கடந்த ஞாயிற்றுக் கிழமை முழு இலங்கை சமூகத்திற்கும் மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருந்தது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கிய போதிலும், நாட்டின் நான்கு திசைகளிலிருந்தும் பட்டாசுகளின் சத்தம் மற்றும் ஆரவாரம் கேட்கத் தொடங்கியது. இந்த நேரத்தில் குதூகலமும், பெருமையும், உற்சாகமும் பொதிந்து கிடக்கும் அற்புதமான சந்தர்ப்பமாகக் கருதுவது மிகவும் சரியானது.
இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தன. ஒருபுறம் இலங்கை அணி மீண்டும் ஆசிய வலைப்பந்து கிண்ணத்தை கைப்பற்றியது. மறுபுறம் இலங்கை அணி ஆசியக் கிண்ண கிரிக்கெட் மகுடத்தை வென்றது. அந்த அணிகளுக்கு நாட்டில் உள்ள பலர் நம்மட பொடியணுகள், எங்கள் பெண்கள் என்று வாழ்த்தத் தொடங்கினர்.









