ADS 468x60

01 September 2022

இடைக்கால வரவுசெலவுத்திட்டம் - மூன்று விடயம்தான் உள்ளது!

இடைக்கால வரவு செலவு திட்டம் தொடர்பான சில முக்கிய விடயங்களை கோடிட்டுக் காட்ட விரும்புகின்றேன். மத்திய வங்கியின் ஆளுநரால் சுட்டிக்காட்டப்பட்டபடி, கடன் கோரும் ஒரு நாடு அதற்குப் பொருத்தமான பட்ஜெட்டை சமர்ப்பிக்க வேண்டும். 

மூன்று அடிப்படை பொருளாதார காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இடைக்கால வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நான் கருதுகின்றேன்;. முதலாவது: அரசாங்கத்தின் நிதி நிர்வாகத்தை ஒரு சிறந்த இடத்திற்குக் கொண்டு வருதல். அரசின் செலவினங்களைக் குறைத்து வருவாயைப் பெருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இரண்டாவது: உலகப் பொருளாதார செயல்முறைக்கு இணங்கக்கூடிய தேசிய பொருளாதார திட்டத்தை தயாரிப்பதற்கான முயற்சி. இது நீண்ட காலப் பொருளாதாரச் செயல்பாட்டின் முதல் படியாக அறியப்படுகிறது. மூன்றாவது: பொருளாதாரச் சிக்கல்கள் இருந்தபோதிலும் ஏழை சமூகத்திற்கு நிவாரணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தல். உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளில் ஒன்று ஏழை சமூகத்திற்கு நிவாரணத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பது.

30 August 2022

கடினமான சூழலிலும் பரீட்சைகளில் தோற்றிய மாணவர்களின் மனத் தைரியம்!

கடந்த பரீட்சை முடிவுகள், நாட்டின் எதிர்காலம் குறித்து மிகவும் நம்பிக்கையான ஒரு சமிக்ஞையை வெளியிடும் அதிஷ;டம் எங்களுக்கு கிடைத்துள்ளது. எமது எதிர்காலம் நம் குழந்தைகள். குழந்தைகளுக்குக் கொடுக்கக்கூடிய மற்றும் கொடுக்க வேண்டிய மிக மதிப்புமிக்க சொத்து கல்வி என்பதனை நாம் அறிவோம். ஒரு சமுகத்தின் அறிவு என்பது அதன் மூலதனம். ஒரு நாட்டின் வளர்ச்சி, செழிப்பு மற்றும் எதிர்காலத்திற்கான மிக முக்கியமான காரணியாக தேசிய கல்வி அறியப்படுகிறது. கல்வியின் முன்னெடுப்பு தோல்வியுற்றால், எதிர்கால இலக்குகளை அடைவது கடினம். கல்வியின் இடையூறில்லாத செயற்பாடுகள் வெற்றிகரமாக இருந்தால், எதிர்கால இலக்குகளை அடைவது எளிது.

28 August 2022

வரலாறு சொல்லித்தரும் எமக்கு முன்னுள்ள ஆபத்து! ஊட்டச்சத்து கூட்டப்படுமா?

'கொரோனாவால் ஏற்பட்ட உணவுப் பஞ்சம் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 6 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த உணவுப் பஞ்சத்தால் மட்டும் உலக அளவில் நிமிடத்துக்கு 7 பேர் உயிரிழக்கின்றனர். பட்டினியால் உலக அளவில் நிமிடத்துக்கு 11 பேர் உயிரிழக்கின்றனர். உலக அளவில் கடந்த ஆண்டு பட்டினி, உணவுப் பாதுகாப்பின்மைஇ பஞ்சம் போன்ற காரணிகளால் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், தற்போது அது உலக அளவில் 15.5 கோடியாக அதிகரித்துள்ளது. மக்கள் உலக அளவில் வறுமையையும், பட்டினியையும்இ பஞ்சத்தையும் எதிர்கொள்ள உலக நாடுகளுக்கு இடையே நடக்கும் போர் முக்கியக் காரணமாக இருக்கிறது' அந்தப்போரை இலங்கையில் நாம் இன்னும் செய்யத் துங்கவில்லை. இது இந்து தமிழ் சொல்லும் செய்தி.

இன்று எமது நாடு எது எதிலெல்லாம் முன்னிலை அடைந்து வருகின்றது. முக்கியமாக உலகில் குழந்தைகளின் ஊட்டச்சத்தின்மைப் பட்டியலில் இலங்கை ஆறாவது இடத்தில் உள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. 

இலங்கை உணவுப்பாதுகாப்பில் இருந்து மீண்டுவருவதற்கான பரிந்துரைகள்! அரசு கவனம் செலுத்துமா?

இலங்கையின் மனித அபிவிருத்தி மற்றும் சமூகப் பொருளாதாரக் குறிகாட்டிகள் அதன் தெற்காசிய அண்டை நாடுகளை விட எப்பொழுதும் முன்னணியில் உள்ளன. 2009 இல் உள்நாட்டுப் போர் முடிவடைந்ததில் இருந்து, மனித வளர்ச்சிக் குறியீடு, எழுத்தறிவு விகிதம் மற்றும் சுகாதாரம் தொடர்பான குறிகாட்டிகள் போன்ற இந்த குறிகாட்டிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டதை நாங்கள் கண்டோம். உலக வங்கியின் கூற்றுப்படி, இலங்கை தெற்காசிய பிராந்தியத்தில் கணிசமான குறைந்த வறுமை விகிதத்தை கொண்டுள்ளது. அதில் இலங்கை 0.77 வீதமாகவும், இந்தியா 13.42 வீதமாகவும், பங்களாதேஷ; 15.16 வீதமாகவும், பாக்கிஸ்தான் 5.23 வீதமாகவும் உள்ளது. 2030 ஆம் ஆண்டளவில் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான தேசிய ரீதியில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளை அடைவதே இலங்கையின் இலக்காகும். 

24 August 2022

மண்ணெண்ணை விலை மக்களின் வாழ்வாதாரத்தை தீயில் கொழுத்தியுள்ளது! ஒரு ஆய்வுக் கட்டுரை.

பல ஆண்டுகளாக ரூ.87 க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ஓரிரு நாளுக்கு முன்னர் ரூ.340 ஆக உயர்த்தப்பட்டது. இந்த விலை அதிகரிப்பு இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக கனிம எண்ணெயின் விலை அதிகம் அதிகரித்து இடம்பிடித்துள்ளது. 

அன்று 1970 களில் மண்ணெண்ணெய் போத்தலின் விலை ஒரு ரூபாவுக்கும் குறைவாகவே இருந்தது. அந்த நேரத்தில், இந்த நாட்டின் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் பெரும்பான்மையான மக்கள் ஏழைகளாக இருந்ததால், வீடுகளுக்கு மண்ணெண்ணெய் போத்தல்கள் அல்லது கலன்கள் கொண்டு செல்லப்பட்ட சந்தர்ப்பங்கள் மிகவும் அரிதாகவே இருந்தது.

23 August 2022

பாடசாலை மாணவர்களை வேலையில் இணைத்தல் என்ன மாற்றத்தினை நாட்டிற்குள் கொண்டுவரும்?

எமது நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் பாடசாலை மாணவர்கள் பகுதி நேர வேலைகளில் ஈடுபடுவதற்கு தொழிலாளர் சட்டங்களை திருத்துவதற்கு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார எடுத்த தீர்மானம் இன்றய சூழலில் உயரும் வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில் உண்மையில் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.

இந்த இக்கட்டான காலங்களில் மாணவர்களுக்கு அவர்களது பெற்றோர்களால் உதவமுடியாத நிலை காணப்படுகின்றது. இந்த நெயற்பாட்டை நடைமுறைக்கு கொண்டுவந்தால், கூடுதல் வருமானம் மாணவர்களின் கைக்கு வரும் அதே வேளையில் கல்வி கற்க்க  நிறைய செலவுகள் உள்ள இளைஞர்களுக்கு தேவையான பாக்கெட் மணியையும் இந்த முயற்சி ஏற்படுத்திக்கொடுக்கும். 

22 August 2022

அரசசேவையில் உள்ள மூன்று குழுக்களும் யார்? ஜனாதிபதியின் காட்டம் நியாயமானதா?

இலங்கை நாட்டின் ஜனாதிபதி அவர்கள் அநுராதபுரத்தில் நடைபெற்ற மாநாட்டில் முக்கியமான உரை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அதன் அடிப்படையில் அரச உத்தியோக்தர்கள் இந்தச் சந்தர்பத்தில் கள்ளமில்லாமல் பணியாற்ற வேண்டும். அவ்வாறு நீங்கள் வேலை செய்யவில்லை என்றால், நீங்கள் வீட்டிற்கு செல்லலாம் அதற்கான வழி திறந்தே உள்ளது. நீங்கள் மாத்திரமல்ல வேலை செய்யவில்லை எனில் நானும் வீட்டுக்கு அனுபபப்படுவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று வேலைசெய்யாதவர்களுக்கு சும்மா சம்பளம் மற்றும் பிற வசதிகளை வழங்க அரசு தயாராக இல்லை. இந்தப்பேச்சை அரசு ஊழியர்கள் நன்றாக நினைவி;ல் இருத்த வேண்டும் என்று நினைக்கிறோம். இந்த நாட்டில் இராணுவம் பொலிஸ் உட்பட மொத்த அரச சேவையாளர்களையும் எடுத்துக் கொண்டால் பதினெட்டு லட்சத்துக்கும் அதிகம் என்பது தரவு. இந்த பதினெட்டு இலட்சம் பேரில் பெரும்பாலானோர் வேலை செய்யாமல் நேரத்தை வீணடிப்பதை நாமும் ஏற்றுக்கொள்கிறோம். இந்த நிலை நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் எதிர்மறையாக பாதிக்கிறது ன்பதனை மறுக்க முடியாது.

21 August 2022

ஆதாரம் இல்லாமல்போகிறது மக்களின் சுகாதாரம்!

இலங்கையர்களாகிய நாம் அனைவரும் அண்மைக்கால வரலாற்றில் அனுபவித்திராத சோகமான சாபத்தினை அல்லது விதியை எதிர்கொண்டுள்ளோம். முதலில் டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் தாக்கம் கொஞ்ச நஞ்சமல்ல. பசி, உறக்கமின்றி, எரிவாயு எரிபொருள், அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்காக வாரக்கணக்கில், மாதக்கணக்கில் வரிசையில் காத்திருக்காத மனிதனைக் கண்டுபிடிப்பது என்பது ஒரு குவிய் நெல்லுக்குள் கடுகினைத் தேடுவதற்கு ஒப்பாகும்.