ADS 468x60

09 October 2022

ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நாம் நிராகரிக்கலாமா?

இன்று ஆர்பாட்டங்கள், எதிர்புகளை தெரிவித்து இலங்கைக்குள் இருந்துகொண்டு ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நாம் நிராகரித்தாலும், அவற்றை முழுமையாக புறக்கணிக்க முடியாது. குறிப்பாக சர்வதேச ஆதரவை எதிர்பார்க்கும் இலங்கைக்கு அதனை எப்படியும் செய்ய முடியாது. அத்துடன்  இன்று சர்வதேசத்தின் நம்பிக்கையைப் பெறுவதுடன், சக்தி வாய்ந்த வல்லரசுகளுடன் நட்புறவுடன் செயற்பட வேண்டியது அவசியமாகும். இங்கே, பலம்கொண்ட நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் கொள்கைகள் மற்றும் நோக்கங்களுக்கு நாம் அதிக கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயம். இல்லை என்றால் சர்வதேச சமூகத்தின் முன் அவமானப்படுத்தப்பட்டு விமர்சிக்கப்படுவோம் மற்றும் புறக்கணிக்கப்படுவோம்.

08 October 2022

விவசாயிகளுக்கு யார்தான் முக்கியம் கொடுக்கிறான்?

இன்றைக்கு எல்லோரும் டாக்டராகனும், எஞ்சினியராகனும், வக்கீலாகனும், ஐரி ஒப்பிசராகனும் அப்புறம் உழைக்கிற காச கடையில கொண்டு கொடுத்தா ப்ரசா உணவு வேண்டிச் சாப்பிடலாம். 

ஐயா இந்தச் சாப்பாட்ட என்னுடைய விவசாயப் பெருங்குடி மக்கள் எங்கயோ ஒரு காட்டில மழையிலும் வெயிலிலும் கண்ணுமுழி பிதுங்க, கன்னச் சதை தொங்க உடலில் வேர்வை உப்பா பூக்க உடலால வெம்பாடுபட்டு விளைய வைத்தால்தான் இங்க ப்றசா உணவு வரும். 

ஒரு கவிஞ்ஞன் எழுதுகிறான் ' கடைசி மரமும் வெட்டப்பட்ட பிறகு, கடைசி மீனும் பிடிபட்ட பிறகு கடைசி நதியும் நஞ்சான பிறகுதான் மனிதன் உணருவான் பணத்தைச் சாப்பிட முடியாதென்று'. 

02 October 2022

அறிவை மூலதனமாக மாற்றுவதே வீழ்ந்து கிடக்கும் எமது நாட்டிற்கு ஒரே வழி.

இன்று எமது தேசிய கல்வி மற்றும் சமூகத்தில் ஆசிரியர்களின் பங்கு பற்றி பல விவாதங்கள் உள்ளன. அவர்கள் பழகும் போது முதலில் உணரும் விடயம் என்னவென்றால், சமூகத்தில் கற்றல் மற்றும் கற்பித்தல் பற்றிய உன்னிப்பான அவதானிப்பு உள்ளது. படித்த சமுதாயம் மற்றும் படிக்காத சமூகம் இரண்டும் கல்வியில் ஆர்வமாக உள்ளது. அதுபோல பணக்கார சமூகம் மற்றும் ஏழை சமூகம் கல்வியில் சமமாக ஈடுபடுகின்றனர். கல்வி தொடர்பாக அரசு எடுக்கும் முடிவுகளை ஒட்டுமொத்த சமூகமும் உற்று நோக்குகிறது. எந்தக் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தாலும், இது ஒரு சாதகமான நிலை. கல்வியில் பலவிதத்தில் சாதகமான சூழ்நிலையை தெரிவிக்கும் ஆசிய நாடாகவும் நமது நாடு அறியப்படுகிறது.

01 October 2022

பிறருடைய குழந்கைகளை நமது குழந்தைகள் போல் பாதுகாப்போம்.

இந்த ஆண்டு உலக குழந்தைகள் தினத்தின் கருப்பொருள் 'ஒவ்வொரு குழந்தைக்குமான ஒரு சிறந்த எதிர்காலம்' என்பது ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டுவரப்பட்டுள்ளது.

1857 ஆம் ஆண்டில், ஐக்கிய இராச்சியத்தின் புகழ்பெற்ற பாதிரியாரான டாக்டர் சார்லஸ் லியோனார்ட், ஒரு ஞாயிற்றுக்கிழமைக்கு 'தி ரோஸ் டே' என்று பெயரிட்டார், மேலும் அந்த நாளில் குழந்தைகளின் செயல்பாடுகள் மற்றும் நலன்களை மேம்படுத்துவதில் பெரியவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

1919 ஆம் ஆண்டில், குழந்தைகளைப் பாதுகாப்பது, கல்வி, உணவு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான புறக்கணிப்பு போன்ற 10 காரணிகளின் அடிப்படையில் குழந்தைகளைப் பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை விடுத்தது.

18 September 2022

'யார் இந்த பூராடனார்' மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் நினைவுப் பேருரை!

அறிமுகம்

சிந்தனைகளை யாராலும் பசிவந்தால் சாப்பிட முடிவதில்லை ஆனால் அதுவே பலர் ஒழுக்கமுள்ள மற்றும் வளர்சியடைந்த சமுகமாக மாற வழிவகக்கின்றது என்றால் அது பொய்யில்லை. உலகத் தமிழ் வளர்சிக்கு ஊன்றுகோலாக பல ஈழத்தமிழர்கள் இருந்துள்ளனர், இருக்கின்றனர் இன்னும் இருந்துகொண்டே இருப்பபார்கள். 

தமிழ்மொழி தொன்மையான செம்மொழி என்பதை ஆய்வுலகும் அறிஞர் உலகும் ஏற்றுக்கொண்டுள்ளன. அம்மொழியின் வளங்கள் பன்முகம் கொண்டவை. சங்க நூல்கள் (இலக்கியம், இலக்கணம்), அறநூல்கள், பக்தி நூல்கள், காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், உரையாளர்களின் உரைகள், அகராதி நூல்கள், நாட்டுப்புறவியல் நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், கலைக்களஞ்சிய நூல்கள், படைப்பு நூல்கள், கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் என்று பல துறையாகப் பல்கிக் கிடக்கும் தமிழ்ப் பரப்பு முழுமைக்கும் பங்களிப்பு செய்தவர்கள் ஒரு சிலராகவே இருப்பார்கள்.  

14 September 2022

கிழக்கில் ஒருபோக விவசாயம் செய்ய 5 இலட்சம் தொழிலாளர்கள் தேவை: மீண்டும் மம்பட்டி தூக்கவேண்டும்!

  • சுமார் 40 வகையான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது.
  • நமக்கு மூலப்பொருட்கள் கிடைத்தால் இங்கு முடிவுப் பொருட்களை தயாரிக்கலாம்?
  • எத்தனை மூலப்பொருட்கள் கொண்டு வந்தாலும் பெட்ரோல் இன்ஜின், டீசல் என்ஜின்களை இந்த நாட்டில் தயாரிக்க முடியுமா?
  • ஒரு நாளைக்கு ஒருவருக்கு குறைந்தது 3500 ரூபாய் இல்லாமல் இருமக் கூட மாட்டார்.
  • கிழக்கு மாகாணத்தில் ஒரு பருவத்தில் அறுவடை செய்வதற்கு குறைந்த பட்சம் நான்கிலிருந்து ஐந்து இலட்சம் பேர் தொழிலானர்கள் தேவைப்படுகின்றனர்.

வரலாறு முக்கியம் நமக்கு, நமது விவசாயிகள் ஒரு வரலாற்றைக் கொண்டுள்ளனர். அந்தவகையில் 1900 ஆம் ஆண்டில், இலங்கை விவசாயிகள் முட்செடிகளைப் பயன்படுத்தி நெல் வயல்களைப் பயிரிட்டனர். இது ஒரு இயற்கைக் கரிம உரம். அதேபோல பூச்சிக்களை மற்றும் ஈக்களை விரட்ட பாரம்பரிய இரசாயன முறைகளையும் உள்ளூர் மூலிகைகளையும் பயன்படுத்தினர். 1910ல் கூட இந்நாட்டு மக்களும் அவ்வாறே பயிரிடப்பட்டனர்.

உணவு நெருக்கடிக்கு கொண்டு செல்லும் பொருளாதார பின்னடைவு

  • 185 ரூபாவாக இருந்த ஒரு கிலோ பாண் விலை  485 ரூபாவாக அதிகரித்துள்ளது.
  • ஒவ்வொரு 05 குடும்பங்களிலும் 04 குடும்பங்கள் உணவைத் தவிர்க்கும் சூழ்நிலையில் உள்ளனர்.
  • ரொட்டி ஒன்றின் விலை 300 ரூபா வரை அதிகரிக்கலாம் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
  • செப்டெம்பர் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள வற் வரி அதிகரிப்பின் மூலம் இந்த விலைகள் அதிகரித்து பணவீக்கம் மேலும் உயரும் 
இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து பல்வேறு விளக்கங்கள் உள்ளன. சில நேரங்களில் இந்த யோசனைகள் உள்நாட்டிலும் பின்னர் சர்வதேசத்திலும் வழங்கப்படுகின்றன. சுருக்கமாகச் சொன்னால், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும், அதன் விளைவாக நாட்டு மக்கள் எதிர்கொள்ள வேண்டிய கடுமையான அடக்குமுறைகளும் தற்போது சர்வதேசப் பொருளாக மாறியுள்ளது.

12 September 2022

சுற்றறிக்கைகளும் பொருளாதாரப் பின்னடைவும்: ஒரு ஆய்வுப்பார்வை.

பல வருடங்களாக நான் கோடிட்டுக்காட்டு; ஒரு விடயம் அது நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இடையூறாக இருக்கும் சுற்று நிருபங்கள். இதனை இன்று மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அரசாங்க உயர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இந்திய உதவியின் கீழ் மேற்கொள்ளப்படும் பல திட்டங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக நடைபெற்ற கலந்துரையாடலில் அரச தலைவர் இந்த ஆலோசனையை வழங்குகிறார். மேற்கூறிய கலந்துரையாடல், அந்தத் திட்டங்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்த சிக்கல் சூழ்நிலைகளை அகற்ற உதவியது. வெளிநாட்டு உதவியின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் சரியான இலக்கை நோக்கி நகரவில்லை என்றும் அதனால்தான் வெளிநாட்டு உதவி வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.