ADS 468x60

27 October 2015

நல்லாட்சியில் கிடைத்த மழையோ!

மடை உடைக்கும் வெள்ளம்
நிரம்பியது பள்ளம்
நாட்டிலேதோ பிழை
நாளெல்லாம் மழை
கூழுக்கும் இல்லை வழி
கூறுவது யாரைப் பழி
மறுகாமறுகா பெய்யிது காட்டில்
மக்களெல்லாம் முடங்கினர் வீட்டில்
ஒரே இதுதான் வேலையாப் போச்சி
ஒழிப்பது எப்படி வறுமையை ஆச்சி
தோட்டமும் தொரவும் எங்களுக்கு ஆதாரம்
கிடைக்குமா வெள்ளத்தில் போன சேதாரம்
நாங்களும் நினைத்தோம் இது
நல்லாட்சியில் கிடைத்த மழையோ என்று
முள்ளிவாய்க்கால் முற்றுகைபோல்
அள்ளி வருகிறது ஆத்துவெள்ளம்
தவிர்க்க முடியாத ஒன்று
தவிக்கும் மக்களை நாம்தான் பார்க்கனும்
நேர்த்தியான தகவல் தேவை- அது
நேர்மையாய் உதவி அளிக்கும்

சும்மா எங்களை பார்ப்பவர் தமக்கு சுமைகள் தெரிவது இல்லை!

தமிழாய் பிறக்கவைத்தான்- தெருவில்
தனிமையில் நடக்கவைத்தான்
உறவை மறக்கவைத்து- எங்களை
ஊர் ஊராய் திரியவைத்தான்

அணைக்கும் அம்மா ஆருயிர் அப்பா
அனைத்தும் இழந்தே போனோம்!
உணவிடக் கூட உறவுகள் இழந்து
ஊனமாய் வாழ்க்கையில் ஆனோம்!!

வீடுகளெல்லாம் காடுகளாச்சி
வெளியே வாழ்க்கை போச்சி
சும்மா எங்களை பார்ப்பவர் தமக்கு
சுமைகள் தெரிவது இல்லை

பள்ளிக்கு செல்ல பார்ப்பவர் இல்ல
படிக்கிற நெலமையும் இல்ல
பசியில வாடிடும் நேரத்தில் கூட
பக்கத்தில் உறவுகள் இல்ல!!

நான் மானல்ல ஓட!













இந்தா வந்திட்டன் பொறுமா
இறங்கி வடிச்சி வாறன்
இறால்க் கூனி சுங்கான்
வறால் கெழுத்தி செல்வன்

மூத்த பிள்ளை நான்தான்
முழுதும் சுமக்கும் பெண்தான்
வீட்டுக்குள்ள இருந்தா
வெறும் பானை சோறிடுமா?

அச்சம் காட்டி என்னை
அறைக்கு உள்ளே பூட்டாதே
பயந்து போகும் மானைத்தான்
பாய்ந்து பிடிக்கும் புலி
நான் மானல்ல ஓட
மறுபடியும் பாயும் வேங்கை

09 August 2015

கொடுக்கிற மக்களுக்கு குடிக்க இல்லையா தண்ணீர்? மன்றாடும் உன்னிச்சை மக்கள்..

 மட்டக்களப்பு என்ற அழகுப் பெண்ணை வேலியாக காத்து நிற்கும் மக்கள் எமது எல்லைக் கிராமத்தவர்கள்தான். யுத்தம், அனர்த்தம், இருள், வறுமை, வேதனை என்னும் பேரிடிகளின் காப்பாக இருந்தவர்கள்,மழையிலும் வெயிலிலும் கல்லிலும் முள்ளிலும் கரத்தாலும் சிரத்தாலும் களனி செய்து உண்ணும்; சோற்றுக்கு நெல் விளைவிப்பவர்கள், மீனும் தேனும் பாலும் கூழும் பசிக்கு தருபவர்கள், வந்தோரையெல்லாம் வாழவைப்பவர்கள் என்ற அடைமொழியின் சொந்தக் காரர்கள், உபசரிப்பதில் உற்சாகமானவர்கள் இந்த உன்னிச்சை கிராம மக்கள்.

23 July 2015

போதையிலே பாதை மாறிப் போகாதே!

போகாதே தம்பி போகாதே – நீ
போதையிலே பாதை மாறிப் போகாதே
கண்ட கண்ட போதையெல்லாம் உண்ணுகின்றாயே –உன்
கடைசி நாளை விரலை விட்டு எண்ணுகிறாயே

நல்லவங்க போதையைத்தான் தொட்டதுமில்ல –அத
தொட்டவன லேசிலதான் விட்டதுமில்ல
பையில் உள்ள பணத்தையெல்லாம் போதை குடிக்குது –உன்
பரம்பரயே பசியிலதான் நாளும் துடிக்குது

குடும்பத்தையே தெருவினிலே கொண்டு வருகிது- இது
குடித்தவன அருகினிலே மரணம் நெருங்குது
உடும்பப்போல போதையை நீ இறுகப்ப பிடிப்பதால்- உனை
அடிமையாக்கி ஊருலகில் பெருமை குறைக்கிது

வேலியெல்லாம் பயிரை மேயும் கேலியினாலே –நம்ம
வீடுகளில் கூட ஒரு சுதந்திரம் இல்லே
நீதிகெட்டுப் போன நாட்டில் நிம்மதியில்ல –நல்ல
சேதிகெட்டு நாளும் நாளும் காது உடையிது

19 July 2015

மனிதன் வளமாக இல்லை

எம்மிடம் மனித வளம் இருக்கிறது ஆனால் மனிதன் வளமாக இல்லை. மனிதன் வளமாக இருக்க பயிற்ச்சியும், வழிகாட்டலும் தேவை. முன்னுக்கு செல்பவர்கள் பின்னுள்ளவரை கைவிட்டுச் செல்லும் பாணியிலான மனோபாவம் எம்மினத்தினரிடையே எப்போது மாறுமோ அப்போது நம் உறவுகள் இந்தக் கோலத்தில் இருக்க மாட்டார்கள். மனம் வைத்து மேம்படுத்துவோம்...
"மனித வள மேம்பாட்டின் நோக்கமானது மனிதவளத்தின் முழுமையை வளர்ப்பதற்காக அறிவூட்டுவதன் ஊடகவும் கல்வி, பயிற்சி சுகாதாரம் அனைத்து மட்டங்களின் ஊடாக வேலை வாய்ப்பு போன்றவற்றின் இணைந்த கொள்கைகளினால் பெறப்படுகின்ற ஒன்றாகும்.

04 March 2015

கையைக் கட்டி நில்லாதே!

கையைக் கட்டி நில்லாதே!
கண்டது எல்லாம் அஞ்சாதே!
குட்டக் குட்டக் குனியாதே தோழா!

வாழ்கை என்பது வட்டமடா
மேலும் கீழும் ஓட்டமடா
நீயும் ஒருநாள் மேலேவா தோழா!

இனி கவலைக்கு இடமில்லையே- பயமில்லையே
எங்கள் கழுத்தினில் விடமில்லையே- வியப்பில்லையே

உந்தன் வாழ்கையில் ஜெயிக்கும்வரை- நீ
கையைக் கட்டி நில்லாதே
கண்டது எல்லாம் அஞ்சாதே
குட்டக் குட்டக் குனியாதே தோழா!!

காடும் மேடும் உன்னோடு
கடலும் காற்றும் உன்னோடு
இறந்தும் இருப்போம் மண்ணோடு
இறக்கும் வரைக்கும் போராடு
கல்வியும் எமக்கொரு ஆயுதமே!
கைகளில் நீயெடு முன்னேறு
வறுமை எமக்கொரு தடையில்லையே- அட போராடு
இன்று மட்டும்தான் எமக்கு சொந்தம்
நேற்றையதை நினைத்து நீ வருந்தாதே!
மனங்கள் மட்டும் உறுதி கொண்டால்
மழை வெயில் எமக்கில்லை மனிதரில் பதரில்லை!

கையைக் கட்டி நில்லாதே!
கண்டது எல்லாம் அஞ்சாதே!
குட்டக் குட்டக் குனியாதே தோழா!

மேற்கே சூரியன் உதிக்காது
மேடைப் பேச்சும் உதவாது
வாக்கை அள்ளி வீசுவதால்
வாழ்க்கை ஒன்றும் உயராது....
ஒன்றாய் இருந்தால் ஜெயித்திடலாம்
உதவாக் கரைகளை ஒளித்திடலாம்
மக்கள் கூட்டம் விழித்து விட்டால்- அட அழியாது
நம்பி நம்பியே இழந்து விட்டோம்
நரிகளும் பரிகளும் புலியாச்சு
நம்பிக்கை மட்டும் நமது சொத்து
தடைகளை உடைத்திடு சரித்திரம் படைத்திடு..
கையைக் கட்டி நில்லாதே!
கண்டது எல்லாம் அஞ்சாதே!
குட்டக் குட்டக் குனியாதே தோழா!

வந்தவரை வாழ வைக்கும் மண்ணய்யா

வந்தவரை வாழ வைக்கும் மண்ணய்யா-நம்ம
மாநிலத்தில கிடைக்காதது என்னையா
கலைகள் எல்லாம் எங்களுக்கு மூச்சுங்க-ஒங்கள
ரசிக்க வைக்கும் மட்டக்களப்பு பேச்சிங்க