இனிவரும் அடுத்த பத்து வருடங்கள் இலங்கையின் பொருளாதாரம் எவ்வாறான நிலையில் இருக்கப்போகின்றது என நினைத்துப்பார்தால் அது ஆபத்தானது என பல பொருளியலாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். அதற்கு பல அகப் புறக்காரணிகள் செல்வாக்குச் செலுத்தியும், செலுத்தப்பட்டும், செலுத்தப்பட இருப்பதும் கருத்தில் கொள்ளவேண்டும். மாறிவரும் காலநிலை அதனால் ஏற்படும் அனர்த்த இழப்புகள், சனத்தொகை வளர்சி, வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, திறனுடைய தொழில்நுட்பமாற்றம், திடீர் திடீர் என ஏற்படும் வைரஸ் அச்சுறுத்தல்கள், சர்வதேச பொருளாதாரப் போட்டிகள் என்பன பாரிய அழுத்தங்களை எமது பொருளாதாரத்தில் ஏற்படுத்தாமல் இல்லை.
இவற்றுக்கு அப்பால் குறிப்பாக பின்வரும் காரணிகளின் மாற்றம் எந்த வகையில் தாக்கத்தினைக் கொண்டுவரும் என்பதனை நாம் கருத்தில் கொள்ளவேண்டிய தருணம் இது.








