ADS 468x60

26 August 2023

பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகள் சீர்குலைந்தால் என்னவாகும்!

தற்போதைய பொருளாதார நெருக்கடி நம் நாட்டை எல்லா பக்கங்களிலிருந்தும் தாக்குகிறது. சமீபத்திய செய்தியின்படி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் கருத்துப்படி, பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கான வெற்றிடம் பாதி காலியாக உள்ளது. அரச பல்கலைக்கழகங்களுக்கு மொத்தமாக 12,992 விரிவுரையாளர்கள் இருக்க வேண்டிய நிலையில், தற்போது இங்கு 6,548 பேர் மட்டுமே உள்ளனர். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறைந்தபட்சம் ஆயிரம் விரிவுரையாளர்களையாவது பல்கலைக்கழகங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யாவிடின் பல்கலைக்கழக முறைமை சீர்குலைந்து போகும் அபாயம் இருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறுகிறார்.

21 August 2023

ஏன் இந்த வரட்சி இன்னும் நமது நாட்டில் தொடர்கின்றது.

கடந்த காலங்களில் நாட்டின் பல நீர்த்தேக்கங்கள் எப்படி வறண்டு போயிருந்தது என்பதை நாட்டு மக்களுக்கு நன்றாக ஞாபகம் இருக்கலாம். எத்தனையோ ஆறுகள், கால்வாய்கள், ஓடைகள், குளங்கள் வறண்டு கிடப்பதையும், ஏரியின் அடிப்பகுதி வானத்தை நோக்கி வாயைத் திறந்து வற்றி இருப்பதையும் நாம் வரலாற்றில் இதற்குமுன் பெரிதாகக் கண்ட வரலாறு உண்டா சொல்லுங்கள். இது ஏன் இன்று நடந்தது? சமீபத்திய வரலாற்றை நாம் எளிதில் மறந்துவிட முடியுமா? இந்த நாட்டில் மரங்களை வெட்டி பாரிய காடழிப்புக்கு வழிவகுத்தவர்கள் யார்? யார் செய்தாலும் இன்று விவசாயிகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த குடிமக்களும் ஒத்துழைத்த குற்றத்திற்கு விலை கொடுக்க வேண்டியுள்ளது அல்லவா?

20 August 2023

பா.ம உறுப்பினர்களுக்கு இப்போது சொகுசுக்கார்கள் தேவைப்படுகின்றதாம்.

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தமக்கு வரியில்லா கார்களை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாம். நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டுக்கு ஆற்றி வரும் சேவைகளை கருத்தில் கொண்டு அவர்களுக்கு கார்களை அல்ல ஹெலிகாப்டர்களை வழங்குவது சாலப்பொருந்தும். ஆச்சரியம் என்னவென்றால், அவர்கள் ஹெலிகாப்டர்களைக் கேட்கவில்லை. அவர்கள் சொல்வது போல், பொருளாதார நெருக்கடியால் நாடு ஏழ்மையில் இருக்கும் நேரத்தில், எம்.பி.க்கள் கார் கேட்கின்றனர். மறுபுறம் வறட்சியின் காரணமாக நாட்டின் பல மாவட்டங்களில் வயல் நிலங்கள் கருகி வைக்கோலாக மாறியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் எம்.பி.க்கள் எந்தவித சிரமமும் இன்றி டியூட்டி ஃப்ரீ கார்களை கோருகின்றனர்.

19 August 2023

இன்று மக்கள் எதிர்கொள்ளும் வலி நெருப்புக்குமேலே பூத்திருக்கும் சாம்பரைப் போன்றது.

நாடு இன்னும் அதளபாதாளத்தில் தொங்குகின்றது. பிரச்சனைக்கு மேலே பிரச்சனை உள்ளே இருக்கிறது. கேள்விக்கு பின்னால் கேள்வி இருக்கின்றது. பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் உள்ளது, வறட்சி காரணமாக, புதிய தண்ணீர் பிரச்னை உருவாகியுள்ளது. 15 மாவட்டங்களில் அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன. வன விலங்குகளும் தண்ணீர் பிரச்னையை சந்தித்து வருகின்றன. எனவேதான் யாலவனப் பூங்காவில் வறண்டு கிடக்கும் குளங்களுக்கு நீர் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது. பொருளாதாரச் சிக்கல்களால் கணிசமானோர் மூன்று வேளை உணவையே கைவிட்டுள்ளனர். நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இவை நாம் அடிக்கடிகேட்கும் அபாயச் செய்திகள்.

17 August 2023

இலங்கையின் மிக இலகுவான பொருளாதார படிநிலை!

மனித நாகரிகம் இப்படித்தான் தோன்னிறது. இருபதாயிரம் அல்லது முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மரங்களில் உள்ள ஒரு குறிப்பிட்ட குரங்கு சமூகம் தரையில் இறங்கி தாவர புரதங்களுக்கு பதிலாக விலங்கு புரதங்களை உறிஞ்சி மனிதனாக பரிணாம வளர்ச்சியடைந்ததாக சார்லஸ் டார்வின் கூறுகிறார். டார்வினின் இந்தக் கருத்தை மறுப்பவர்கள் பலர் இருந்தாலும், இந்தக் கருத்து இன்று மனித முன்னேற்றத்தின் நிலையான பார்வையாக மாறிவிட்டது. குரங்கு மரத்தில் இருந்து இறங்கி மனிதனாக மாறிய பிறகுதான் நாகரீகப் பயணம் தொடங்குகிறது.

30 July 2023

மன்றம் ஆழும் மன்னா வா!

 
மக்கள் உணர்வை சீர்தூக்கும்

மன்றம் ஆழும் மன்னா வா

திசைகள் நாலாய் இருந்தாலும்

ஒருமை வேண்டும் மன்னா வா

மன்னா வா மன்னா வா 

14 July 2023

மக்களை மயக்கும் மைக்ரோ ஃபைனான்ஸ்

மைக்ரோ ஃபைனான்ஸ் அல்லது மைக்ரோ கிரெடிட் என்று ஒரு கருத்து உலகில் இடைக்காலத்தின் தொடக்கத்தில் தோன்றியது. அதன் அடிப்படை யோசனை மக்களுக்கு கடன் கொடுப்பதாகும். ஆனால் இந்த கடன்கள் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அல்லது முதலாளிகளால் கொடுக்கப்படவில்லை, மாறாக கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த பிரான்சிஸ்கன் பிரிவின் பாதிரியார்கள் மூலம் தேவாலயத்தின் ஆசீர்வாதங்களில் சேரும் பணத்தில் சிறிதும், தேவாலயத்தால் பெறப்பட்ட தானியங்கள் மற்றும் துணிகளும் இவ்வாறு கடனாக வழங்கப்பட்டன. 

08 July 2023

ஏன் நாடு வங்குரோத்தானது?

பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கு தகுதியற்ற அரசியல்வாதிகள் நியமிக்கப்பட்டதால் இலங்கை பொருளாதாரப் படுகுழியில் விழுந்தது. ஆசியாவின் அனைத்து சமமான நாடுகளும் பொருளாதார ரீதியில்; சாதித்து வளர்ச்சியடைந்து வரும் நிலையில் நமது நாடு வங்குரோத்து நாடாக மாறியது. பொருளாதாரத்தை கையாளும் அதே அரசியல்வாதிகளை நாங்கள் மீண்டும் மீண்டும் நம்பியுள்ளோம். பல வருடங்களாக திரும்பத் திரும்ப கடைப்பிடித்து வரும் அந்த நடைமுறைக்கு முட்டாள்தனம், தந்திரம், சாணக்யம் போன்ற பல சொற்கள் எமது மொழியில் உள்ளன.

உங்களுக்குத் தெரியும் இரவு விழுந்த குழியில் பகலில்; விழக்கூடாது என்பது பழமொழி. இலங்கையர்கள் இரவில் விழுந்த குழியில் நடு பகலில் கண் திறந்து விழும் தேசமாக இருப்பதனைக் காண்கின்றோம். இல்லையேல் 75 வருடங்களாக ஒரே கூட்டத்தினரிடம் நாடு ஒப்படைக்கபட்டிருக்குமா?. இப்போதும் பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கான தீர்வுகள் அதே குழுவிடம் ஒப்படைக்கப்படும் என்று மக்கள் காத்திருக்கிறார்கள்.