ADS 468x60

30 September 2021

நமது இளைஞர்கள் ஏன் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும்?

அரசியல் பற்றிய புரிதல்

ஓ! இளைஞர்களே கனவு காணுங்கள் அது தூக்கத்தில் காணும் கனவு அல்ல நாட்டை முன்னேற்றப்பாதையில் அழைத்து செல்லும் லட்சிய கனவாக இருக்கட்டும் என்றார் அப்துல் கலாம்.

இலங்கையில் பெரும் எழுச்சி எல்லாம் மாணவர்களால், இளைஞர்களால் உண்டானது. உரிமைப் போராட்டம் ஆகட்டும், போர் நடந்த போதெல்லாம் இங்கு உண்டான எழுச்சி ஆகட்டும், அரசின் வேலையில்லாக் கொள்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஆகட்டும்... பெரும்பாலும், எந்த பெரும் அரசியல் கட்சிகளும் முன்னெடுக்காமல், சிறு அமைப்புகளும், மாணவர்களும் தன்னெழுச்சியாக கிளர்ந்து எழுந்து போராடி இருக்கிறார்கள். ஏன் அரசைக் கூட பணிய வைத்திருக்கிறார்கள்.

07 September 2021

வெளிநாடு சென்றாவது கல்வியைத் தேடு!

கொரோணா எனும் கொடிய நோய் எல்லாவற்றையும் விட கல்வித்துறையில் பல தலைகீழ் மாற்றங்களை உண்டுபண்ணி இருக்கின்றது. கொரோனா காரணமாக கடந்த ஓன்றரை ஆண்டுகளாக பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள்; மூடப்பட்டுக்கிடக்கின்றன. வகுப்புறைப் பாடங்கள் இணைய வழியே நடத்தப்படுகின்றன. பாடசாலைகள், பல்கலைக்கழக படிப்பு என்பது பாடங்களை மட்டும் தெரிந்துகொள்வதற்கானது அல்ல, மற்றவர்களுடன் பழகுதல், நிகழ்வுகளில் ஒன்றிணைதல், சமூகத்தைப் புரிந்துகொள்ளல் போன்ற அனுபவங்களையும் உள்ளடக்கியது.

 அந்தவகையில் கடந்த ஒன்றரை ஆண்டுகாலத்தில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் வழியிலான அனுபவத்தை மாணவர்கள் இழந்துள்ளனர். அப்படியென்றால், லட்சக்கணக்கில் பணம் செலவழித்து வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்களின் நிலைமைதான் என்ன? அவர்களுக்கும் இணைய வழியில்தான் வகுப்புகள் என்றால், வெளிநாடு சென்று படிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?' என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கலாம். இந்தத் தர்க்கத்தின் அடிப்படையில், இனி வரும் காலங்களில் இலங்கையிலிருந்து வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறையும் என பலரும் கூறினர். ஆனால், சமீபத்திய செய்திகள் நமக்கு வேறொரு உண்மையைச் சொல்கிறது.

05 September 2021

யார் பொறுப்பு? விவசாயி – நுகர்வோர் - அதிகாரிகள்.

இன்று நாடு முடக்கப்பட்டிருக்கின்றது, வர்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, இருப்பினும் சாதாரண மக்கள் இவற்றினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அரசாங்கம் பலவகையிலும் அழுத்தங்களுக்கு உள்ளாகி வருகின்றது. 

உண்மையில் என்ன நடக்கின்றது? விவசாயிகள் எந்தவித தடையுமின்றி விவசாயத்தில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது விவசாய உற்பத்திகளை தங்குதடையின்றி கொண்டுசெல்லவும் அவற்றைச் சந்தைப்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

13 August 2021

நாங்கள் மீண்டும் மீண்டு திரும்ப முடியாத நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்,

அரசாங்கம் கடைசி முயற்சியாக மட்டுமே நாட்டில் முடக்குதலை விதிப்பதாக கூறியது. அதன் பொருள் என்னவென்றால், நாடு இதுவரை முடியாத இறுதி நிலைக்கு வரவில்லை என்பதுதானே. இருப்பினும், கோவிட் தொடர்பான இறப்புகள் இப்போது தினசரி சராசரியாக 150 ஐத் தாண்டிவிட்டன, மேலும் குறிப்பாக டெல்டா வைரஸ் திரிபுகளின் எண்ணிக்கைப் பதிவு மோசமாக இருக்கின்றது மறுபுறும். 

அரசாங்கத்தின் நம்பிக்கை மற்றும் சில நிபுணர்களின் ஆலோசனை என்னவெனில், இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்த சிறந்த வழி பொதுமக்களுக்கான தடுப்பூசியினை துரிதப்படுத்துவதாகும். இது நாட்டினை முடக்குவதற்கான எந்த தேவையினையும் ஏற்படுத்தாது என கருத்திடுகின்றனர், அதனால் அதனை துரிதப்படுத்தி வருகின்றனர் அது வரவேற்கத்தக்கதுதான்.

11 July 2021

நல்ல சிந்தனைகளே வெற்றிக்குக் காரணம்

நாம் இன்று புதிய மாற்றமடைந்த உலகில் காலடி எடுத்து வைத்திருக்கின்றோம். அதற்கு தகுந்தாற்போல் நாம் மாறாவிட்டால் இந்த உலகின் கடைசி இருக்கையிலே தான் இருக்கநேரும். நாம்  புதிய புதிய வழிமுறைகளை பரீட்சித்து முன்னேற வேண்டும். அது காலத்தின்தேவை. அதனால் இன்றைய உலகம் வர்த்தகத்தினை அதுவும் இன்னோவேற்ரிவ் விசினஸினை முன்னிலைப்படுத்தி அதற்கான கல்வியை திறனை வழங்கி வருகின்றது.

சரி இதற்காக, விரிவான சிந்தனை, தெளிவான சிந்தனை, தொலைநோக்கு சிந்தனை என நிறைய முறை படித்திருப்பீர்கள். அது என்ன தெளிவான சிந்தனை? திட்டமிட்ட சிந்தனை?

13 June 2021

கொரோணாவின் கொடூரம் மாதவிடாய்க்குத் தெரியுமா?

இன்று பலர் பல 'சொல்லொண்ணாக்' கொடுமைகளை இந்த மூடிய காலத்தில் அனுபவித்த வருகின்றனர். அதை நீங்கள் அறியாமல் இல்லை. ஆனால் இந்த நெருக்கடி ஏழை பணக்காரர் எனப் பார்க்காமல் அதிகாரமுள்ளவர் அற்றவர் என நோக்காமல் சுழட்டிச் சுழட்டி அடிக்கின்றது.

இருந்தாலும் எதிலும் துவண்டுபோகக்கூடிய நலிவுற்று நசிந்து போகக்கூடிய மிக பின்தங்கிய சமுகம், மக்கள் கூட்டம் இலங்கையில் இருக்கின்றார்கள். அவர்களால் நீங்கள் ஒன்லைன் மூலம் வழங்குகின்ற கல்வியைப் பெறமுடியாது, அன்றாடத் தொழில் இன்றி அரைவயிரைக்கூட நிரப்பமுடியாது, வக்சினையும் வசதிவாய்பையும் பெற்று கொரோணாவுக்கு தப்பவும் முடியாது. 

05 June 2021

இணையவழிக் கல்வி மாணவர்களுக்கு சாத்தியமா சங்கடமா!

S.Thanigaseelan;
அறிமுகம்: இன்று கொவிட் -19 வைரஸின் தாக்கம் உலகெங்கும் பரவலாகி அச்சுறுத்தி வரும் வேளையில், இலங்கையிலும் தாக்கத்தை வலுவாகக் காட்டிவருகிறது. கடந்த மே மாதத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை இன்று வரை நீடித்து பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்விக் கல்லூரிகளை வழக்கமான முறையில் செயல்படாத சூழலுக்குத் தள்ளிவிட்டது. இதனால் ஏனைய துறைகளினை விடவும் கல்வித்துறை பாரிய இடர்களை எதிர்கொண்டு வருகின்றதை நாம் அனைவரும் அறிவோம். 

சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தில் நாம் நினைவில் கொள்ளவேண்டியவை.

சுற்றுச்சூழல் அமைப்புகள் என்பது தாவரங்கள், விலங்குகள் மற்றும் மக்கள் மற்றும் அவற்றின் சுற்றுப்புறங்களான இயற்கை, நகரங்கள் மற்றும் தோட்டப்புறங்கள் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பினைக் குறிக்கும் (ஐ.நா., 2021). மிக நீண்ட காலமாக, மக்கள் நமது பூமியின் சுற்றுச்சூழல் அமைப்புகளை சுரண்டிக்கொண்டும் மற்றும் அழித்தும் வருகின்றனர், இதனால் இயற்கை வாழ்விடங்கள் மற்றும் அதனோடுயைந்த ஏனைய வளங்கள் என்பன இழக்கப்படுகின்றன, இது எம்மிடையே காலநிலை நெருக்கடியை மிகத்தீவிரப்படுத்துகிறது. நாம் அனைவரும் நம் உயிர்வாழ்வதற்கு ஆரோக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புகளையே சார்ந்து இருக்கிறோம் என்பதனை மறந்துவிடலாகாது.