ADS 468x60

03 May 2022

இன்று இஸ்லாமிய மக்கள் மாத்திரமல்ல நாம் அனைரும் நோன்பிருக்கின்றோம்

இன்று உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களால் மிகுந்த பக்தியுடனும் களிப்புடனும்; ஈத்-உல்-பித்ர கொண்டாடப்படுகின்றது;;. புனித ரம்ஜான் மாதம் என்று அழைக்கப்படும் ரமலான் நேற்றுடன் நிறைவடைந்தது. இது அநேகமாக ரமலான் நோன்பு காலமாக மட்டுமே முஸ்லிம் அல்லாதவர்களால் கருதப்படுகிறது. ஆனால் அந்தக் காலத்தில் நோன்பைத் தாண்டிய பல ஈகைகள் நடக்கின்றன, சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. இங்குதான் ஒரு மனிதன் பசியின் நடைமுறை பற்றி அதன் முக்கியம் பற்றி ஒவ்வொருவரும் உணரும் வகையில் இந்த நோன்புகாலத்தில் கற்பிக்கப்படுகிறது. 

610 ஆம் ஆண்டில், கேப்ரியல் என்ற தேவதை முஹம்மது நபியை சந்தித்து திருக்குர்ஆனின் உள்ளடக்கங்களை பிரசங்கித்தார் என்று கூறப்படுகிறது. இதனால் குரான் காபிரியேல் வானவரின் பிரசங்கத்திலிருந்து எழுதப்பட்டதாகக் வரலாறு சொல்லுகின்றது. எனவே இந்த புனித ரமலான் 1398 வருட வரலாறு கொண்டது. உலகின் முதல் ரமலான் சீசன் 624 இல் இன்றைய சவூதி அரேபியாவின் மதீனாவில் கொண்டாடப்பட்டது. அன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும், இஸ்லாமியர்கள் இந்த காலத்தினை, நேரத்தினை மிகவும் பக்தி ரீதியாகவும், உணர்வுபூர்வமாகவும்; கழித்தனர். 

நமக்கெல்லாம் தெரிந்த வகையில் யுத்தினைத்தவிர 1970க்குப் பிறகு இவ்வளவு அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டதாக நினைவில்லை. ஆனால் அவ்வாறான ஒரு பேரவல, பொருளாதார மற்றும் வாழ்வாதார நெருக்கடிக்குள் இந்த முறை ரம்ஜான் நோன்பானது இஸ்லாமியர்களினால்; ஒரு இக்கட்டான நேரத்தில் கொண்டாடப்படுகின்றது. 

ஒரு கிலோ அரிசி 500 ரூபாயாக உயரத் தொடங்கிய இந்தக் காலத்தில், ஒரு கிலோ பருப்பு 500 ரூபாயாக உயர்ந்து, இனி வரும் எரிபொருள் விலையேற்றத்தினைக் கணக்கிடும்போது, அந்த வேகம் இரட்டிப்பாகும் என்ற அச்சம் எழத்துவங்கியுள்ளது. யூரியா உரத்தின் விலை தற்போது 40,000 ரூபாயாகவும், அது 50,000 ரூபாயை தாண்டும் போது, அரிசி உற்பத்தியில் யூரியா முக்கிய இரசாயனக் கூறுகளாக மாறியுள்ளதால், நம் நாட்டில் நோன்பு காலச் செலவுகள் மும்மடங்காக உயரும் என்பதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. இதனால் இஸ்லாமிய மக்கள் இந்த நிலையில் தாங்கள் உண்மையான நிலையினை அறிந்து இக்காலகட்டத்தில் நோன்பு நோற்கிறார்கள். இஸ்லாமியர் அல்லாதவர்கள் நோன்பின்றி தானாகவே பசியோடு இருப்பார்கள்.

இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பம் தீரும் வரை எந்த மதங்களைக் கொண்டாடுகின்றவர்களுக்கும்; சுதந்திரம் இருக்காது. இந்த நாட்டின் சாமானிய மக்கள் வாழ்வுரிமைப் போராட்டத்தில் வெற்றிபெற அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதை நான் எழுதும் நேரத்தில், நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலையில் மக்களின் பிரச்சனைகளுக்கு அரசு பதில் தேடும் விதம் சற்று விசித்திரமானது. அதாவது எரிபொருள் தட்டுப்பாட்டை நீக்க அதன் விலையை உயர்த்தி எரிபொருள் பிரச்சனையை தீர்க்கிறார்கள். அப்போது மக்கள் எரிபொருள் நிரப்புவதை தவிர்க்கின்றனர். 

சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1000 ஆக இருந்த 12.5 கிலோ எடை கொண்ட காஸ் சிலிண்டரை ரூ.5,000 ஆக்கி காஸ் பிரச்னையை தீர்த்துவைக்கின்றனர்;. அப்போது மக்கள் வாங்குவதற்கு காசு இல்லாததால் எரிவாயு பிரச்சினையும் தீர்ந்துவிடுகிறது. இந்த சூத்திரத்தினை அரசு தொடர்ந்து நாம் அன்றாடம் உண்ணும் உணவில் பயன்படுத்தினால், இந்நாட்டு மக்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும். 

ஒருவேளை இந்த அபாய நிலை மக்கள் தொகையில் பெரிய குறைப்பை ஏற்படுத்தும். 1920 களில் ஐரோப்பாவில் பெரும் பணவீக்கம் ஏற்பட்டது. இதனால் பணத்தின் மதிப்பு கடுமையாக சரிந்தது. அந்தக் காலத்தில் ஐரோப்பாவில் இருந்தவர்கள் ஒரு பவுண்டு ரொட்டி வாங்குவதற்கு ஒரு மூட்டைப் பணத்தை எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது. அதே சமயம், வரவிருக்கும் குளிர்காலத்தில் வெப்பத்தைத் தக்கவைக்க தேவையான எரிபொருள் மற்றும் உணவைப் பெற முடியாமல் ஐரோப்பாவில் மில்லியன் கணக்கானவர்கள் இறந்தனர். இன்று நாட்டில் பணவீக்கமும் அதிகமாக உள்ளது, பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றது இந்த நிலையில் எமது நாட்டிற்கும் இதே கதி வராமல் இருக்க இறைவனைப் பிரார்த்திப்போம்.


0 comments:

Post a Comment