கோவிட் தொற்றுநோய் காரணமாக, இலங்கையர் மாத்திரமல்ல உலகக் கல்வி குறிப்பிடத்தக்க அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் கூற்றுப்படி, கிட்டத்தட்ட இருநூறு கோடி மாணவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவற்றுக்கு தீர்வாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்லைன் கல்வி அனைத்து நாடுகளிலும் வெற்றிபெறவில்லை. கோவிட் தொற்றுநோய்களின் போதும் வளர்ந்த நாடுகள் பாடசாலைகளை பாதுகாப்பான வழிகளில் நடாத்தின. நம் நாடும் அவ்வப்போது பாடசாலைகளை; திறந்தது. புpன்னர் அவை மீண்டும் மூடப்பட்டது. வாரத்தில் மூன்று நாட்கள் பாடசாலைகள் நடத்துவதுதான் கடைசி பரிகாரமாக இருந்தது. அதன் பின்னரே ஐந்து நாட்களும் பாடசாலைகளை நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
எனவே வெறும் பௌதீக வளங்கள் மட்டும் ஒரு நாட்டை அபிவிருத்தி செய்யாது. ஒரு நாடு செழிப்பாக மாறாது பிரேசில் பல வளங்களைக் கொண்ட நாடு. இந்தோனேசியாவும் நைஜீரியாவும் பல பௌதீக வளங்களைக் கொண்ட மாநிலங்களாகக் கருதப்படுகின்றன. ஆனால் அந்த நாடுகளின் மனித வளம் வளர்ச்சி அடையவில்லை. இன்றும் அந்த நாடுகள்; வளரும் நாடுகளாகவே கருதப்படுகின்றன. ஆனால் சிங்கப்பூரும் ஜப்பானும் வளர்ந்த நாடுகள். மனித வளத்தால் அந்த மாநிலங்கள் வளர்ச்சி அடைந்துள்ளன. ஜப்பானைப் போலவே சிங்கப்பூரிலும் மேம்பட்ட கல்வி முறைகள் உள்ளன. வெளிநாட்டு மாணவர்களும் அந்த நாடுகளில் படிக்கின்றனர். கல்வியும் ஒழுக்கமும் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாகக் கருதலாம்.
ஒரு நாட்டிற்குத் தேவையான கல்விக் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் அந்த நாட்டாலேயே தயாரிக்கப்படுகின்றன. ரஷ்யாவில் கல்வி முறை லெனினின் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. சீனாவில் கல்வி என்பது மாவோ சேதுங்கின் பார்வையை அடிப்படையாகக் கொண்டது. அவை சோசலிச கல்வி முறைகளாகக் கருதப்படுகின்றன. இந்தியாவின் கல்விக் கொள்கைகளின் அடித்தளம் மகாத்மா காந்தியின் தத்துவத்தால் வடிவமைக்கப்பட்டது. இலங்கையில் இலவசக் கல்வி முறை உள்ளது. அதன்படி, அரிவரி முதல் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இலவசக் கல்வி இருக்கும் நாடுகளில்; நமது நாடு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
நாம் ஒரு முக்கிய விடயத்தினை கவனிக்க வேண்டும், முன்பு எத்தகைய நெருக்கடிகள் வந்தாலும் நாட்டின் கல்வியில் பின் தங்கியிருக்கவில்லை. முப்பது வருட யுத்தம் நடந்தாலும், கல்வி முறைப்படி நடந்தது. வடக்கில் பயங்கரவாத குழுக்கள் கூட கல்விக்கு இடையூறு செய்யவில்லை. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் கல்வியின் அவசியத்தையும் மதிப்பையும் உணர்ந்து செயல்படுவதனை நாம் காணலாம். ஆனால் கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடியின் போது நிலைமை முற்றாக மாறியது.
தவிர்க்க முடியாத காரணங்களால், கல்வி பின்தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டது. ஆரம்பக்; கல்விதான் மிகவும் சேதமடைந்தது என்று சொல்லலாம். ஆசிரியர் மற்றும் மாணவர் சமூகம் இடையே நேரடி உறவு இல்லாமல் சிறுவர்களுக்காக கல்வியை முன்னேற்றுவது கடினம்.
இத்தகைய கல்வி வீழ்ச்சிக்கு காரணமான முக்கிய காரணிகளில் ஒன்று எரிபொருள் நெருக்கடி. எரிபொருள் பற்றாக்குறையால், போக்குவரத்து வசதிகள் மோசமாக இருந்தன. பாடசாலை வேன்கள், பேருந்துகள் நிறுத்தப்பட்டன. பொது போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், ஆசிரியர்களின் வருகையும் பாதிக்கப்பட்டது. இதுவரை, எரிபொருள் பிரச்சினை போதுமான அளவு தீர்க்கப்பட்டுள்ளது. கல்வியில் சிறப்பு கவனம் செலுத்தி எரிபொருளை விநியோகிக்கும் முயற்சியையும் அரசு மேற்கொண்டு வருகிறது. எனவே, இன்று ஐந்து நாட்களும் பாடசாலைகளை நடத்துவது புத்திசாலித்தனமான முடிவாகக் கருதலாம்.
எனவே இங்கு அதிபர்கள் மற்றும் கல்விப் பணிப்பாளர்களுக்கு விசேட பொறுப்பு உள்ளது. அதாவது போக்குவரத்து சிரமங்கள் மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு கலந்துரையாடி தீர்மானங்களை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. கல்வித்துறையைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் இந்த முடிவை விமர்சிக்கலாம். ஆனால் தற்போதைய நிலவரப்படி இதற்குப் பதிலாக வேறு எதுவும் செய்ய முடியாது. சிரமங்கள் இருந்தாலும் கல்வி மேம்படுத்தப்பட வேண்டும். அதற்கு அனைத்துத் துறைகளின் ஆதரவும் கிடைக்க வேண்டும். முப்பது வருட யுத்தத்தின் போது பெற்றோர்கள் பாடசாலைகளை கட்டிக் காக்க வந்தனர். இவ்வாறான நிலையில் கல்விக்காக பெற்றோர்கள் தங்களை தியாகம் செய்வது முக்கியம். பொருளாதார ரீதியாக நலிவடைந்த நாட்டை மீட்க ஒவ்வொரு குடிமகனின் அர்ப்பணிப்பு மிகவும் முக்கியமானது.
0 comments:
Post a Comment