ADS 468x60

13 November 2021

அரச ஊழியர்களே இந்த நாட்டுக்கு சுமையாக உள்ளனர். ஏற்றுக்கொள்ளலாமா?

இன்று எங்கு பார்த்தாலும் பதுக்கல், தட்டுப்பாடு, விலையேற்றம், தரமற்ற பொருட்கள் என நாட்டு மக்களின் வாழ்க்கை பெரும் சுமையால் நீழ்கின்றது. இதனுள் அகப்பட்ட பலரில் அன்றாட வாழ்வாதாரத்தில் ஈடுபடுபவர்கள், சுயதொழில் புரிபவர்கள், தனியார் தொழில் செய்பவர்கள் ஆகியோர் முக்கியயமாகக் கருதப்படுகின்றனர். கோவிட் காலத்தில் இந்த வர்க்கத்துக்கு நிவாரணமும் கிடையாது வருமானமும் கிடையாத நிலையில் பெரும் துன்பத்தை அனுபவித்த வர்க்கத்தினர். ஆனால் எந்த அரச தொழிலில் இருந்தவர்களுக்கும் அரசு ஒரு ரூபாய் கூட குறையாமல் அவர்கள் வேலைக்கு செல்லாத சந்தர்ப்பங்களிலும் முழு சம்பளத்தினை செலுத்தி வந்தது அனைவருக்கும் நினைவிருக்கும்.

05 November 2021

இரசாயன உரங்கள் தேவைதானா?

இப்பொழுது எமது நாட்டில் நூறுவீத உரம் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படவுள்ளது. இரசாயன உரங்களின் பாவனையை படிப்படியாகக் குறைத்து, இயற்கை உரங்களை நோக்கிச் செல்வதன் முக்கியத்துவத்தை அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் ஜனாதிபதி எடுத்துரைத்தார். அது பல அபிவிருத்தியடைந்த நாட்டுத் தலைவர்களாலும், புத்திஜீவிகளாலும் வரவேற்க்கப்பட்டது. தேசிய உர செயலகத்தின் கூற்றுப்படி, 2020 ஆம் ஆண்டில், நாங்கள் ரூ.36 பில்லியன பெறுமதியான 580,000 MT மெட்ரிக் டொன் இரசாயன உரங்களை இறக்குமதி செய்தோம். இந்த உரத்தின் மொத்தத் தொகையில் சுமார் 50 வீதம் நெல்லுக்கும், மீதி தோட்ட பயிர்கள் மற்றும் ஏனைய பயிர்களுக்கும் பயன்படுத்தப்பட்டது தரவுகள் சொல்லும் செய்தி.

02 November 2021

உரத்தட்டுப்பாடு பட்டினிப் பேரழிவுக்கு வழிவகுக்குமா?

இன்று நாடு பூராவும் விவசாயிகள் தங்கள் விவசாய நடவடிக்கைக்கான இரசாயன உரம் அல்லது சேதன உரங்களைக் அரசிடம் வழங்குமாறு கோரி வருகின்றனர். மறுபுறத்தில் அரசாங்கத் தலைவர்கள், விவசாயிகளுக்குத் தேவையானதை வழங்காமல், இரசாயன உரங்கள் சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று திரும்பத் திரும்ப கூறி வருகின்றனர். உண்மையில் எமது விவசாயிகள் இரசாயன உரத்தைக் கோருவதில் ஒருபோதும் பிடிவாதமாக இருந்ததில்லை. அவர்கள் விரும்புவது ஏதோ தமது விவசாயத்துக்கான உரம் மாத்திரமே. சேதன உரங்களைப் பயன்படுத்துவதை அரசாங்கம் வலியுறுத்தினால் அதை தடையின்றி வழங்கவேண்டும் அது தற்போதைய விவசாயிகளின் போராட்டங்களுக்கு தீர்வாக அமைந்துவிடும்.

28 October 2021

பா.ம தேசியப்பட்டியல் தேவைதானா?

 நாம் நாளாந்த அரசியல் விமர்சனங்களை அவதானிக்கவேண்டியுள்ளது இன்று. புதிய அபிவிருத்தியில், அரசாங்கத்தின் பங்காளியான கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக பாராளுமன்றத்திற்கு அனுப்பப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று தேர்தல் மறுசீரமைப்புக்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவிடம் பரிந்துரைத்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் இறையாண்மையைப் பாதுகாக்கும் நோக்கில், மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கையில் 5% இனரை குறைக்க வேண்டும் என சொல்லியுள்ளனர்.

தற்போது, இலங்கையின் பாராளுமன்றம் 29 தேசியப்பட்டியல் எம்.பி.க்களைக் கொண்டுள்ளது, அவர்கள் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் கட்சிகளால் அவர்களது வாக்குகளின் பங்கைப் பொறுத்து நியமிக்கப்படுகிறார்கள், மேலும் அவர்கள் மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கையில் 12.8%ஆவர்.

03 October 2021

இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்! - தலைமைத்துவம்.

எங்கு பார்த்தாலும் தலைவர்கள், அதனால் நமது தேசம் தலைவர்களால் நிரம்பி வழிகிற ஒன்று. ஆள் ஆளுக்குக் கட்சிகள், அவரவர்க்கான சங்கங்கள், அங்கங்கே சமூக, இலக்கிய ஆன்மிக அமைப்புகள் என்று தொடங்கி தம்மைத் தலைவராக அறிவித்துக் கொள்கிறவர்களால் தெரு நிரம்பிக் கிடக்கிறது. இந்தத் தலைமைகளுக்கு தேசியத் தலைவர், மாநிலத் தலைவர், நிர்வாகத் தலைவர், செயல்தலைவர், கவுரவத்தலைவர் என்ற வகைப்பாடுகள் வேறு. இவர்களில் எவராகத்தாம் இல்லையென்றாலும் குடும்பத்தலைவர் என்றாவது ஒவ்வொருவரும் இங்கே தலைவர்தான்.

எல்லோருக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கும், ஆனால் பொதுவாக 'தலைவா' என்றழைத்துவிட்டால் போதும் யாருக்கும் சற்று மயக்கம் வந்துவிடுகிறது. தலைமை என்பது ஒரு மந்திரச்சொல். தலைமை ஒருவருக்கு எப்படிக் கிடைக்கிறது என்று பார்த்தால், திறனுக்கேற்பப் பெறுகிற தலைமை, திணிக்கப்படுகிற தலைமை, ஸ்வீகரிக்கப்படுகிற தலைமை, தாமே அறிவித்துக்கொள்கிற தலைமை என்று வகைப்பாட்டில் வரும். தலைமை யாருக்கும் கிடைக்கும். அதைத் தக்கவைத்துக் கொள்வது ஒரு திறன் என்று பொதுவாகச் சொன்னாலும் தலைமை ஒரு பண்பாக மட்டுமே புரிந்துகொள்ளப்பட வேண்டும். 

30 September 2021

நமது இளைஞர்கள் ஏன் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும்?

அரசியல் பற்றிய புரிதல்

ஓ! இளைஞர்களே கனவு காணுங்கள் அது தூக்கத்தில் காணும் கனவு அல்ல நாட்டை முன்னேற்றப்பாதையில் அழைத்து செல்லும் லட்சிய கனவாக இருக்கட்டும் என்றார் அப்துல் கலாம்.

இலங்கையில் பெரும் எழுச்சி எல்லாம் மாணவர்களால், இளைஞர்களால் உண்டானது. உரிமைப் போராட்டம் ஆகட்டும், போர் நடந்த போதெல்லாம் இங்கு உண்டான எழுச்சி ஆகட்டும், அரசின் வேலையில்லாக் கொள்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஆகட்டும்... பெரும்பாலும், எந்த பெரும் அரசியல் கட்சிகளும் முன்னெடுக்காமல், சிறு அமைப்புகளும், மாணவர்களும் தன்னெழுச்சியாக கிளர்ந்து எழுந்து போராடி இருக்கிறார்கள். ஏன் அரசைக் கூட பணிய வைத்திருக்கிறார்கள்.

07 September 2021

வெளிநாடு சென்றாவது கல்வியைத் தேடு!

கொரோணா எனும் கொடிய நோய் எல்லாவற்றையும் விட கல்வித்துறையில் பல தலைகீழ் மாற்றங்களை உண்டுபண்ணி இருக்கின்றது. கொரோனா காரணமாக கடந்த ஓன்றரை ஆண்டுகளாக பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள்; மூடப்பட்டுக்கிடக்கின்றன. வகுப்புறைப் பாடங்கள் இணைய வழியே நடத்தப்படுகின்றன. பாடசாலைகள், பல்கலைக்கழக படிப்பு என்பது பாடங்களை மட்டும் தெரிந்துகொள்வதற்கானது அல்ல, மற்றவர்களுடன் பழகுதல், நிகழ்வுகளில் ஒன்றிணைதல், சமூகத்தைப் புரிந்துகொள்ளல் போன்ற அனுபவங்களையும் உள்ளடக்கியது.

 அந்தவகையில் கடந்த ஒன்றரை ஆண்டுகாலத்தில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் வழியிலான அனுபவத்தை மாணவர்கள் இழந்துள்ளனர். அப்படியென்றால், லட்சக்கணக்கில் பணம் செலவழித்து வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்களின் நிலைமைதான் என்ன? அவர்களுக்கும் இணைய வழியில்தான் வகுப்புகள் என்றால், வெளிநாடு சென்று படிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?' என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கலாம். இந்தத் தர்க்கத்தின் அடிப்படையில், இனி வரும் காலங்களில் இலங்கையிலிருந்து வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறையும் என பலரும் கூறினர். ஆனால், சமீபத்திய செய்திகள் நமக்கு வேறொரு உண்மையைச் சொல்கிறது.

05 September 2021

யார் பொறுப்பு? விவசாயி – நுகர்வோர் - அதிகாரிகள்.

இன்று நாடு முடக்கப்பட்டிருக்கின்றது, வர்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, இருப்பினும் சாதாரண மக்கள் இவற்றினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அரசாங்கம் பலவகையிலும் அழுத்தங்களுக்கு உள்ளாகி வருகின்றது. 

உண்மையில் என்ன நடக்கின்றது? விவசாயிகள் எந்தவித தடையுமின்றி விவசாயத்தில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது விவசாய உற்பத்திகளை தங்குதடையின்றி கொண்டுசெல்லவும் அவற்றைச் சந்தைப்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.