ADS 468x60

06 November 2022

எதிர்காலத்தை நாம் எப்படி எதிர்கொள்ளப்போகின்றோம்.

  • நாம் செலுத்தவேண்டிய மொத்த பொதுக் கடன் சுமார் 80 பில்லியன் டொலர்கள்.
  • ஆனால் எங்களுக்கு முன்மொழியப்பட்ட கடன் தொகை 2.9 பில்லியன் டொலர்கள் ஆகும்
இந்த நாடு பல இடர்களை கண்டு வந்துள்ளது. ஆனால் அப்போதெல்லாம் அதன் பொருளாதாரம் அவ்வளவு ஆட்டம் காணவில்லை. அது 2020 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில்தான் இந்தப் பொருளாதார நெருக்கடி அதிகரித்து, நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு சுத்தமாக இல்லாமற்போனது, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின் விநியோகம் தடைபட்டது. தினசரி சமையலுக்கு எரிவாயு கூட வழங்க முடியாத நிலை தோன்றியது. இவை அனைத்தும் சேர்ந்து உணவுப் பொருட்களின் விலைகள் தாக்குப் பிடிக்க முடியாத அளவுக்கு உயரக் காரணமானது. இதனால் தொல்லை தாங்க முடியாத மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்திற்கு பலராலும் என்ன வியாக்கியானங்கள் கூறப்பட்டாலும், நாட்டின் அரசியல் தலைமை மாற்றப்பட்டது அந்த மாற்றத்தின் பின்னர் அது நிறுத்தப்பட்டது.

30 October 2022

பணவீக்கமும் பொருட்களின் விலை ஏற்றமும்

சமீப காலமாக, பொருட்களின் விலை தொடர்ந்து வேகமாக உயர்ந்து வந்தது. இதன் காரணமாக மாதந்தோறும் பணவீக்கமும் வேகமாக அதிகரித்தது. இந்த உயர்ந்து வரும் பொருட்களின் விலைகள் குறையுமா, எப்போதும் அதிகரித்து வரும் பணவீக்கம் குறையுமா என்று பலர் கேட்கிறார்கள். ஆனால் இந்த பொருட்களின் விலை குறைவதும் பணவீக்கம் குறைவதும் ஒன்றல்ல. பணவீக்கம் என்பது பொதுவான விலை மட்டத்தில் ஏற்படும் தொடர்ச்சியான உயர்வு. இது விலை குறியீடுகளால் அளவிடப்படுகிறது. தற்போது, நாட்டின் பணவீக்கம் முக்கியமாக கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் ஆகியவற்றால் அளவிடப்படுகிறது. 

இன்று போதைப் பாவனையில் இருந்து மாணவ சமுகத்தைக் காப்பாற்றும் பொறுப்பு பாடசாலை சமுகத்திடமே உள்ளது

ஒரு நாடு இப்படியெல்லாம் வரக்கூடாது என்பதற்கு உதாரணமாக நமது நாடும் இருப்பது கவலை. இன்று சில குழந்தைகள் மற்றும் சில இளம் பெண்கள் எதிர்கொள்ளும் துரதிஷ;டமான நிகழ்வுகளை நாம் திரும்பிப் பார்க்கும்போது, நமது மூத்த சமூகம் அவர்கள் மீது குறைவான கவனம் செலுத்துகிறது என்று தோன்றுகிறது. 

நமது குழந்தைகளுக்கு சிறந்தவற்றை செய்துகொடுப்போம், என்று தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், குழந்தைகளின் உள ஆரோக்கியத்திற்குத் தேவையான காரணிகள் நிறைவேறவில்லை. இளைஞர்களே முதுகெலும்பு, எதிர்காலம் என்று பெற்றோர்கள் பெருமை பேசுகிறார்கள், ஆனால் அவர்களை வழிநடத்த பெற்றோருக்கு எந்த திட்டமும் பெரும்பாலானோரிடம் இருப்பதாகத் தெரியவில்லை. ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டால், இது ஒரு சமூக நெருக்கடியின் முன்னோடியாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும். இதற்கான தீர்வுகளை வழங்குவது அரசாங்கத்தின் மாத்திரமல்ல, மூத்தோர் சமூகத்தினதும் கடமை என சுட்டிக்காட்டப்பட வேண்டும்.

29 October 2022

பாடசாலை மாணவர்களுக்கு எச்.ஐ.வி. -பாலியல் கல்வியின் தற்போதைய பலவீனத்தை காட்டுகிறது

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். ஆனால் செல்வம் இல்லாமல் போயுள்ளது ஆனால் நோய் அதிகரித்துள்ளது. அந்த வகையில் தற்போது நம் நாடு பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய நோய் பொருளாதார நோய். இதனால் நாட்டு மக்கள் மூன்று வேளையும் சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காலை அசெம்பிளியின் போது பள்ளிக் குழந்தைகள் மயங்கி விழும் அளவுக்கு அது கடுமையாகிவிட்டது. டொலர் நெருக்கடி, ரூபாய் மதிப்பு சரிவு போன்ற பொருளாதாரக் காரணங்களால் நம் நாடு வறுமையில் விழுந்து, பிச்சைக்காரர்கள் உதவி அனுப்பினாலும் வங்குரோத்துக்கு வந்துவிட்டோம். 

இந்நிலை ஒரே இரவில் ஏற்பட்டதல்ல. வெள்ளையர்களுக்குப்; பிறகு 74 வருடங்கள் நம் நாட்டை ஆண்டவர்களே இதற்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பொறுப்பேற்க வேண்டும். நாடு வறுமையில் வீழ்ந்துள்ள போதிலும், எமது நாட்டின் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து நாட்டுக்காக முடிவெடுக்க முடியாத நிலையில் உள்ளன. இது தொடர்பில் சில நல்ல முன்மொழிவுகள் சில தரப்பினரால் முன்வைக்கப்பட்ட போதிலும், தமது அரசியல் பயணம் வீழ்ச்சியடையும் என்ற அச்சத்தில் பல தரப்பினரும் அவற்றைப் பின்பற்றியதாகக் காணப்படவில்லை.

23 October 2022

பல்கலைக்கழகங்கள் எதைச் செய்யவில்லை?

மட்டக்களப்புக்கு மேலதிகமாக ஒரு அரச பல்கலைக்கழகம் வர இருக்கும் செய்தி மகிழ்ச்சியைத் தருகின்றது. 

நாம் அறிந்த வகையில் நமது பல்கலைக்கழக அமைப்பை எடுத்துக் கொண்டால், சிக்கலான பல பிரச்சினைகள்; உள்ளன. சில அரசுகள் இதைப் பற்றி விரிவாக விவாதித்துள்ளன. சில அரச தலைவர்கள் விதிகளையும் நிர்வாகத்தையும் மாற்றியுள்ளனர். 

ஆனால் அண்மைக்காலமாக கல்விக்கும் ஆய்வுக்கும் ஏற்ற சூழல் பல்கலைக் கழகங்களில் கட்டியெழுப்பப்படவில்லை. சுமார் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர், பல்கலைக்கழக மாணவர்களின் கைகளால் நல்ல படைப்புகள் உருவாக்கப்பட்டன. முக்கியமான ஆய்வு அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டன விவாதிக்கப்பட்டன. இன்று அவை எதுவும் பெரிதாகக் காணப்படவில்லை. பல்கலைக்கழக அனுமதியில் தாமதம், படிப்புகளை முடிப்பதில் தாமதம், தொல்லைகள், வசதிகள் இல்லாமை போன்றவை நாம் காணும் பிரச்சினைகளில் சிலவாகும்.

அரசியலமைப்பு ஒரு நாட்டின் ஆட்சி மற்றும் நிர்வாகக் கட்டமைப்பின் அவுட்லைன்

நாம் காலாகாலமாக பல அரசியல்வாதிகளை எம்போன்ற மூன்றாம் உலகநாடுகளில் இருந்து பலம்வாய்ந்த நாடுகளையும், அமைப்புக்களையும் பயமில்லாமல் எதிர்த்து அரசியல் செய்து வந்துள்ளமையை நாம் அவதானித்துள்ளோம். இதனால் பல இழப்புக்களை நாம் அவர்களின் உலகமயமாக்கல் கொள்ளையில் இருந்து சந்தித்து வருகின்றோம்.

ஜனநாயகம், சமத்துவம், நல்லிணக்கம் மற்றும் மனித சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு சக்திவாய்ந்த அரசுகளும் சர்வதேச அமைப்புகளும் மூன்றாம் உலக நாடுகளுக்கு தொடர்ந்து ஆலோசனைகளை வழங்குகின்றன. இது ஒரு அறிவுறுத்தல் மட்டுமல்ல, ஒரு வகையான எச்சரிக்கையும் கூட. ஜனநாயகத்தை இழந்த சர்வாதிகார அரசாங்கங்களைக் கொண்ட ஏழை நாடுகள் சர்வதேச ஆதரவைப் பெறுவதில்லை. இந்த நாடுகள் ஆட்சிக் கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்து ஆதாரங்களுடன் உறுதிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் பலம்வாய்ந்த நாடுகளும் அவர்களைத் தலைமை தாங்கும் சர்வதேச நிறுவனங்களும் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, ஐக்கிய நாடுகள் சபை பல்வேறு சாசனங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஜனநாயகம் மற்றும் மனித சுதந்திரத்திற்கு வழி வகுத்துள்ளது.

19 October 2022

வரி நாட்டை வளர்தெடுக்கவா இல்லை வறுமையில் தள்ளவா?

ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சினை, ஒவ்வொரு சவால், ஒவ்வொரு இடர், ஒவ்வொரு தடை அதனால் இந்த நாடு, வறுமையில் முதலிடம், உணவுப் பற்றாக்குறையில் முதலிடம் என பல விடயங்களில் பின்னடைந்து செல்வதனை நாம் நன்கு அவதானித்து வரும் நிலையில் புதிய வரிக்கொள்கை மக்களை சோகத்தில் தள்ளியுள்ளது. நமது தேசத்தில் தற்போது நடைமுறையில் உள்ள உள்ளூர் வருமான வரிச் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய வரிக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்த அரசு செயல்பட்டு வருகிறது. இந்த நாட்டில் வரி விதிப்பு முறைகளில் அவ்வப்போது திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றமை இவ்வருடத்தில் காணக்கூடிய தனித்துவமான உண்மையாகும். பெறுமதி கூட்டப்பட்ட வரி (வற்)) சமீபத்தில் செப்டம்பர் 1 முதல் 15 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

ஆதற்கு அப்பால் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி என்ற புதிய வரியும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் வரி விகிதம் 2.5 சதவீதம். அதனுடன் மின்சாரம், தண்ணீர் கட்டணம் மற்றும் எரிபொருள் விலைகளும் அதிக சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டன. இவை அனைத்தின் இறுதி விளைவு மக்களின் கைக்கு எட்டாத அளவிற்கு வாழ்க்கைச் செலவு உயர்ந்தது. இதன் மூலம் நாட்டில் இயங்கி வரும் சிறு, குநந் தொழில்துறையினர் உட்பட பல தொழில் அதிபர்கள் தங்களது தொழிலை தொடர முடியாத பின்னணி உருவானது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அரசு நேரடி வரிகளை விதித்து உயர்த்தியுள்ளது.

18 October 2022

சமத்துவமற்ற வரிக்கொள்கையில் வாடப்போகும் பொதுமக்கள்

மாத வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் ஒவ்வொருவரும் இனி வருமான வரி செலுத்த வேண்டும். தனிநபர் வருமான வரி வரம்புகளை அரசு திருத்தியமைத்துள்ளதால், இந்த புதிய வருமான வரி வரம்பு அக்டோபர் 1ம் தேதி முதல் அமூலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உரிய திருத்தத்தின்படி, ஆண்டுக்கு 30 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுபவர் வருமான வரி செலுத்தும் வரம்பை 12 லட்சம் ரூபாயாகக் குறைப்பதன் மூலம், இனிமேல் சுறா மீன்கள் மட்டுமின்றி, நெத்தலிகளும் வரி வலையில் சிக்கிவிடும் அபாயம் காத்திருக்கின்றது.