ADS 468x60

01 May 2019

உழைப்பாளன் வீழ்வதில்லை.


உழைப்பே உயர்வையும், மன நிறைவையும் தரும் - ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையுடன், தளர்வறியா உழைப்பின் மூலம், நம் பிரதேசத்தின்; பெருமையை உயர்த்தியவர், வைத்தியர், சமுக அக்கறையாளர், பேச்சாளர், கவிஞ்ஞர், சிந்தனையாளர், நிருவாகி, எழுத்தாளர், ஒருங்கிணைப்பாளர், நல்ல சாரதி, பாடகர், ஆற்றுப்படுத்துனர் அதற்கும் மேல் ஒரு அரசியலாளர் என பல தொழில் தகமைகளை தன்னகத்தே கொண்ட ஒருவரைப்பற்றி சொல்ல நினைக்கின்றேன். இவரை வைத்திய அத்தியட்சகர் எனத்தான் பலருக்கும் தெரியும் ஆனால் தனது கடின உழைப்பினால் அது தவிர்ந்த ஏனைய திறன்களை தன்னகத்தே வளர்த்துக்கொண்ட ஒரு சாதனையாளன்தான் கல்முனை பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளராக பதவி உயர்த்தப்பட்டிருக்கும் வைத்தியர் கு.சுகுணன் எனில் மிகையில்லை.

28 April 2019

அசம்பாவிதங்கள் தமிழ் வாடிக்கையாளர்களை அடுத்தபக்கம் திருப்பியுள்ளது.

இன்றய நிலை
இன்று எதிர்பார்க்கப்படாத, துரதிஸ்ட்டவசமான பல மாறுதல்கள் மட்டக்களப்பில் ஏற்பட்;டு இருக்கின்றது. எமது மக்கள் வெளிப்படையாகச் சொல்லப்போனால் தற்பொழுது உள்ள சூழலில் எமது மக்கள் முஸ்லிம் ககோதரர்களின் பகுதிகளிலுள்ள கடைகளுக்கு செல்ல பயப்படுகின்றார்கள். இதனால் தமிழ் கடைகளை தற்காலிகமாக நாடிவருகின்றனர். ஆனால் பல முறைப்பாடுகள் எழுகின்றன, அவர்கள் கண்ணைப்பொத்தி இந்த மக்களை கறக்கப்பார்கிறார்கள் என கடிந்துகொள்ளுகின்றனர் எல்லோருமல்ல. நமது மக்கள் இன்று பல நெருக்கடிகளை சந்தித்து வருகின்ற இந்த நிலையில் அவர்களுக்கு சேவை மனப்பாங்கில் உதவ முன்வர வேணடியது அனைவரது கடமையுமாகும்.

27 April 2019

வாருங்கோ இது வைகாசி மாதம்!

வாருங்கோ இது வைகாசி மாதம்
வந்துவிட்டால் மனம் மகிழ்சியில் மோதும்
சேருங்கோ கோலம் செய்திடக் கூடி
செல்லுங்கோ தோழில் காவடி ஆடி

வேப்பிலை மஞ்சள் மணங் கமழ
வெற்றிலை பாழை பழம் மணக்க
காப்பிட்டு கல்யானக் காலும் இட்டு
கூப்பிட வந்திடும் கோ மகளே!

20 April 2019

எல்லைக் குழந்தைகளை எடுத்தேத்தும் செற்பாடு.

மட்டக்களப்பின் பல பகுதிகள் இன்னும் நலிவுற்ற தன்மையில் இருக்கின்றன என்பதற்கு இன்னும் எமது மக்கள் வறுமையிலும் தொழில் இன்றியும் இருக்கின்ற தரவுகள் சாட்சியாக இருக்கின்றன. இவற்றுக்கான நிவாரணங்கள் மாத்திரம் போதாது, அவர்களை இந்த நிலையில் இருந்து எடுத்தேத்தவும் தேவை இருக்கின்றது. அந்த வகையில் மக்களுடன் இணைந்து கண்ணபுரம் நாராயணன் பாலர் பாசாலை, கிழக்கின் ஒளி பாலர்பாடசாலை மாலையர்கட்டு மற்றும் பாமுருகன் பாலர்பாடசாலை திக்கோடை ஆகிய பாடசாலை குழந்தைகளுக்கு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட சத்துணவுத்திட்டத்தின் கீழ் ஒரு தொகை நெஸ்ட்டமோல்ட் பால்மாவினை நிக் அன்ட் நெல்லியின் வேண்டுகோளுக்கிணங்க கனடாவில் வசிக்கும் பிரியன் மற்றும் நிலானி ஆகியோர் வழங்கிவைத்துள்ளனர்

17 April 2019

மட்டக்களப்பு தேத்தாத்தீவு கொம்புச்சந்திப் பேராலய ராகசாகரம் இறுவட்டு வெளியீடு

மட்டக்களப்பின் புகழ்பூத்த பழம்பதியான தேத்தாத்தீவு கொம்புச்சந்திப் பேராலய வருடாந்த பிரமோடசவத்தினை முன்னிட்டு என்னால்; கொம்புச்சந்தி பிள்ளையாரின் புகழ்பாடும் இரண்டாவது இ
றுவட்டான 'கொம்புச்சந்தி ராகசாகரம்' தழிழ் சிங்களப்புத்தாண்டு தினத்தில் ஆலயத்தின் பரிபாலன சபைத்தலைவர் த.விமலானந்தராசாவின் தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.

07 April 2019

மட்டக்களப்பில் பின்தங்கிய முன்பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் வேலைத் திட்டம்.

மட்டக்களப்பு போரதீவுப் பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பின்தங்கிய முன்பள்ளிப் பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் நிகழ்வுடன் அவர்களுக்கான வைத்திய சிகிச்சை முகாமும் 07.04.2019 ஞாயிற்றுக்கிழமை நடாத்தப்பட்டது. இந்த நிகழ்வு கிழக்கிலங்கை இந்து சமய சமுக அபிவிருத்தி சபையினரால் (கி.இ.ச.ச.அ.ச) நிக் அன்ட் நெல்லி பௌண்டேசன் நிதி அனுசரணையில் போரதீவு பற்று பிரதேச செயலகத்துடன் இணைந்து போரதீவுப்பற்று கலாசார மண்டபத்தில் கி.இ.ச.ச.அ.சபையின் தலைவர் த.துஸ்யந்தன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது. 

23 March 2019

நிலை மாறுமா?

வெறும் தண்ணீரை மாத்திரம் நம்பி இருக்கின்ற குவைத் முன்னேறிவிட்டது, வெறும் காடுகளை மாத்திரம் நம்பி இருக்கின்ற பிலிபைன்ஸ் முன்னேறிவிட்டது, வெறும் மாடுகளை மாத்திரம் மாத்திரம் நம்பி இருக்கின்ற டென்மார்க்; முன்னேறிவழட்டது, வெறும் மணிக்கூடுகளையே உற்பத்திப பண்ணுகின்ற சுவிட்சலாந்து முன்னேறிவிட்டது, வெறும் நிலப்பரப்பினை மாத்திரம் வைத்திருக்கின்ற அவுஸ்த்திரேலியா முன்னேறிவிட்டது, வெறும் அறிவியலை மாத்திரம் நம்பி இருக்கின்ற அமெரிக்கா முன்னேறிவிட்டது, வெறும் கூட்டுப்பண்ணைகளை மாத்திரம் வைத்திருக்கின்ற சோவியத்ரஸ்யா முன்னேறிவிட்டது. நம்மள கொஞ்சம் திரும்பிப்பார்க்கணும், இன்றைக்கு நம்ம பிரதேசத்தில் குறிப்பாக தமிழர்கள் வாழுகின்ற பிரதேசங்களில் என்ன வளம் இல்லை? ஆழுமையுள்ள மனிதம் இருக்கு, மலை இருக்கு, மாடிருக்கு, காடிருக்கு களணியிருக்கு, மேடிருக்கு குடிக்க நீரிருக்கு இருந்தும்;, 

15 March 2019

ஆராய்ச்சி மூலம் மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவோம்

சுகாதார துறையில் ஆராய்ச்சி மூலம் மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதில் பங்களிப்புச் செய்வது பெருமை அளிக்கிறது! இலங்கையில் டெங்கு காய்ச்சல் பரவலில் சமூக மற்றும் குடும்ப காரணிகள் எவ்வாறு பாதிக்கின்றன என்பது குறித்த ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புக்களை ஐயா பேராசிரியர் ஹிரான் டயஸ், பேராசிரியர் விக்கிரம் மற்றும் பேராசிரியர் துலித விக்ரம போன்ற மதிப்பிற்குரிய பேராசிரியர்களடங்கலாக ஒரு துறைசார் நிபுணர் குழுவுடன் இணைந்து வழங்கும் வாய்ப்பு சில வருடங்களுக்கு முன் கிடைத்தது.