இந்நாட்களில் பெய்துவரும் அடைமழையானது மக்களுக்கும், பயணிகளுக்கு மிகவும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் விடயமாக மாறிவிட்டது. மாலை நேரங்களில் திடீரென பெய்யும் இம்மழையினால் வீதிகளில் வெள்ளம் ஏற்படுவதோடு நீண்ட நேர போக்குவரத்து இடையூறையும் ஏற்படுத்துகின்றது. இவ்வாறு தடைப்பட்ட வீதிகளானது பயணிகளுக்கு தங்களுடைய வீடுகளுக்கான வழியை கண்டுபிடிப்பதே சாத்தியமற்றதாக மாற்றுகிறது. இலங்கையின் மழைவீழ்ச்சி ஒழுங்கானது மாற்றமடைவதோடு காலநிலையால் பாதிப்படையும் நாடுகளில் ஒன்றாக இலங்கையும் கருதப்பட்டு வருகின்றமயால் இன்று நாம் காலநிலை நெகிழ்திறனுடன் கூடிய உள்கட்டமைப்பு அமைப்பு பற்றிய தீர்வுகளை எடுக்க வேண்டும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றது.
22 December 2019
21 December 2019
ஒற்றுமை வளர்க்கும் கி.ப.க நண்பர்களின் ஒன்றுகூடல்
ஒரு குழந்தை கனவானாகவோ, சீமாட்டியாகவோ இருக்கும்படி செய்வது கல்வியல்ல; நல்ல மனிதனாக இருக்கச் செய்வதே கல்வி!
-ஹெர்பர்ட் ஸ்பென்ஸர்
எனும் நல்வாக்கியத்துடன், இன்றய நாளில் நாம் பல விடயங்களுக்காக ஒன்றுகூடவேண்டியிருக்கிறது.
நமது வாழ்க்கை வட்டத்தில் ஒன்று சேர்ந்து பல்கலைக்கழகத்தில் கற்று இன்று ஒன்றரை தசாப்தம் கடந்து பல அனுபவம், கல்வி, திறன் மேம்பாடுடையவர்களாக ஒன்றுகூடியிருக்கின்றோம். இந்த ஒன்றுகூடல் எம்மை பனியிலும், வெயிலிலும், காட்டிலும், மேட்டிலும் கஷ்ட்டப்பட்டு உழைத்த வரிப்பணத்தில் நாம் இன்று இலவசமாகப் பயின்றவர்கள். இன்று நாம் ஊதியத்துக்காக மக்கள் பணியென செய்யும் வேலை தவிர, எமது சமுகத்துக்கு பிரதியுபகாரம் இன்றி எதை நாம் செய்துள்ளோம்? எனச் சிந்திக்க வேண்டிய உன்னத தருணத்தில் சிந்திக்கத் தூண்டியுள்ளது.
05 December 2019
பொருளாதார முன்னகர்வில் புதிய அரசிக்கு இருக்கவேண்டிய கருசனை என்ன?
புதிய ஜனாதிபதியும் அமைச்சரவையும் அவர்களுக்கு முன் பல சவால்களை எதிர்கொள்கின்றனர் , ஏனெனில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்கள் வரையில் அவர்கள் ஒரு சிறப்பான நிர்வாகக் கட்டமைப்பை கட்டியெழுப்ப வேண்டிய தேவை காணப்படுகின்றது . அவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்று, இலங்கை மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வேலைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதாகும்.
சர்வதேச தொழிலாளர் அமைப்பு ILO (ச.தொ.அ) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, வளர்ச்சியடையாத மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் மொத்த வேலைவாய்ப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு சிறிய பொருளாதார அலகுகளால் வழங்கப்படுகிறது, அதாவது கொள்கை வகுப்பாளர்கள் இந்த அலகுகளை பொருளாதாரத்தின் மையப் பகுதியாகவும், சமூக மேம்பாட்டு உத்திகளாகவும் கருத வேண்டும்.
24 November 2019
கி.ப.க.பழைய மாணவர்கள் -டெங்கு நோய் குறைப்பு விழிப்புணர்வு
இன்று இலங்கை முழுவதும் ஆபத்தான பேசுபொருளாலாக இருப்பது ஆட்கொல்லி நோயாக அடையாளங்காணப்பட்ட 'டெங்கு நோய் தொற்று' பற்றிய பேச்சாகும். 2018 சென்ற வருடத்தின் 12 மாதங்களிலும்; சேர்த்து 51,659 சந்தேகப்படும் டெங்கு நோய்களும், தீவு பூராகவுமுள்ள எல்லா நோய்பரவுகை கட்டுப்பாட்டியல் அலகிற்கு அறிக்கை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த வருடத்தின் நொவம்பர் மாதத்தில் மாத்திரம் 73601 சந்தேகப்படும் டெங்கு நோயாளிகள் அடையாளங் காணப்பட்டிருப்பது மிகப்பெரிய ஆபத்தாக பதிவாகியுள்ளது.
இந்த ஆபத்து மட்டக்களப்பு மற்று கிழக்கு மாகாணத்தின் ஏனைய பகுதிகளுக்கும் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. பருவகால மழை ஆரம்பித்துள்ள இந்த வேளையில் இதன் பரவல் தீவிரமடைந்து வருகின்றது என அறிக்கை தெரிவிக்கின்றது.
18 November 2019
புதிய ஜனாதிபதியிடம் மக்களின் நியாயமான வேண்டுதல்!
நாம் இன்று ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து 80 விகித வாக்களிப்பை நாட்டில் வழங்கி ஒரு புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுத்த பெருமைக்குரிய குடிமக்களாக இருக்கின்றோம். எனவே புதிதாக பதவியேறறிருக்கும் இருக்கும் எமது நாட்டின் ஜனாதிபதி அவர்களே உங்கள் செயற்பாடுகளை நாம் நம்புகின்றோம். புதிதாக உங்களை வாழ்த்துகின்றோம். இன்று ஜனாதிபதியாவதற்கு மக்கள் தமது கடமையையை நிறைவேற்றியுள்ள நிலையில் மக்களின் வேண்டுதலை ஜனாதிபதி அவர்கள் நிறைவேற்றும் நேரமிது. பாமர மக்கள் அவரிடம் எதிர்பார்த்து நிற்கும் வேண்டுதல்களை அவர்களில் ஒருத்தன் என்றவகையில் அவற்றை முன்னுரிமைப்படுத்தி இங்கு வேண்டுதல்களாக முன்வைத்துள்ளேன்.
17 November 2019
இலங்கையின் புதிய ஜனாதிபதியும் முன்னே உள்ள சவால்களும்.
வணக்கம், தேர்தலுக்கான நாட்களை எண்ணிக்கொண்டிருந்தோம், இப்போது அது முடிவடைவடைந்துவிட்டது. நாட்டின் எட்டாவது புதிய தலைவரை அமோக வாக்குவீதத்தில் வெற்றிபெறச் செய்துள்ளனர். அதற்கு முதலில் வெள்ளிச்சரம் தனது உளம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுகின்றது.
நாடும், நாட்டு மக்களும் பல இன்னல்களை சந்தித்து, கடந்த அரசாங்கத்தை வெறுத்து அந்த வெறுப்பினை கோபத்தினை புதிய கட்சி, புதிய வேட்பாளர் ஒருவரை தெரிவுசெய்வதன் ஊடாக தீர்த்துள்ளனர்.
08 November 2019
மட்டக்களப்பு மற்றும் யாழ்பாணம்: இனத்தால் ஒன்றானாலும் தேவையால் மாறுபட்டவர்கள்- ஐனாதிபதி தேர்தல் 1982-2015.
ஆய்வுக்கட்டுரை
பின்புலம்.
பின்புலம்.
வடகிழக்கில் உள்ள தமிழ் வாக்காளர்கள் பல தேர்தல் சூழலை கடந்து வந்த அனுபவசாலிகள். பல விதமான தேர்தல்களை பலவிதமான மனிதர்களுடன், கட்சிகளுடன், கொள்கைகளுடன், அதனால் நாம் இத்தனை காலமும் வடக்குடன் ஒப்பிடும்பொழுது மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தின் கடந்துவந்த தேர்தல் களம், முற்றிலும் மாறுபட்டது, இந்த ஆண்டு ஒரு புதிய ஐனாதிபதியினையும் அடுத்த ஆண்டு ஒரு புதிய பிரதமரினையும் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு வாய்ந்த ஒரு கூட்டமாக வாக்காளர்கள் பார்க்கப்படுகின்றனர்.
வேறுபட்ட வாக்குப் பதிவுகள் கீழுள்ள அட்டவணையில் ஆண்டு மற்றும் மாவட்டம் கட்சி என்ற ரீதியில் தரப்பட்டுள்ளது
05 November 2019
விவசாயிகளின் குரல்வளையை நசிக்கும் வெட்டுவாய்ப் பிரச்சாரம்.
இன்று ஒரு புதிதான சற்று விசனமான செய்தி ஒன்று பரவி வருவதனைப் சமுகவலைத் தளங்களில் பார்க்ககூடியதாக இருக்கின்றது. அது, திடீரென வந்த காட்டுவெள்ளம் காரணமாக இம்முறை மட்டக்களப்பில் செய்கை பண்ணப்பட்டுள்ள 150,000 ஏக்கர் வயல் நிலங்களில் கிட்டத்தட்ட 20-30 வீதம் வரையான வாவிக்கரையை அண்டிய வெறும் ஓரிருவார இளம் வேளாண்மைப் பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளமை அனைவருக்கும் தெரிந்ததே.
இவற்றின் மூலம் இந்த வெள்ளநீர் ஆரம்பத்திலேயே வடிந்து ஓடாவிடின் எமது மாவட்ட விவசாயிகள் பெறும் சுமார் 20-30 வரையான மெற்றிக்தொன் விளைச்சல் பாதிக்கப்படலாம் என்பது எனது கணிப்பு.








