ADS 468x60

07 June 2019

புரட்சியை ஏற்படுத்துமா! புதிய தலைமைக்கான எதிர்பார்ப்பு. 01

மக்கள் எதிர்பார்கும் தலைமை

இன்று எம்மிடையே யாரிடமாவது தற்போது இலங்கையை ஆளுவதற்கான ஒரு பலமான தலைமை தேவையா? எனக் கேட்டால், ஆம் எனத்தான் பதில் வருகின்றது. 

இன்று நாங்கள் சுறுசுறுப்பாக ஓடியாடிக் கொண்டிருக்கும் தலைவர்களைப் பார்த்தால் உற்சாகம் பிறக்கிறது எமக்கு. பல பிரதேசங்களுக்கும் சுற்றி வருபவர்கள் என்றால், 'எல்லாமும் தெரிந்தவர்' என்பது போல் ஒரு மரியாதை பிறக்கிறது. அலுவலகமாக இருந்தாலும் , நாட்டை ஆளும் ஆட்சியாளர்களாக இருந்தாலும், அவர்கள் 'சிறந்த பேச்சாளார்களாக' இருந்து விட்டால் உச்சி மோர்ந்து கொண்டாடத் தொடங்கி விடுகிறோம்.

03 June 2019

கிழக்கின் தாகம்.


நாமும் ஒரு சிறுபான்மையினர், இதையெல்லாம்விடவும் எத்தனையோ கெடுபிடிகளை அனுபவித்து இழந்து இறந்து இன்னும் ஒரு கொடுமையின் நினைவில் வாழ்ந்து வருகின்றோம். இதனால் பல்லாயிரக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் நீதியின்றி சிறையிலும், காணாமற்போனோர் பெற்றோர் கண்ணீரிலும், நிலமும், நீரும் பார்த்திருக்க பறிபோய்க்கொண்டிருக்கும் ஆபத்தினைவிட வேறெதுவும் முன்னுரிமையான பிரச்சனையாக இருக்கின்றதா?

02 June 2019

பொறுப்பில்லாத தலைவர்களும் அடையாளம் இழக்கும் தமிழர்களும்.

சாதாரண அரச உத்தியோகத்தர் ஒருவர் அரசாங்கத்தில் வெறும் 30 ஆயிரம் தொடங்கி 50 ஆயிரம் வரை சம்பளம் எடுக்ப்பதற்கு வாராந்த, மாதாந்த, காலாண்டு மற்றும் வருடாந்த என்ற வகையில் முன்னேற்ற அறிக்கைகளை முறையாக சமர்ப்பிக்க வேண்டும். அரசில் மக்களின் வரிப்பணத்தில் அவர்களுக்கு சேவை செய்பவர்கள் பொறுப்புள்ள முறையில் வகைகூற என AR மற்றும் FR என பல சட்டதிட்டங்கள் இருக்கின்றன. 

ஆனால்; அரசியல்வாதிகளில் அதிகமானோர் மக்கள் இவற்றை அறியாதவாறு மூளைச் சலவை செய்யப்பட்டுவருகின்றனர். நான் ஒரு சவாலை விடுகின்றேன் அது முடியுமானால் ஐந்து வருடத்தில் அல்லது கடந்த தசாப்தத்திலாவது தமிழர்களால் தெரிவுசெய்யப்பட்ட, குறிப்பாக கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் அவர்களுடய முன்னேற்ற அறிக்கையினை எமது மக்களுக்கு காட்ட முடியுமா? 

"Won the toss Loss the Test" இலங்கையணி எப்போ வெற்றிபெறும்?

ஒரு காலத்தில் இலங்கை வீரர்களின் கிரிக்கெட் என்றால் அலாதிப்பிரியம். அப்போது உள்ள அனைத்து வீரர்களின் பெயரும் எமக்கு தெரியும் அளவுக்கு அவர்கள் உலகில் சிறப்பான வீரர்களாக இருந்து எம்மை மகிழ்ச்சிப்படுத்தினர். உலகக் கோப்பையினை போராடி வென்று எமக்கு பெருமை சேர்த்துத்தந்தனர்.

அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஒன்று அவர்களின் குழுவலிமை, ஒற்றுமை என்பனவற்றுடன் இன, மொழிகடந்து அனைத்து இனத்தினையும் பிரதிபலிக்கும் வீரர்கள் இருந்தனர். அத்துடன்  அனைவரையும் அரவணைத்து உற்சாகப்படுத்தும் தலைமைத்துவம், நிதானமான உணர்ச்சிவசப்படாத வீரர்கள் என அடுக்கிக்கொண்டு போகலாம்.

19 May 2019

இலங்கையில் சிங்களவரும் தமிழரும்-01.

விஜயன் காலம் இருந்து இன்றுவரை இரு சமுகத்துக்குமான ஒற்றுமை மற்றும் வேறுபாடுகள் பலவாறு பல சாஸ்த்திரங்கள், நுர்ல்கள் ஊடாக தெரியப்படுத்து வந்துள்ளது. சிவபக்தனான இலங்கை வேந்தன் இராவணன் ஆண்ட கால அளவுக்கு தமிழர்களது பூர்வீகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. என்ன சண்டை சச்சரவு இருந்தாலும் அவை அனைத்தும் அரசியல் இலாபம் கருதி உருவாக்கப்பட்டவையே தவிர வேறு ஒன்றும் இல்லை. பல கசப்பான காலப்பகுதிகள் எம் கண்முன்னே தோன்றி மறையாமல் இல்லை. இருப்பினும் பல புரிதலும் ஒற்றுமைகளும் இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கின்றன. அவற்றை தேடி வளர்த்தெடுக்கவேண்டிய காலத்தனை நாம் உருவாக்கிக் கொள்ளவேண்டும்.

16 May 2019

முள்ளிவாய்க்கால் முடிவல்ல! போராடு இந்த எழில் தேசத்தைக் கட்டியெழுப்பலாம்.

நான் யுத்தத்தின்பின், கொடுமையான போரின் அனல் சற்றும் மாறாத தமிழ் மாவட்டங்களில் நேரடியாக மக்களுடன் வேலை செய்து, இம்மக்களின் தேவை, வேதனை, வலிகள் மற்றும் ஏனைய பிரச்சினைகளை ஒன்றாய் வேலை செய்து அறிந்தவன் என்ற முறையில் இக்கட்டுரையை உரிமையுடன் வரைகின்றேன். 

அழகிய இலங்காபுரியின் வடக்கே வன்னி நிலத்தின் நடுநாயகமாக விளங்கும் 'வடக்கின் நெற்களஞ்சியம்' என கிளினொச்சி மாவட்டம் புகழ்தேத்தப்படுகிறது. இதன் அழகை 
'விழிகளில் வன்னி நிலம் அழகள்ளிச் சொரியும்
வேரில்லாச் செடியைப்போல் மயிலாடித் திரியும்
எழில் தோய்ந்த கிளினொச்சி வயல்கள் குலுங்கும்
எங்கும்; தமிழ் மணம் இன்பம் பரப்பும்' 

12 May 2019

அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.

இது காலத்துக்குப் பொருத்தமான ஒரு கூற்றாகும். அதாவது 'ஆட்சி செய்வதில் தவறிழைத்தவர்களை அறம் தண்டிக்கும்' என்பது இதனது பொருள். இது தமிழிலுள்ள ஐம்பெருங்காப்பியங்களில் முதன்மை பெறும் சிலப்பதிகாரத்தில் உள்ள ஒரு சாராம்சம். நமக்கு தெரியாமல் அரசியலில் தவறு செய்தாலும் அதனை அறத்தின் வழியில் தண்டிக்கப்படும் அதனால் மன்னனும் மதுரையும் எரிந்து சாம்பராகியது. ஆனால் தெரிந்து, திட்டமிட்டு நமக்கெல்லாம் தெரியாமல் மக்களை மடையர்களாக்கி அரசியலை பாவித்து அடித்து நொறுக்குபவர்களும் இருக்கின்றனர். அவர்களை அவர்கள் செய்த ஊழ்வினை கைவிடாது. இந்த கண்ணகி விழாக்காலத்தில் இவற்றை தொடர்புபடுத்தி இந்த கட்டுரையை வரைகின்றேன்..

11 May 2019

மருந்தும் விருந்தும் மட்டக்களப்பிலல்லோ இருக்குதப்பா!

வசந்த காலம் வந்தால் ஐம்புலனுக்கும் விருந்துதான் கேளுங்கோ!. பூத்துக்குலுங்கும் மரங்கள் கண்களுக்கு விருந்து, அதில் புதிதாய் வரும் மணம் மூக்கினிற்கு விருந்து, காத்துக்கிடக்கும் தேனீக்கள் கள்ளையுண்ணும் சப்தம் காதினிற்கு விருந்து, கனிந்து கிடக்கும் பழங்கள் எங்கள் நாவினிற்கு விருந்து, காவடியும் காவியமும் கற்பூரச்சட்டிகளும், சேவடியைப் பணியும் திருப்தியும் மெய்யினிற்கு விருந்து அதுவே சொர்க்கத்தின் மருந்து.