துள்ளி வருகும் தேரில்
தோகை மயில் முருகன்
துள்ளி வருகும் தேரில்
தோகை மயில் முருகன்
அண்ணன் வருவானடி
மயிலே ஆறுதல் தருவானடி
அண்ணன் வருவானடி
மயிலே ஆறுதல் தருவானடி
மயிலே ஆறுதல் தருவானடி
மயிலே ஆறுதல் தருவானடி
கொம்புச் சந்தி ஆலயத்தின்
கோபுர அழகு கண்டு
கொம்புச் சந்தி ஆலயத்தின்
கோபுர அழகு கண்டு
கும்பிட்டு நின்றேனடி
மயிலே நம்பிக்கை தந்தானடி
கும்பிட்டு நின்றேனடி
மயிலே நம்பிக்கை தந்தானடி
தேன் ஊரின் மத்தியிலே
தெள்ளு தமிழ் பண்ணிசைக்க
பண்ணிசைக்க
பண்ணிசைக்க
தேன் ஊரின் மத்தியிலே
தெள்ளு தமிழ் பண்ணிசைக்க
தேரோட வந்தானடி
மயிலே திசை எட்டும் அவன்தானடி.
மயிலே திசை எட்டும்
அவன்தானடி.
நீரோடும் நாட்டில் இன்ப
தேரோடும் காட்சிகாண
பாரோடும் பின்னாலடி
மயிலே பரவசம் என்ன
சொல்ல
மயிலே பரவசம் என்ன
சொல்ல
காவடி தோழில் தூக்கி
தூக்கி
கற்பூரம் கையில் ஏந்தி
ஏந்தி
சேவடி தொழுவாரடி
தொழுவாரடி
சிந்தையில் மகிழ்வாரடி
மயிலே சிந்தையில் மகிழ்வாரடி
காவடி தோழில் தூக்கி
கற்பூரம் கையில் ஏந்தி
சேவடி தொழுவாரடி
மயிலே சிந்தையில்
மகிழ்வாரடி
புஷ்பத் திரு விழாவும்
கணேஷா
கற்பூரப் பெரு விழாவும்
முதல்வா இறைவா
புஷ்பத் திரு விழாவும்
கற்பூரப் பெரு விழாவும்
கஷ்டங்கள் களையுமடி
மயிலே கலையின்பம் சேருமடி..


0 comments:
Post a Comment