஸ்தான்- 1 லீ பெற்றோல்  152/=
இலங்கை- 1 லீ பெற்றோல்  338/=

எரிபொருள் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. தொடர்ச்சியான பொருளாதாரச் சிக்கல்களால் அதீத விரக்தியில் மூழ்கியுள்ள சமூகத்தை மேலும் கோபமடையச் செய்யும் ஒரு முடிவு என உயர் எரிபொருள் விலையை விவரிக்கலாம். எரிபொருள் விலை உயரும் போது, பொருட்கள் மற்றும் சேவைகளின் ஒட்டுமொத்த விலை நிலைகள் உயரும். கடந்த காலங்களில் அரசாங்கம் செய்த சில தவறுகளுக்கும், தவறான முடிவுகளுக்கும் சமூகம் விலை கொடுக்க வேண்டியுள்ளது என்பது ஒரு சோகம்.

17 April 2022

எதிர்கட்சியில்லாத இடைக்கால அரசே ஒரே தீர்வு!

இன்று என்றுமில்லாதவாறு நாடு முழுவதும் போராட்டத் தீ எரிந்து கொண்டிருக்கிறது. கொழும்பில் உள்ள காலி முகத்திடல் மைதானத்தில் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கு அப்பால் எரிபொருள் வரிசைகள், எரிவாயு வரிசைகள், போக்குவரத்து ஸ்தம்பிதங்கள், அரசியல் குழைப்பங்கள் தொடர்ந்தவண்ணமுள்ளது. அதற்குள் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை இன்னும் அதிகரித்தவண்ணமுள்ளது. இந்த நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஊடகங்களில் வெளியிட்ட விசேட அறிக்கை இந்த நிலைமையை தணிக்க எந்த உத்வேகத்தையும் கொடுக்கவில்லை. பாராளுமன்றத்திற்குள் அதிகாரம் செலுத்தும் அரசியல் இழுபறிக்கு முடிவே இல்லை என்று தெரிகிறது.

இந்த நாட்டிற்கு என்ன ஆனாது?

'நாட்டிற்கு என்ன ஆனது'
என்ற கேள்வியே எங்கும் விடையின்றி எழுகிறது. போராட்டக் களத்தில் நின்ற போராளிகள், அரச ஊழியர்கள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களும் இவ்விடயத்தில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

இந்த நாட்டில் அரசியல் என்பது மரியாதைக்குரிய பொது சேவையாக இருந்த காலம் ஒன்று இருந்தது. நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக தொலைதூர கிராமங்களில் இருந்து அரசு ஊழியர்கள் அன்று பேருந்தில் அல்லது ரயிலில் வந்தனர். அவர்கள் சொகுசு விடுதிகளில் தங்காமல், நாடாளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ இல்லமான 'ஷ்ரவஸ்தி' இல்லத்தில் தங்கியுள்ளனர். ஆதன் பின் அவர்கள் வந்த வழியே மீண்டும் கிராமத்திற்குச் சென்றனர்.

16 April 2022

இந்த சிறிய நாட்டிற்கு 225 எம்.பி.க்கள் தேவையா?

நமது நாடு 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின்னர், குறிப்பாக 1971 மற்றும் 1988-89 ஆகிய காலப்பகுதியில் ஏற்பட்ட பயங்கரவாதப் போரின் போது மற்றும் தென்னிலங்கையின் இரட்டைக் கிளர்ச்சிகளின் போது இவற்றுக்கு அப்பால் மிக சமீபத்தில் கோவிட்-19 தொற்றுநோய் காரணமாகவும் அடுக்கடுக்காக மிகப் பெரிய சமூக-பொருளாதார நெருக்கடி எதிர்நோக்கியுள்ளது. இந்த நெருக்கடியில் இருந்து வெளிவர முற்படும் நிலையில் அரசின் திடீர் திடீர் முடிவுகள் இனிவரும் காலங்களில் முக்கியமானதாக இருக்கப்போகின்றது. 

15 April 2022

சுகாதார சேவையின் சீர்குலைவானது ஒரு மரண மணி

நாடு நெருக்கடியில் சிக்கியுள்ளது. மக்கள் சுதந்திரமாக சுவாசிக்க முடியாத அளவுக்கு நிலைமை கடுமையாக உள்ளது. உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளன. எரிபொருள் வரிசைகளிலும், எரிவாயு வரிசைகளிலும், மண்ணெண்ணெய் வரிசைகளிலும் இரவும் பகலும் அவதிப்படுவது இங்கு வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டது. இவற்றைத் தாண்டி அடிக்கடி இடம்பெறும் மின்வெட்டு மக்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட காரணமாக அமைந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன புத்தாண்டை கொண்டாடும் மக்களின் நம்பிக்கை, இம்முறையும் கண்ணாடி கிண்ணம் பாறையில் இடிந்து விழுந்தது போல் உடைந்து போய்விட்டது.

03 April 2022

இன்று யார் மக்களை வழிநடாத்துகின்றனர்.

இன்று மக்கள் நாட்டை கையில் எடுத்துள்ளனர். அவர்கள்தான் அரசை அமைக்கும் சக்தியினை எமது நாட்டில் வைத்திருக்கின்றனர். அவர்கள் சொல்லுவதனை கேட்க வேண்டிய நிலை என்றும் இல்லாததுபோல் இன்று தோன்றியுள்ளது. ஆனால் நாட்டின் ஆட்சி மக்களுக்கு சுமையை ஏற்படுத்துவதாய் எந்தச் சந்தர்ப்பத்திலும் இருக்கக்கூடாது மாறாக அது அவர்களுக்கு நல்ல வாழ்க்கை முறையினை ஏற்படுத்துவதாய் இருக்கவேண்டும். இந்த நிலையில் எழுச்சியடைந்துள்ள மக்களை நல்ல அரசியல் தலைவர்கள் முன்னடத்த முன்வரவேண்டும்.