ஆனால் தற்போதைய மத்திய வங்கியின் ஆளுநர் இந்த வருட இறுதிக்குள் அது 3,000 மில்லியன் டொலர்களாக இருக்கும் என்று கூறுகிறார். வெளிநாட்டு கையிருப்பு 2020 இல் 5.7 மில்லியன் டாலர்களாக (2019 இல் 7.6 பில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில்) வீழ்ச்சியடைந்தமையினால், 2021 ஆம் ஆண்டளவில் இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத பெரும் நெருக்கடிக்கு உள்ளாகும் என்று பலர் கணித்துள்ளனர்.
மூடிய பொருளாதாரக் கொள்கை
நாடு ஏன் டாலர் நெருக்கடியை சந்தித்தது?, இன்று நாட்டின் பொருளாதாரம் எதிர்நோக்கும் பிரச்சினையை எவ்வாறு தவிர்ப்பது? இவை நம் மத்தியில் இருக்கும் கேள்விகளாகும்.
இன்று இலங்கை சுதந்திரமடைந்து 73 வருடங்கள் கடந்துள்ள போதிலும், 1977ஆம் ஆண்டு வரை டொலர் நெருக்கடி ஏற்படவில்லை, ஏனெனில் எமது மூடிய பொருளாதாரக் கொள்கையினால் ஏற்றுமதி வருமானத்திற்கும் இறக்குமதி செலவினத்திற்கும் இடையிலான வேறுபாடு மிகக் குறைவாகவே காணப்பட்டது. இந்த வேறுபாடு சம்மந்தமான 1950 ஆம் ஆண்டிலிருந்தான தரவுகளை ஒப்பிட்டுப் பார்பது நமது விளக்கத்துக்கு அவசியமானது.
1950 முதல் இன்று வரையிலான டாலர் வருவாய் மற்றும் செலவுகள் (கூ 1 மில்லியன்)
ஆண்டு ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தக இடைவெளி
- 1950 297 246 +53
- 2021 8934 14938 -6003
1978 ஆம் ஆண்டு முதல் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு அரசாங்கமும் வெளிநாடுகளில் கடன் பெற்று அந்த கையிருப்புகளை அதிகரித்ததுடன், ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கமும் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற நிலையே உருவாக்கப்பட்டு இருந்தது. 1976 இல் 946 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த வெளிநாட்டு கையிருப்பு 2005 இல் 2735 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்திருந்தது. (பெரும்பாலும் UNP ஆட்சியின் போது), அதுபோல் 2005-2015 காலப்பகுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் கீழ் 8208 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் காணப்பட்டது. இந்த நிலை 2019 இறுதிக்குள் 7642 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எனவே வெளிநாட்டு டொலர் கையிருப்பு நெருக்கடியை எதிர்கொள்ளும் நாம் நெருக்கடியில் இருந்துமீழ ஏற்றுமதி சார் பாரிய உற்பத்திக் கொள்கைகளை ஊக்குவிப்பதுடன், வெளிநாட்டு வேலைவாய்ப்புக் கொள்கையில் திறன்சார் மனித வளங்களை உருவாக்கும் கட்டாயத்தில் இருக்கின்றோம். அதுபோல டொலர் கையிருப்பில் பெரிய செல்வாக்கினை கொண்டுள்ள சுற்றுலாத்துறையில் கொவிட்டுக்கு பின் நாம் மாற்றத்தினை ஏற்படுத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
0 comments:
Post a Comment