ADS 468x60

12 February 2013

மட்டக்களப்பு மக்களின் முகமலர்ச்சியில் மறுமலர்ச்சி


நம்மில் கனபேருக்கு இந்த ஊர்களின் பெயரைக் கேட்டாலே அந்தளவு பயமாக இருந்தது ஒரு காலத்தில். கரடியனாறு, மரப்பாலம், புல்லுமலை, ஆயித்தியமலை, கித்துள், கொடுவாமடு, உறுகாமம் போன்ற கிராமங்கள் யுத்தகாலத்தில் நேரடியாக பெரும் பாதிப்புக்குள்ளான கிராமங்களாகும். அந்தக்காலத்தில் அடிக்கடி இடம்பெயர்ந்து, உயிர்கள், சொத்துக்கள் போன்ற எல்லாவற்றிலும் இழப்புகளை சந்தித்து இன்று வேரில்லாத மரம்போல் இந்தச் சமுகம் ஆடிப்போய் கிடப்பதனை அனைவரும் அறிவர். எஞ்சிய ஆடுமாடுகள் மேயும் புல்வெளிகளிலும், கணக்கற்றுக்கிடக்கும் வயற்காடுகளிலும் இங்குள்ள அநேகமான சிறுவர்கள் கல்வி கற்கும் பருவத்தினை காணமத்துக் கொண்டிருக்கிறார்கள்.

04 February 2013

சொர்க்கம் அல்லவோ...













மட்டு நகர் நம் மக்கள் விரும்பும்
அழகான நிலமல்லவோ
வான் மேகமும் மலைச் சாரலும்
ஒன்றாகி கூடிடும் மேடை அல்லவோ.

கயல் பாடிடும் வயல் ஓடையில்-எந்தன்
நெஞ்சம் பட்டு சொட்டு தாலாட்டுது
முயல் பாய்ந்திடும் முல்லைக் காடுகள்-சொட்டு
தேனை மொட்டு விட்டு பாலூட்டுது
என் மண்ணே உன்னைத் தான்- விட்டு
பின்னே போகுமா
மனம் தேடி அலைகின்றதே
இந்தக் காற்றிலும் இன்ப ஊற்றிலும்
நாம் வாழும் வாழ்க்கை சொர்க்கம் அல்லவோ


கலை ஊறிடும் கங்கை ஓடிடும்-கண்கள்
பார்க்கும் இடம் எங்கும் பொங்கும் இன்பமே!
அள்ளும் பாத்திரம் மெல்ல ஊறிடும்-வளம்
எங்கும் பூப்பதை நான் பார்க்கிறேன்.
இங்கு வந்தோர் சொந்தமாய் -ஒன்றாய்
வாழும் வண்ணமாய்
பண்பான நிலம் அல்லவோ!
எந்த நேரமும் இந்தப் பூமியில்
ஒன்றாகும் சொந்தம்  கோடி அல்லவோ!



நிஜத்தில் காண்பதற்க்காய்


இன்னும் இன்னும் சுமக்கிறது
முன்னும் பின்னும் நீ கொடுத்த
நம்பிக்கை மூட்டைகளை
வாழ விடு இல்லாவிட்டால்
வாழ்ந்து விடு..
சாந்தியடைந்து விடும்
செத்து மடியும் என்னுயிர்...

ஒளித்து விளையாடுவதற்கு- நீ
என் வீட்டு மூலையிலா இருக்கிறாய்!
உன் சிரித்த முகத்தை
படம் பிடித்து தூக்கியிருக்கும்
என் இதயச் சுவர் இப்பவும்
அழுகிறது
நிஜத்தில் காண்பதற்க்காய்

30 January 2013

வாழ துடிக்கும் வாகரை மக்கள்- மக்களின் குரலில்

(கட்டாயம் படியுங்கள்) இவர்கள் யாருக்கு என்ன தீங்கிழைத்தார்கள்? இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? கடவுளே! உன் முன் பக்தனாக அல்ல, பிரஜைகளில் ஒருவனாக கேட்கிறேன். இவர்கள் கொலை செய்தார்களா? இல்லை கொள்ளையடித்தார்களா? இல்லை நாட்டைக் கவிழ்க்கும் குள்ளநரி வேலை செய்தார்களா? குற்றம் என்ன செய்தார்கள் இந்த மக்கள்  குற்றம் என்ன செய்தார்கள்? கூறமாட்டீர்களா? நீங்கள் கூறவேண்டாம்.

29 January 2013

மட்டக்களப்பில் 40 ஆதரவற்றோர் இல்லங்கள்- நீளும் கருணைக்கரம்.

கிழக்கு மாகாணத்தின் யுத்தம், இயற்கை அனர்த்தங்களின் பின்னர் அநேகம் குழந்தைகள் அநாதைகளாக்கப்பட்டுள்ளனர் அதேபோல் அநேகம் பெண்கள் விதைவகளாக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இறைவனால் படைக்கப்படும் யாரும் அநாதைகள் அல்ல, அவர்கள் இறைவனின் திருக்குழந்தைகள் என்பதை நிருபிக்கும் வண்ணம் இந்த மாவட்டத்தில் பல சிரமங்களுக்கு மத்தியில், இந்த குழந்தைகளை வழிநடாத்துகின்ற 40 சிறுவர் இல்லங்கள் இருப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழு(http://hrcsl.lk/tamil/?page_id=813) அறிக்கையிட்டுள்ளது. 2012 இல் எழுதிய கட்டுரை ஒன்று

27 January 2013

இரக்கமுள்ளவர்களுக்கு எடுத்துக்காட்டாக தமிழர்கள் இருக்கவேண்டும்

பல நூற்றுக் கணக்கானவர்கள் கால்களை இழந்திருந்தாலும் நம்பிக்கையை இழக்காமல் காத்துக்கொண்டிருந்தனர். 'வலிமை, வலிமை, அது நமது இந்த வாழ்க்கையில் என்றுமே நிறைய வேண்டும், நம் பாவம் மற்றும் துன்பம் அனைத்திர்க்கும் ஒரே காரணமாக உள்ளது நமது பலவீனம் மட்டுமே. பலவீனம் இருந்தால் அறியாமை வரும், அந்த அறியாமை துன்பத்தை தருகிறது' என்று விவேகாநந்தர் முழங்கியதற்கு ஏற்ப்ப அந்த வலிமையை எங்கள் குழுமத்தினர் விஷேச தேவையுடையவர்களுக்கு இன்று வழங்கினோம். 

21 January 2013

மட்டக்களப்பு கிராமத்து மக்கள் எமது எல்லைத் தெய்வங்கள்!

மதுரன்குளம் , மாவடிச்சேனை, கட்டுமுறிவு, கதிரவெளி, வாகரை, வெருகல், ஓமடியாமடு, பனிச்சங்கேணி இத்தனை கிராமங்களில் இழையோடி கிடக்கும் வறுமை கல்வியை விளங்கச் செய்யாமல் போய்விட்டது. துடிப்புள்ள எந்த இன்னமும் சோத்துக்கு கஸ்ட்டப்படுவதில்லை. ஒரு இணையத்தளத்தில் பார்த்தேன், 'மட்டக்களப்பார் நீர், நிலம், காடு என்ற அனைத்து வளமும் நிறைந்த காணப்படுவதனால் உழைத்து உண்ண வேறு வழியை தேடவோ சிந்திக்கவோ இல்லையாம், ஆனால் யாழ் மக்கள் வரண்ட, நீர் நிலைகள் குறைந்த நில அமைப்பினைக் கொண்டிருப்பதனால் அவர்கள் விவசாயத்தினை நம்பி வாழ்பதனை விட, கல்வியை நம்பி முன்னேறத் தொடங்கினராம்'. ஆனால் கடந்து சென்ற கசப்பான வருடங்கள் மண்ணையும் வளப்படுத்தவில்லை, மக்களயும் வளப்படுத்தவில்லை என்பதுதான் மட்டக்களப்பினைப் பொறுத்தமட்டில் உன்மை.

13 January 2013

மட்டக்களப்பில் தை பிறந்தால் இவ்வளவு சந்தோசமா?

ஆகா, ஓகோ என்று களைகட்டியிருக்கும் மட்டக்களப்பு மாநிலத்தின் பொங்கல், மிகவும் சந்தோசமாகக் கொண்டாடப்படுகிறது. அனைவரும் ஆநந்தமாக மழைக்கு பின்னர் வெளித்திருக்கும் இந்த தருணத்தினை பயன்படுத்தி வீதிகள், சந்தைகள், கடைத்தெருக்கள் எல்லாம் குவிந்து நிற்க்கும் மக்கள் மகிழ்ச்சியோடு தயாராகி வருவதனை அவதானிக்க முடிகிறது.