ADS 468x60

09 February 2020

இலங்கை 2030 அளவில் எதிர்கொள்ள இருக்கும் பொருளாதார நெருக்கடிகள்.

இனிவரும் அடுத்த பத்து வருடங்கள் இலங்கையின் பொருளாதாரம் எவ்வாறான நிலையில் இருக்கப்போகின்றது என நினைத்துப்பார்தால் அது ஆபத்தானது என பல பொருளியலாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். அதற்கு பல அகப் புறக்காரணிகள் செல்வாக்குச் செலுத்தியும், செலுத்தப்பட்டும், செலுத்தப்பட இருப்பதும் கருத்தில் கொள்ளவேண்டும். மாறிவரும் காலநிலை அதனால் ஏற்படும் அனர்த்த இழப்புகள், சனத்தொகை வளர்சி, வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, திறனுடைய தொழில்நுட்பமாற்றம், திடீர் திடீர் என ஏற்படும் வைரஸ் அச்சுறுத்தல்கள், சர்வதேச பொருளாதாரப் போட்டிகள் என்பன பாரிய அழுத்தங்களை எமது பொருளாதாரத்தில் ஏற்படுத்தாமல் இல்லை.

இவற்றுக்கு அப்பால் குறிப்பாக பின்வரும் காரணிகளின்  மாற்றம் எந்த வகையில் தாக்கத்தினைக் கொண்டுவரும் என்பதனை நாம் கருத்தில் கொள்ளவேண்டிய தருணம் இது.

04 February 2020

நாம் பூரண சுதந்திரம் பெற்றவர்களா?


இன்று எமது நாட்டில் 72வது சுதந்திரதினம் கொண்டாடப்படுகின்றது. இற்றைக்கு 72 வருடங்களுக்கு முன்னர் எமது நாட்டை தம்வசப்படுத்தி, எம்மையெல்லாம் அடக்கி அடிமைகளாக, ஒடுக்கி ஒன்றுமில்லாதவர்களாக தமது ஆட்சிக்கு கீழ் ஆங்கிலேயர்கள் எம்மைக் கட்டி ஆண்டு வந்தனர். அந்த அடிமை விலங்கை உடைக்க அல்லும் பகலும் போராடி பல உயித்தியாகங்களை செய்து நமது முன்னோர்கள் பின்னர் எமது நாட்டை நாங்களே ஆள திருப்பி சுதந்திரமாகப் பெற்றுக்கொண்ட தினம்.     இருப்பினும், நம்மில் பலர் இன்று தமக்கு தாமே கேட்டுக்கொள்ளும் கேள்வி, சுதந்திரம் என்றால் என்ன? இந்த சுதந்திரம் எப்படிக் கிடைத்தது? என்பதை எல்லாம் அறியாத ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. சுதந்திர தினம் ஒரு விழாவாகவே கடைபிடிக்கப்பட்டு, மற்ற விடுமுறை நாட்களைப்போல் இதுவும் ஒரு விடுமுறைநாளாக மட்டும் மாற்றப்பட்டுவிட்டது.

01 February 2020

ஈர அருவி ஓடும் இனிமையான தேசம்!

ஈர அருவி ஓடும்- ஒரு
இனிமையான தேசம்
மலையோரம் குளிர் வீச
வயல்கள் ஆடும் வீடு

கூடி அலைகள் மோதும்- கடல்
கோடி அழகு சேர்க்கும்
தமிழ் அன்னை அரசாண்ட
தலைமை கொண்ட நாடு

உயிரிலும் மேலான தமிழை வளர்த்த தாய்
உறவுகள் சீராக உயிரைக் கொடுத்த தால்
ஈகை பெருகும் ஈழமண்

25 January 2020

திறமையை வளர்த்து வறுமையை ஒளித்தல்: ஒரு ஆய்வு பார்வை.

அறிமுகம்.

எமது நாட்டைப்போன்று உலகில் வளர்ந்துவரும் நாடுகள் எதிர்நோக்கும் முக்கிய இருபெரும் பிரச்சனைகளாவன கொடிய வறுமையும், பெருமளவு வேலையின்மையும் ஆகும். இவைகள் ஒன்றோடொன்று தொடர்புடையன. மக்களுக்கு வேலையின்மை காரணத்தினால், வருமானம் ஈட்ட முடியாமல் ஏழ்மை நிலையிலேயே வாழ்ந்துவருகின்றனர். வேறுசிலர் வேலை செய்தும் ஏழ்மை நிலையிலேயே உள்ளனர். பல நூற்றாண்டுகளாக இலங்கையில்; வறுமைநிலை நிலவி வருகிறது. அரசு கொண்டுவந்த பல நல்ல திட்ட காலங்களில்; வறுமை குறைப்பு முக்கியமான இலக்குகளுள் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த ஏழை, எளிய மக்களைப் பற்றியும், அவர்களது சமூக மற்றும் பொருளாதார சூழ்நிலைகளைப் பற்றியும் நாம் அறிந்திருத்தல் வேண்டும். அப்பொழுது தான் அரசு திறமையான வறுமை ஒழிப்பு கொள்கைகளை மேற்கொள்ள முடியும்.

19 January 2020

கிழக்கு தமிழர் தை திருநாள் கொண்டாட்டம் 2020

இன்று பலராலும் அறியப்பட்ட தமிழர்களின் வருடப்பிறப்பு தைத்திருநாள்தான் என்பது, பலருக்கு தெரியாமலேயே கொணடாடப்பட்டு வருகின்றது. இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் தமிழர்களின் தாயக மண்ணில் பலப் பல இடப்பெயர்வு, உயிர் உடமை இழப்பு போன்ற யுத்தத்தின் முப்பது வருடக் கோரத்தாண்டவம், மற்றும் காலநிலை மாற்றத்தினால் கிடைத்த சுனாமி வெள்ளப்பெருக்கு போன்ற அனர்த்த அழிப்புகள், அத்துடன் காட்டுவிலங்குளான யானை, பறவைகள் மற்றும் ஏனைய மிருங்களுடனான போராட்டங்கள் இத்தனையுடனும் போராடிப் போராடி எமது கலாசாரத்தினைக் கூட கட்டி காத்துவர முடியாத நிலையில் எம்மில் பல குடும்பங்கள் ஆக்கப்பட்டுவிட்டனர்.

17 January 2020

எமது நாட்டில் தொழிலதிபர்களாகும் பெண்கள் எதிர்நோக்கும் இடர்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் முடிவுற்றதன் பின் பணிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரும்பாலும், குடும்பச்சுமையை இறக்கி வைக்கவும், சகோதர சகோதரிகளை கல்வி கற்பிப்பதற்கும், நாளாந்த பசியைப் போக்கிக்கொள்ளவும் அத்துடன் குடும்ப வருமானத்தைப் பெருக்கிக்கொள்வதற்காகவே பெண்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வேலைக்கு செல்கின்றனர். அது மாத்திரமல்ல வீட்டில் இருந்தவாறே வேதனமில்லாது வேலை செய்வதில் 20.4% விகிதமானவர்கள் பெண்களாகவும் வெறும் 3% விகிதமானவர்களே ஆண்கள் எனவும் தரவு கூறுகின்றது.

11 January 2020

அபிவிருத்தியை நிலைகுலைக்கும் வேலையின்மை அதிகரிப்பு

இலங்கையில் கடந்த உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பின்னான பொருளாதார இடையூறில் வேலையின்மை வீதமானது 2019 ஆம் ஆண்டில் 5.1மூ ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அதிகரித்துவரும் வேலையின்மை நிலைதான் கடந்தவருட ஊதிய வளர்ச்சியின் மந்த நிலைக்கு முக்கிய பங்காக விளங்குகின்றது. 2019 செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதமளவில் பணவீக்கமானது குறிப்பிடத்தக்களவு ஊதிய வளர்ச்சியை கட்டுப்படுத்தி நுவர்வோர் செலவு சக்தியை குறைத்து வருகின்ற ஒரு நிலையைக் காட்டி நிற்கின்றது.

01 January 2020

வெள்ளிச்சரத்தின் ஆங்கில புதுவருட நல்வாழ்துகள்!

அனைத்து வெள்ளிச்சர வாசக நெஞ்சங்களுக்கும் எனது அன்பு நிறைந்த ஆங்கில புதுவருட நல்வாழ்துகளை தெரிவிப்பதனில் மனநிறைவடைகின்றேன். நாம் வாசிப்பதனையும் எழுதுவதனையும் இலகுபடுத்த பல தொழில் நுட்ப வசதிகளை உலகத்தில் தருவித்துக்கொண்டே இருக்கின்றனர். இதனை எம்போன்ற வளர்ந்துவரும் நாடுகளில் உள்ளவர்களட அரிதாகவே பயன்படுத்தி வருவது அதிகரிக்கப்படவேண்டும். எமது மாணவர்கள், எழுத்தாளர்கள் தமது ஆக்கபூர்வமான படைப்புக்களை படைக்கவென இலவச தளங்கள் அதிகம் உள்ளன. அவற்றை நாமும் பயன்படுத்தி பிறரினையும் பயன்படுத்த ஊக்கப்படுத்தி புதிய ஆண்டில் எமது சமுகத்தின் அத்தனை சிக்கல்களையும், பிரச்சினைகளையும் அடையாளங் கண்டு அவற்றிற்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதனூடாக நமது சமுகத்தினை வளர்சிபெறச் செய்ய உறுதிகொள்வோம்.