ADS 468x60

15 January 2026

தையோடு வழி பிறக்கும்


 ஏரோடும் ஈழ மண்ணில்

நீரோடும் பாரு

நீரோடி விளைந்த மண்ணில்

நெல்லாடும் ஊரு

தையோடு வழி பிறக்கும்

எல்லோருக்கும் வலி பறக்கும்

புத்தாண்டு பிறந்து வந்து

பொன்னான மகிழ்ச்சி பொங்கும்

 

தை மாசம் பிறந்து விட்டாலே

தமிழில் அது புது வருடமல்லோ

தெய் தெய் என்று பாடியே நாளும்

புதிதாய் நாம் பொங்கிடுவோமே

நான் ஏரெடுத்து உவி வயல் செய்து முடித்தேன்

அதற்கு உறுதுணையாய் இருந்தவர்க்கு பொங்கிப் படைத்தேன்

பொங்கலோ பொங்கலு பொங்கலோ பொங்கலு

0 comments:

Post a Comment