இன்று மக்கள் பாரிய சவால்களை எதிர்கொண்டு வாழ்வாதாரம் முதற்கொண்டு தமது வாழ்க்கைக்கே ஆதாரம் இல்லை என்ற நிலையில் இலெட்சக்கணக்கான மக்கள் வீட்டில் முடங்கிய நிலையில் புத்தாண்டு பிறக்க இருக்கின்றது. ஆனால் வெறுமனே தமக்கிடையே பாரம்பரிய புத்தாண்டு வாழ்த்துக்களை மாத்திரம் தொலைவில் இருந்து தொலைபேசியில் பரிமாறிக்கொள்ளும் புத்தாண்டு வாழ்த்துக்கள் மூலம் ஒரு மகிழ்ச்சி ஊற்றெடுக்கும் என நம்புகின்றோம். அது ஒரு பிரகாசமான மற்றும் வளமான ஆண்டின் எதிர்பார்ப்பை விட அதிகமாக இருக்கும்;.
12 April 2020
ஊரடங்கு காலத்தில் புதுவருடம் பிறப்பது வரலாற்றில் முதல்தடவையல்ல! #COVID19
இந்த பண்டிகை காலங்களில் நாடு ஊரடங்கு உத்தரவின் கீழ் இருப்பது சமகால வரலாற்றில் முதல் தடவையல்ல. 1971 ஆம் ஆண்டில், ஏப்ரல் 5 ஆம் தேதி தொடங்கிய தெற்கு இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்ட தூண்டுதல் அனைத்து நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தியது.
அதுபோல மூன்று தசாப்த கால வடகிழக்கு கிளர்ச்சியின் போது ஒரு முறை அல்ல பலதடவைகள், பாரம்பரிய சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு அனைத்து தீவுக்குமான ஊரடங்கு உத்தரவின் கீழ் நாட்டோடு சீர்குலைந்தது.
11 April 2020
இன்றய உணவுத்தட்டுப்பாடு அன்றய நீர்வள நாகரிகத்தை நினைவுபடுத்துகின்றது. #COVID-19
கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியால் இலங்கையர்கள் 'உணவுப் பற்றாக்குறையை' சந்தித்து வருகின்றனர். உணவுத்தட்டுப்பாடானது புதிதாக இந்த வைரஸ் தொற்று முடக்கத்தினால் மாத்திரமல்ல அண்மைக்காலமாக ஏற்பட்டுவரும் காலநிலை மாற்றம் காரணமாக வரும் வரட்சி மற்று வெள்ளப்பெருக்குக் காரணமாகவும் அவை ஏற்பட்டு வந்துள்ளது. எமது நாட்டினுடைய பொருளாதார நிலையங்களில் கொணடடுவருகின்ற காய்கறிகள் அழுகக்கூடும் என்று ஏகப்பட்ட கதைகள் பரவி இருந்தாலும்;, மக்கள் சுகாதார விதிமுறைகளை சரிவரப் பின்பற்றாததாலும் அவற்றை மூடுவதற்கு அரசாங்கம் உறுதியான முடிவை எடுக்க வேண்டியிருந்தது.
10 April 2020
ஓளித்து விளையாடுபவர்களை ஊரடங்குபோட்டுக் கட்டுப்படுதமுடியாது. #COVID-19
கொரோனா வைரஸ் நாம் வருத்தப்படுவதற்கான தனது இடைவிடாத அறிகுறிகளைக் அது காட்டுவதில்லை, ஆனால் அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளுடன் உள்நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் அதன் கொடிய விஷத்தைத் தொடர்ந்து பரப்பி வருகிறது, தன் பரவலையும் அதன் பேரழிவினையும் உலகிற்கு கொடுக்க தன்னால் முடிந்த அனைத்தையும் அந்த வைரஸ் செய்து வருகின்றது.
09 April 2020
மூடிய பொருளாதாரத்தை புதிய தலைமுறைக்கு கற்றுத்தரும் கொரோணா.
இன்று உருவாகி இருக்கும் உலக பொருளாதார மந்தம் ஏற்கனவே எமது நாட்டில் இறக்குமதி அதிகரித்து அதனால் ஏற்பட்ட சென்மதி நிலுவை நெருக்கடி அத்துடன் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் உதவியாகப் பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவது ஏற்கனவே முடங்கியுள்ளது இந்தச்சூழலில் சர்வதேச நாணயங்களுக்கு ரூபாயில் தொடர்சியாக ஒரு சரிவைத் தூண்டி வருகின்றது. இவ்வாறு எல்லாவிதத்திலும் ஏற்கனவே பலவீனமான பொருளாதாரத்தினை கொவிட்-19 எனும் கொடிய கொலையாளி புதிதாகவந்து மேலும் ஒரு அடியினை பொருளாதாரத்தின்மீது போட்டிருக்கின்றது. இது 'மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்ததுபோல்' உள்ளது.
08 April 2020
கண்ணுக்குத் தெரியாத கொரோணாவும் கண்ணுக்குப் புலனாகும் தலைமைத்துவமும்
இன்று உலகத்திலேயே தீயாய் பரவி வருகின்றது கொரோணா என்று அழைக்கப்படும் கொடிய தொற்றுநோய். இந்த கொடிய நோயினைத் பரவாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்த உலக நாடுகளின் வரிசையில் இலங்கை முதன்மையாக இருக்கின்றது. ஆகவே நாம் வேகமாகப் பரவி உயிர்களைக் கொள்ளை கொள்ளும் இந்த கொடிய நோயினை தடுப்பதற்கு ஆரம்பத்தில் பல நடவடிக்கைகளை எடுத்ததன் மூலம் ஏனைய நாடுகளுடனான இழப்புகளை ஒப்பிடும் பொழுது அது எமது நாட்டுமக்களை பாரிய அளவில் பாதிக்காத சாதகமான ஒன்றாகவே இருக்கின்றது.
13 February 2020
கிழக்கு மாகாணமே இணையத் திறனறிவில் கடைசியாக உள்ளமை வேலையற்ற இளைஞர்களுக்கு பஞ்சமில்லாதாக்கியுள்ளது.
நம் நாடு பல பிரச்சினைகளை ஒன்றன் பின் ஒன்றாகச் சந்தித்து வருகின்றது. 2019 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் பற்றாக்குறை அல்லது துண்டுவிழும் தொகை 7 வீதம் என மதிப்பிடப்பட்ட ஒரு சவாலான பொது நிதி நிலைமையில் அது ஆக்கப்பட்டுள்ளது. அத்தோடு இது 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வருவாயில் அதிகூடிய குறைப்பைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுவதனால் அதற்கான பல ஊக்கத்தொகைகளை தயார்பண்ணவேண்டிய ஒரு சங்கடத்தில் இருந்து வருகின்றது எமது நாடு. இத்தனை பிரச்சினைகளுக்கும் அப்பால் புதிதாக வந்துள்ள அரசு 150,000 பேரினை அரச துறையில் இணைத்துக்கொள்ளவும் எத்தணித்து வருவது எமது திறைசேரி அல்லது கஜானாவில் உள்ள பணத்தொகையுடன் ஒப்பிடும்போது பாரிய சவாலாகவும் தலையிடியாகவும் அரசுக்கு மாறி இருக்கின்றது இன்று.
12 February 2020
அரச ஊழியர்களின் சேவைகள் சுதந்திரமானதாக வழங்க இடமளிக்கவேண்டும்.
எமது நாட்டில் அரச அதிகாரிகளுக்கு பாரிய பொறுப்புகள் உள்ளன, அதனால்தான் அவற்றைச் செய்வதற்கு அவர்களின் நேர்மை மிக முக்கியமானது. இன்று ஒரு பொது அதிகாரி பொது நலனுக்காக எழுந்து நின்று அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகளை எழுப்புவதும், நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தாவுக்கு பதிலளிப்பதும் இந்த வாரம் சமுக ஊடகங்கள் முழுவதும் வைரலாகியது. இது அடிக்கோடிட்டுக் காட்டுவது என்னவென்றால், அரசியல்வாதிகள் எடுக்கும் கேள்விக்குரிய முடிவுகளையும் கொள்கைகளையும் எதிர்கொள்வதற்கும், இந்த நிலைமையை மாற்ற வேண்டியதன் அவசியத்திற்கும் இந்த நாட்டில் பொது அதிகாரியின் அதிகாரங்கள் எவ்வளவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்பதனையே.







