வறுமையானது சிலரது வாழ்நாட்களில் கடந்துபோகும் ஒரு தற்காலிக நோய்மட்டுமே!
உழைப்பாளர் வர்க்கம் என்பது, அரசியல் விடுதலைக்காகவும் பண்ணையடிமை முறையின் எச்சங்களை ஒழித்துக் கட்டவும் விவசாயிகள் அனைவரின் போராட்டத்தை தலைமை தாங்க வல்ல ஓரே சக்தி என்பது மட்டுமல்ல, கிராமப்புற ஏழை மக்களுடன் கூட்டுசேர்ந்து உற்பத்திச் சாதன்ங்களின் மீதான தனியுடைமையை ஒழித்துக் கட்டி, சோஷலிச மாற்றங்களை நிறைவேற்ற வல்ல சக்தியும் இதுதான் என்று அறியமுடிகின்றது. இந்த வர்க்கத்தினை வாக்குக்காக மாத்திரம் பயன்படுத்தி வாக்கை காப்பற்ற விருப்பமில்லாத வர்க்கத்தை வேரறுக்கும் வர்க்கம் நாம். நாம் மிகப்பெரிய சக்தி என்பதை எப்பொழுதும் மனதில் வைக்கவேண்டும்.









