ADS 468x60

07 May 2022

யதார்த்தத்தினை புரிந்துகொண்டுள்ள அரசு

இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் ஆற்றிய உரை நம் அனைவரின் கண்களையும் திறக்கிறது என்றே கூற வேண்டும். நாட்டின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை இந்தக் கதை உருவாக்குகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கதை இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதி நமது பொருளாதாரத்தின் உண்மைக் கதையைச் சொல்கிறது. பொருளாதாரத்தைப் பற்றி தற்பெருமை பேசுவதில் அர்த்தமில்லை. உண்மையை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். பொருளாதாரம் பற்றிய விஷயங்களை மறைக்கும் போது மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். இது சரியான செயல் அல்ல. இரண்டாம் பாகத்தில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பின்பற்ற வேண்டிய உத்திகள் பற்றி கூறப்பட்டுள்ளது. அவர்கள் ஏற்கனவே வேலை செய்யத் தொடங்கியுள்ளனர்.

04 May 2022

பிரச்சினையை பற்றி சிந்திப்பதனைவிட்டு தீர்வினை நோக்கிச் சிந்திக்கவேண்டும்- மின்வெட்டுக்கு என்ன தீர்வு!

நம் நாட்டில் மட்டும்தான் மின்வெட்டு இடம்பெறுகின்றதா? இல்லை. அண்டைய நாடான இந்தியாவிலும் மின்சார விநியோகத்தை அடிக்கடி துண்டிக்கிறது. பாகிஸ்தான் தொடர்சியாக மின்சார விநியோகத்தை துண்டித்தது. நேபாளம் நீண்டகால மின் நெருக்கடியை எதிர்கொள்கிறது. இது தவிர பல ஆசிய நாடுகளில் மின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் சிக்கல நிலவி வருகின்றது. பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, கம்போடியா மற்றும் வியட்நாம் ஆகியவை இந்த நாடுகளில் சில. தாய்லாந்தின் முக்கிய வருமான ஆதாரமாக சுற்றுலாத் துறை உள்ளது. தாய்லாந்தில் அந்த தொழிலை நம்பி பிழைப்பு நடத்துபவர்கள் ஏராளம். மின்வெட்டால் நாட்டின் சுற்றுலாத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆசியாவில் மட்டுமல்ல, ஐரோப்பாவிலும் இப்போது எரிசக்தி பிரச்சனை உள்ளது. அதற்கு ரஸயா-உக்ரைன் போர்தான் காரணம்.

03 May 2022

இன்று இஸ்லாமிய மக்கள் மாத்திரமல்ல நாம் அனைரும் நோன்பிருக்கின்றோம்

இன்று உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களால் மிகுந்த பக்தியுடனும் களிப்புடனும்; ஈத்-உல்-பித்ர கொண்டாடப்படுகின்றது;;. புனித ரம்ஜான் மாதம் என்று அழைக்கப்படும் ரமலான் நேற்றுடன் நிறைவடைந்தது. இது அநேகமாக ரமலான் நோன்பு காலமாக மட்டுமே முஸ்லிம் அல்லாதவர்களால் கருதப்படுகிறது. ஆனால் அந்தக் காலத்தில் நோன்பைத் தாண்டிய பல ஈகைகள் நடக்கின்றன, சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. இங்குதான் ஒரு மனிதன் பசியின் நடைமுறை பற்றி அதன் முக்கியம் பற்றி ஒவ்வொருவரும் உணரும் வகையில் இந்த நோன்புகாலத்தில் கற்பிக்கப்படுகிறது. 

01 May 2022

உழைப்பைத் தேடி ஓடும் சாமானியர்கள் நாங்கள்

உதிரத்தையே வியர்வாகச் சிந்தி இந்த நாட்டின் ஒவ்வொரு முன்னேற்றத்திற்காகவும் தியாகம் செய்து உழைத்தவர்கள் போற்றுதற்குரியவர்கள். உழைப்புக்கு ஜாதி, மத ஆண் பெண் பிரதேசம் என்ற எந்தவித பேதமும் இல்லை. குடும்பத்திற்காக ஆண்கள் ஓய்வின்றி உழைக்கின்றனர் என்றால் அந்த அச்சாணி முறிந்து விடாமல் காப்பதற்காக பெண்களும் வேலைசெய்து கைகொடுத்து கரைசேர்க்கின்றனர். ஆணும் பெண்ணுமாக வேலை பார்க்கும் வீட்டில் விடுமுறை என்பது இருவருக்குமே கிடையாது தான்.

தொழிலாளர்களின் தேவையைப் புரிந்துகொள்ளக்கூடிய தலைமையே தேவை

உலகம் இருக்கும் வரை உழைக்கும் மக்களைப் பற்றிய பேச்சு தொடரும். ஆவ்வாறான பேச்சுக்கள்; பல்வேறு வடிவங்களை எடுத்து முன்னேறும். ஏனெனில்; உழைக்கும் மக்கள் இல்லாமல் உலகம் இல்லை. இன்று தொழிலாளி என்ற வார்த்தையின் அர்த்தம் மாறிவிட்டது. தொழிலாளி என்பதன அர்த்தம், அன்று உடல் ரீதியாக வியர்த்து, உற்பத்திச் செயல்பாட்டில் ஈடுபடுபவர் எனக்கொள்ளப்பட. இன்று, உடல் ரீதியாக வியர்வை சிந்துபவர்களை விட, தமது மூளையினை மற்றும் திறனைப் பயன்படுத்தி வேலைசெய்பவர்களே உற்பத்திச் செயல்பாட்டில் அதிகம் உள்ளனர். அவர்கள் தொழில் வல்லுநர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

28 April 2022

இடைக்கால அரசு நெருக்கடிக்கு தீர்வாகுமா! அரசியல் ஆய்வு

இலங்கை இன்று பரபரப்பான அரசியல் குழப்பத்தின் குட்டையாக மாறியுள்ளது. ஒருபுறம், மக்களைப் பாதிக்கும் பொருளாதார நெருக்கடி. மறுபுறுத்தில் அதற்கு இணையான அரசியல் நெருக்கடி அதிகரித்து வருகிறது. இவற்றைத் தீர்ப்பதற்கான நடைமுறைக்கு சாத்தியமான வழி என்ன என்பதே அனைவரின் மனதிலும் எழுந்துள்ள கேள்வி. இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதே பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்று பல தரப்பினரும் கூறுகின்றனர். இந்தக் கருத்தை புத்திஜீவிகள், தொழில்சார் குழுக்கள், சிவில் அமைப்புக்களின் தலைவர்கள், சமயத்தலைவர்கள் மற்றும் இளைஞர் சமூகம் ஆகியன வற்புறுத்தி வருமை.

26 April 2022

இளைஞர்கள் காலத்துக்கு காலம் எடுத்துள்ள புரட்சியின் விஸ்வரூபம்

காலி முகத்திடல் கோத்தா கோ கோம் மட்டும் நமக்கு தெரிகின்றது. அங்கே ஒரு புதிய கிராமமும் உருவாகி உள்ளது. அவ்வளவுதான். அதற்கு மேல் இன்று நாடு முழுவதும் மக்களின் போபத்தினால் அரசிக்கு எதிரான போராட்டங்களாக நிரம்பி வழிகின்றறது. அது இன்னும் கூர்மையாகி விஸ்வரூபமெடுத்துள்ளது. இது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல, ஆனால் பல மாதங்களாக முழு மக்களையும் பாதித்த அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தம். இன்று அந்த அழுத்தம் குறைவதற்குப் பதிலாக, அழுத்தம் இன்னும் அதிகமாகிறது. 

24 April 2022

மக்களால் மக்களுக்காக வெகு தொலைவில் இல்லை

இன்று நாடு நினைத்துப் பார்க்க முடியாத பல எதிர்விளைவுகளை நாளுக்கு நாள் அதிகமாகச் சந்தித்து வருகின்ற. அவற்றில் எதை முன்னுரிமைப்படுத்துவது எதை தவிர்பது என்பதே சங்கடமான ஒன்றுதான். இருந்தாலும் ஒன்றிரட்டை பார்க்கலாம்.

இன்று, பணவீக்கத்தின் விளைவாக இலங்கை கடுமையான டொலர் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதற்குக் காரணம், இலங்கை மத்திய வங்கியிடம் எதிர்கால வெளிநாட்டுக் கடன்களை மறுசீரமைத்து, புதிய கடன்களைப் பெறுவது அல்லது டாலர்களை திரட்டுவது போன்ற திட்டம் இருந்திருக்கவில்லை. எனவே, மத்திய வங்கியின் அப்போதைய ஆளுநராக இருந்த பேராசிரியர் டபிள்யூ. டி. லட்சுமணனை வெளியேற்றிய அரசு நிவார்ட் கப்ராலை அங்கு கொண்டு வந்தது. இத்தனைக்கும் அவர் ஒரு பட்டய கணக்காளரோ அல்லது ஒரு பொருளாதார நிபுணரோ அல்ல.