ADS 468x60

03 April 2024

சித்திரை வருட வோணஸ்: மூன்றுவேளை உணவு

பல விடயங்கள் நமக்கு பழக்கப்படுத்த வேண்டியிருக்கு. இலங்கை வரலாற்றில் ஒரு கிலோ பம்பாய் வெங்காயம் ரூ. 600க்கு விற்கும் முதல் சித்திரை வருடம் இதுவாகும். அத்துடன் இலங்கை வரலாற்றில் இலங்கையர்கள் அதிகளவு மின்சாரக் கட்டணம் செலுத்தும் வருடம் இதுவாகும். இதுதவிர, இலங்கை வரலாற்றில் அதிக வாழ்க்கைச் செலவைக் கொண்ட முதலாவது சித்திரை வருடம் இதுவாகும், அடுத்த தமிழ் சிங்களப் புத்தாண்டு வரை மக்கள் தங்கள் வாழ்வை இழுத்துச் செல்லும் வலிமை இருந்தால், அது மிகவும் அதிர்ஷ்டமானதுதான்.

வாழ்க்கைச் செலவு வெகுவாக உயர்ந்துவிட்டது என்று மீண்டும் சொல்கிறோம். எப்படி சாப்பிட்டோம் என்பதை நமது அடுப்பு அறியும். ஏனெனில் ஒவ்வொரு நாளும் அடுப்பில் வைக்கப்படும் உணவுப் சமையல்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. 

சில பகுதிகளில் மக்கள் இரு வேளை உண்பவர்களாக மாறியுள்ளனர்;. மூன்றாவது உணவு கிடைத்தால் அது போனஸ். இந்த கடினமான பொருளாதாரத்தில் போனஸ் என்பது நகைச்சுவையல்ல. அனைத்து பொருட்களும் மிகவும் விலை உயர்ந்து விட்டது. 

அரிசி, காய்கறிகள், பழங்கள், இறைச்சி, மீன், முட்டை என அனைத்தும் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அரசாங்கம் பொருளாதாரத்தை கட்டுப்படுத்த முயற்சித்தாலும், அது பெரும்பாலும் கறுப்புச் சந்தை வியாபாரிகளின் கைகளில் விழுகிறது. 

இது இந்த அரசாங்கத்தின் கீழ் நடந்த விடயம் அல்ல 1970 க்கு பின்னர் இலங்கையில் இறங்கிய ஒவ்வொரு அரசாங்கத்திலும் இது நடந்தது. 1970ஆம் ஆண்டு திருமதி பண்டாரநாயக்காவின் அரசாங்கத்தின் கீழ் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதி தடைசெய்யப்பட்ட போது மாசி கருவாடு கூட ஆடம்பரப் பொருளாக இருந்தது. 

அதன்படி, ஒரு குடும்பத்தில் ஒருவர் சாப்பிடும் வகையில், கூட்டுறவு சங்கங்கள் மூலம் மாதாமாதம் அரை அவுன்ஸ் கானாங்கெளுத்தியை அரசு அப்போது விற்பனை செய்து வந்தது. இந்த நேரத்தில், சாதாரண கோதுமைகூடி ஒரு ஆடம்பர பொருளாகவும் இருந்தது. 

ஜே. ஆர். ஜயவர்தனவின் திறந்த பொருளாதாரம் திறக்கப்பட்ட பின்னர், இந்த பொருட்கள் மிகவும் பொதுவானதாக இருந்தாலும், மிக அதிக விலையில் விற்கத் தொடங்கின. 2500 வருட கலாசாரம் மற்றும் வரலாற்றைக் கொண்டிருந்தாலும், இலங்கை மிகவும் துரதிஷ்டமான நாடாகும். 

நம் நாட்டு மக்கள் நல்ல உணவை உண்டதில்லை. எனவே, எல்லாருடைய ஆட்சிக் காலத்திலும் ஏழைக் குடும்பங்களின் பிள்ளைகள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆரசியல் அடிவருடிகள், நிலமே, பாகரி பாட்டியா, அதிகாரம் போன்ற மேல்தட்டு தந்தைகளின் மகன்கள் பந்துகள் போல உயரமாகவும், கொழுப்பாகவும் வளர்ந்தனர், ஆனால் ஏழைக் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு வயிறுதான் இருந்தது. அந்த வயிறு பெரியதாக இருந்தது உணவினால் அல்ல புழுக்களால். இந்தக் குழந்தைகளின் கைகால்கள் நோயினால் மரத்துண்டுகள் போல மெலிந்தன. இதில் பெரும்பாலான குழந்தைகள் நீண்ட காலம் வாழவில்லை. அப்போது இலங்கையின் மக்கள் தொகை வறுமையால் கட்டுப்படுத்தப்பட்டது.

இன்று இச்சூழலின் கீழ் இந்த விடயத்தை வேறு வடிவில் காணலாம். இன்றும் இந்நாட்டின் பல குழந்தைகள் உணவுப் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். இங்கு நாம் உணவு என்று அழைப்பது உணவுப் பற்றாக்குறையல்ல, குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைக்காததைத்தான். பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. இது ஒரு பெரிய செயல். இதை சில அரசியல்வாதிகள் கேலி செய்தாலும் சாப்பிடாதவர்களுக்குத்தான் இதன் மதிப்பு தெரியும். டொலரின் மதிப்பு கடுமையாக சரிந்தாலும், உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. உலகில் இவ்வாறான செயற்பாடுகளைக் கொண்ட ஒரே நாடு இலங்கையாக இருக்கலாம் என நாம் நினைக்கின்றோம்.

இந்த புதிய வருடம் அவ்வளவு செழிப்பாக இல்லை. சுமார் 5 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்து 2022 இல் வெடித்த இந்த நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக ஜனாதிபதி வீட்டிற்கு செல்ல வேண்டியிருந்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மிக உயர்ந்த செல்வாக்கினால்  ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய, மிகக் மோசமாக வீட்டிற்குச் சென்றார். அதாவது மிக விரைவாக ஆட்சிக்கு வந்த கோத்தபாய ராஜபக்ச மிக விரைவாக அரசாங்கத்தை விட்டு வெளியேறினார். நாட்டின் பொருளாதார நெருக்கடியே இதற்குக் காரணம். பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் இல்லாமல் காஸ் தீர்ந்து கியூவில் காத்திருப்பதை யாரும் விரும்புவதில்லை. இவ்வாறான சந்தர்ப்பங்களில் நாட்டின் தலைவரை வெளியேற்ற சர்வதேச சதிகள் தேவையில்லை. இந்த யதார்த்தத்தை நமது அரசியல் தலைவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அதை அரசியல்வாதிகள் புரிந்து கொண்டு நாட்டை மூன்று நான்கு வருடங்கள் முன்னோக்கி கொண்டு செல்ல முடிந்தால் ஐந்தாவது வருடத்தில் வெற்றியை கொண்டாட முடியும்.


0 comments:

Post a Comment