ADS 468x60

31 October 2011

நீயும் நானும்..



பிடித்திருக்கு பிடித்திருக்கு
புரியவில்லை ஏனென்று...
காற்றை அழைந்து
கதைத்த நிமிடங்கள்
வலைத் தளத்தில்
வளைத்த வார்த்தைகள்

பக்கத்தில் வந்து
வெட்கித்த சாயல்கள்
பள்ளிப் பிள்ளைபோல்
பார்த்த பார்வைகள்

கல்யாணத்துக்கு நாள்
குறித்த நினைவுகள்
காது வலித்தும்-செல்லில்
கரைந்த காலங்கள்

எரிமலையாய் எழுந்த கோபம்
இதமாக விழுந்த பார்வை
பிடித்திருக்கு பிடித்திருக்கு
நீயும் நானும்
நிஜத்தில் வாழ....

26 October 2011

தீப திருநாள் வாழ்துகள்



விட்டிலுக்கு விழக்கு ஒளி
வீட்டுக்கு தீபம் ஒளி
தொட்டிலுக்கு குழந்தை ஒளி
தொடர்இருளில் கதிர் ஒளி

வாழ்க்கைக்கு கல்வி ஒளி
கல்விக்கு கற்றோர்  ஒளி
வாடுவோர்க்கு அன்பு ஒளி
வானமெங்கும் நிலா ஒளி

கண்ணுக்கு கருணை ஒளி
கயவர்க்கு ஞானம் ஒளி
காற்றுக்கு ஜீவன் ஒளி
காதலுக்கு உன்மை ஒளி

துன்பத்தில் நட்பு ஒளி
துணையான மனைவி ஒளி
இன்பத்தில் செல்வம் ஒளி
இனித்திடும் தீபாவளி ஒளி ஒளியே!

15 October 2011

நல்லொரு கூத்து

உலகத்தின் செம்மொழி அந்தஸ்த்து பெற ஒரு மொழிக்கு எத்தனையோ தகுதிகள் வேண்டும் அத்தனையும் தன்னகத்தே கொண்டு நாம் வாழும் போதே தழிழனாய் பிறந்தேன், என்ற பெருமை கொள்ள வைக்கும் எங்கள் அழகு தமிழுக்கு அழகு சேர்க்கும் தழிழ் இலக்கிய விழா கிழக்கு மண்ணின் முக வெத்திலையாக இருக்கும் மீன்பாடும் தேன்நாட்டில், கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், காணி, காணி அபிவிருத்தி போக்குவரத்து அமைச்சின் ஏற்ப்பாட்டில் நடாத்தப்படுவது பாராட்டபட வேண்டியது' என கிழக்குப்பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி பிறேம்குமார் நிகழ்வுகளின் இடையே நிறுவிக்காட்டினார்.

ஒரு இனம் நீண்டிலங்க அதன் கலை, கலாசாரம், பண்பாடு, மொழி இந்த நான்கு சக்கரங்களும் தேவை. மூன்று தசாப்த கால யுத்தத்தின் கோரப்பிடியில் கை நழுவிய எமது இனத்துவ அடையாளங்கள், இன்று மின்னல் போல் ஆங்காங்கு பளிச்சிட்டு மறைந்தாலும,; அவை மின்னத் தொடங்கி இருக்கிறதை நினைத்து பெருமை தான்.

02 October 2011

வயோதிபத்துக்கு எறும்புகள் கொடுக்கும் கௌரவம்.


'உழைத்து வாழவேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே' என்பது என்னவோ மனிதனுக்கு மட்டுமல்ல, எமக்கெல்லாம் உதாரணமாகத் திகழும் கடினமாக முயற்சியுடன் ஓயாது உழைக்கும் எறும்புகள், தேனீக்கள் போன்ற ஜீவன்களுக்கும் சேர்த்துத்தான் என எண்ணத் தோணுகிறது.

முதியோர்கள் இனிக்கும் அடிக்கரும்பு, கடைந்தெடுத்த வெண்ணை, கனிந்து வந்த பழுத்த பழங்கள், காற்றும் மழையும் கடந்த வந்த அனுபவக்கப்பல்கள் அவர்கள் ஞானிகள், வழிகாட்டல்கள் இன்னும் எல்லாம் அவர்களே. ஆதனால்தான் அவர்கள் கனம் பண்ண வேண்டியவர்களாக உலகலாவிய ரீதியில் ஞாபகப் படுத்தப்படுவது பெருமைக்குரியது.

மனிதர்கள் ஒன்றும் புத்திஜீவிகளாக, கலைஞர்களாக, உழைப்பாளியாக பிறப்பவர்கள் அல்லர், மாறாக அவர்கள் அவ்வாறு உருவாகிக் கொள்கிறார்கள். நிறைய விடயஙந்கள் மனிதன் ஏனைய ஜீவாராசிகளிடம் இருந்துதான் கற்றுக் கொள்கிறான். இதனைத்தான் கவிஞ்ஞர் கண்ணதாசன் சொன்னார் 'பறவையைக் கண்டான் விமானம் படைத்தான், பாயும் மீன்களில் படகினைக் கண்டான்' என்று. 

நாம் எறும்புகளிடம் இருந்து கற்றுக் கொள்ளவேண்டிய ஒரு புதிய விடயம் என்ன தெரியுமா!

26 September 2011

யாழ் இசை வாணி.

பெரிய சமுத்திரத்தினை கிழித்து வரும் வெள்ளலைபோல் மனதில் பிரபாகித்த மகிழ்சிகள் ஒன்றா! இரண்டா! நெடு நாள் ஆசையின் நிறைவேற்றமாய் கூழாங் கற்களுக்கிடையே மாணிக்கம் போல் பாடும் சின்னக் குயில், நாதங்களின் பள்ளிக் கூடம், வேதங்களின் இசை கோலம், கீதங்களின் சொந்தக்காறி, வடக்கின் இசை வசந்தம், யாழ் வாணி 'ஆதித்தியா' பழிச்சென என்னை பார்த்து சிரிக்கிறாள். 

கண்டேன் கலை முகத்தினை ஆச்சரியத்தோடே, முழுசாய் இருந்த நான் தலை கால் புரியாமால் முக்காலாய் போனேன். 'நீங்கள் ஆதித்யாவா மா' என்றேன.

பட்டதாரிகள் படும் பாடு...



உலகத்தில் பொருளாதாரத்தில் வழர்ந்த காடுகள் எல்லாம் வாழ்வாதாரத்தில் தன் நிறைவுகண்டமையால் தான் என்பது வரலாறு. வாழ்வாதாரம் வளர வளங்கள் தேவை, வளம் இருந்தும் வளர முடியாத பல நாடுகள் இன்றும் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து முடியாமல் போகின்றது. இலங்கை இதற்கு ஒன்றும் சளைத்தது அல்ல. பொருளியல் கூறும் குறை; வறுமை, குடிநீர்ப்பற்றாக்குறை, வேலையின்மை, குறை வருமானம், உணவுத் தட்டுப்பாடு, அரசியல் ஸ்த்திரமின்மை, கடன் சுமை போன்ற இன்னோரன்ன.

கொழும்பின் சந்து பொந்துகள் எல்லாம் வந்து நிரம்பிய பட்டதாரிகள் பட்ட பாடுகள் பார்த்தேன், குழந்தையுடன் பல பெண்கள், குடுப்பத்துடன் சில பேர்கள், வலம் இடம் தெரியாமல் வந்திறங்கியோர் ஒரு தொகை, பஸ்சில் பயணம் செய்து இறங்குமிடம் துலைத்தோர் எத்தனைபேர், கண்விழித்து வந்து புண்பட்டோர் ஒரு புறம், பயணப்பை துலைத்து பரதவித்தோர், மொழி தெரியா முழிச்சவர்கள் என்று வேலை தேடி வேர்த்துப் போனவர்களை  எம் திருநாட்டில் பார்த்தேன்.

ஒருவர் கூறினார்

22 September 2011

முரண்......


நியாயம் அநியாயம் எல்லாம் இப்போ கதைக்கப்படுவது குறைந்துவிட்டது. கலியுகத்தில் நடப்பதெல்லாம் அநியாயம்தான், அல்லாது நன்மை செய்பவன் நாதியற்றுதான் கிடக்கிறான். இருப்பினும் எச்சசொச்சமாக நன்மை செய்பவர்களும் உளர். 

உள்ளம் என்பது ஆமை அதில் 
உன்மை என்பது ஊமை 
சொல்லில் வருவது பாதி 
நெஞ்சில் தூங்கிக்கிடப்பது மீதி.

ஆதலால் உள்ளம் ஆமைபோல் எல்லாவற்றயும் உள்ளே இளுத்து அடக்கி வைத்திருக்கிறது கண்டு கொள்வது சிரமம். நெஞ்சில் என்ன இருக்கிறது என்பதனை வாய் வார்த்தைகளை கொண்டு அறிய முடியவில்லை, நாடகமேடையில் நடிக்க வந்தவர்கள்போல் யதார்த்தத்துக்கு மாறாக நடிக்கிறவர்கள் அநேகம் அநேகம்.

03 September 2011

அதிர வைக்கும் ஆதித்யா குட்டி.

உலகத்தில் மிக விரும்பப்படுவது சிறுவர்கள் அவர்களுடைய ஆக்கங்கள், செயற்ப்பாடுகள் அதுபோல் எல்லாமே. என் வாழ் நாளில் ஏன் எல்லோரது வாழ்விலும் இந்த அளவுக்கு கவர்ந்த திறமையான அழகான செல்லக் குழந்தை ஆதித்யா என்று சொன்னால் அது ஒன்றும் மிகையல்ல. ஆதித்யா குட்டி உங்களுக்கு எனது தெய்வத்தின் ஆசீர்வாதம் என்றும் இருக்க வேண்டுகிறேன். 

சக்தி தயாரிக்கும் நிகழ்சிகள் அனைத்தும் ஏனோ எனக்குப் பிடிப்பதில்லை;   இருந்தும் சக்தியின் யூனியுர் சுப்புர்ஸ்ரார் நிகழ்ச்சியில் என்னை கவர்ந்த தெய்வக் குழந்தை ஆகித்யா தான்.

என்ன அசத்தலான குரல், என்ன அடக்கம், என்ன மரியாதை, ஞானம் இந்த சிறிய வயதில் எத்தனை பெரிய வளத்தை இறைவன் அவளுக்கு கொடுத்து இருக்கிறான் வார்த்தைகளில் சொல்ல முடியாத திறமைசாலி. எனக்கு இருக்கும் சின்னச் சின்ன ஆசைகளில் மிகப் பெரிய ஆசை ஆதித்யாவை சந்தித்து நேரில் ஒரு பாடலை பாடச் சொல்லி கேட்டு ரசிப்பதுதான்