உலகத்தில் ஏற்பட்டுள்ள ஆபத்தான கொரோணா தொற்றால் பல எதிர்மறை மாற்றங்களை உண்டுபண்ணி இழப்புகளை தோற்றுவித்தவண்ணம் உள்ளன. சுகாதார, சமுக மற்றும் பொருளாதார சவால்களை இதனால் எதிர்கொண்டுள்ள நாடுகள் பட்டியலில் இலங்கையும் உள்ளடங்கும். இவ்வாறான பாதிப்பு எந்தவகையில் நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது, அது எவ்வாறான அரசின் கொள்கை மாற்றத்துக்கு தூண்டுகோலாக இருந்துள்ளது? அதன் எதிர்கால பொருளாதார அரசியல் தன்மை எவ்வாறு அமையப்போகின்றது என்பன பற்றி இந்தக் கட்டுரையில் ஆய்வுசெய்யப்பட்டுள்ளது.








