ADS 468x60

16 October 2022

நாம் வசதிபடைத்தவர்களா அல்லது வருமானம் குறைந்தவர்களா?

இன்று பொருளாதாரம் கற்பிக்கின்ற, பல பட்டங்களை பெற்றுக்கொண்ட ஆயிரக்கணக்கானர்கள் நம்மத்தியில் எப்படியோ மலிந்துவிட்டார்கள். ஆனால் அவர்களால் எமது சிறிய நாட்டின் பொருளாதாரச் சிக்கலைக்கூட விளங்காத மக்களுக்கு சொல்லிக்கொடுக்க முடியாத கல்வியால் வீட்டில் மாத்திரமல்ல நாட்டிலும் பல பிரச்சினைகள்! அது நாம் வசதியானவர்களா இல்லையா என்பதுதான் அந்தப்பிரச்சினை.

இலங்கையை நடுத்தர வருமான நிலையிலிருந்து நீக்குவதற்கு சந்தர்ப்பம் கோரி உலக வங்கியிடம் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அறியமுடிகிறது. 

அதாவது, இலங்கை இப்போது இருக்கும் இடத்திலிருந்து கீழே இறங்குவதற்குத் தீர்மானித்துள்ளது. மற்றவர்களின் பணத்தில் வாழும் பொய்யான பொய்யர்கள் மற்றும் திருடர்கள் இந்த சூழ்நிலையை விரும்பவில்லை என்பதையே இதிலிருந்து நாம் உணரலாம்.

எமது பாடசாலைக் குழந்தைகளின் எதிர்காலம் இப்படியாகிவிடக்கூடாது!

பாடசாலைக் கல்வி முறை, ஒழுக்க முறைகள் என்பன காலத்துக்குக் காலம் வேகமாக மாறி வருகின்றன. ஆந்த வகையில், ஹலவத்த பாடசாலை ஒன்றின் மாணவர் ஒருவர் தனது பாடசாலை பையில் மது போத்தலை மறைத்து வைத்திருந்த போது மாணவர் தலைவர்களால் பிடிக்கப்பட்டார். ஒன்பதாம் ஆண்டு படிக்கும் குறித்த மாணவி, பாடசாலைக்குள் விஸ்கி போத்தலைக்; கொண்டு வந்துள்ளார். சந்தேகத்துக்குரிய மாணவி, தனது தந்தை விஸ்கி போத்தலை வீட்டிற்கு கொண்டு வந்து தனது நண்பருடன் குடித்த மிகுதியை பாடசாலைக்கு கொண்டு வந்ததாக கூறினார். இது தொடர்பில் மாணவி கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் அவரது பெற்றோருக்கு அதிபர் அறிவித்துள்ளார். ஒன்பதாம் ஆண்டு மாணவர் என்பவர் தனது எதிர்காலத்திற்காகத் தயாராகும் மாணவர். ஜி.இ.சி. சா. துரர் பரீட்சைக்குத் தோற்றிய பின்னர் உயர்தரப் பரீட்சையின் ஊடாக பல்கலைக்கழகம் செல்வதே அவருக்கு இயல்பான பாதை. 

15 October 2022

கட்சியோ சின்னமோ ஒரு விடயமல்ல. தனிமனித ஆளுமைதான் ஒரு வழிகாட்டிக்கு முக்கியத்துவம் !

கட்சியோ சின்னமோ ஒரு விடயமல்ல. தனிமனித ஆளுமைதான் ஒரு வழிகாட்டிக்கு முக்கியத்துவம் !
கட்சியோ சின்னமோ ஒரு விடயமல்ல. தனிமனித ஆளுமைதான்  ஒரு வழிகாட்டிக்கு முக்கியத்துவம் பெறுகின்றது எங்கும். அந்த ஆழுமை மக்கள் நலன் சார்ந்து அவர்களை மீட்பதற்காக சிந்தித்துத் திட்டமிடுதலிலும் அதனை செயற்படுத்துவதிலும்தான் தங்கியிருக்கின்றது. 

12 October 2022

அரசியலில் எதற்கு இத்தனைபேர் தேவை? எண்ணிக்கையைக் குறைக்கவேண்டும்!

நாம் அனைவரும் அறிந்த  நாட்டின் முன் இரண்டு முக்கிய பிரச்சினைகள் உள்ளன. ஒன்று பொருளாதார சரிவுஇ மற்றொன்று அரசியல் அமைப்பை பெரும்பான்மை மக்களால் நிராகரிப்படுவது. பொருளாதார வீழ்ச்சிக்கு தற்போதுள்ள அரசியல் அமைப்புதான் காரணம் என்று பலர் கருதத்துவங்கியுள்ளனர்.
உண்மையில் பொருளாதாரத்தை புத்துயிர் பெற எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாம் விரிவாக விவாதித்ததால்இ அது பற்றி இனி இங்கு பேசி வேலையில்லை. மாறாக அரசியல் வேலைத்திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். இன்று நாட்டின் அரசியல் அமைப்பு பெரும்பான்மை மக்களால் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளதோடு 225 உறுப்பினர்களையும் வீட்டுக்குச் செல்லுமாறு கோருகின்றனர். 

09 October 2022

ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நாம் நிராகரிக்கலாமா?

இன்று ஆர்பாட்டங்கள், எதிர்புகளை தெரிவித்து இலங்கைக்குள் இருந்துகொண்டு ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நாம் நிராகரித்தாலும், அவற்றை முழுமையாக புறக்கணிக்க முடியாது. குறிப்பாக சர்வதேச ஆதரவை எதிர்பார்க்கும் இலங்கைக்கு அதனை எப்படியும் செய்ய முடியாது. அத்துடன்  இன்று சர்வதேசத்தின் நம்பிக்கையைப் பெறுவதுடன், சக்தி வாய்ந்த வல்லரசுகளுடன் நட்புறவுடன் செயற்பட வேண்டியது அவசியமாகும். இங்கே, பலம்கொண்ட நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் கொள்கைகள் மற்றும் நோக்கங்களுக்கு நாம் அதிக கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயம். இல்லை என்றால் சர்வதேச சமூகத்தின் முன் அவமானப்படுத்தப்பட்டு விமர்சிக்கப்படுவோம் மற்றும் புறக்கணிக்கப்படுவோம்.

08 October 2022

விவசாயிகளுக்கு யார்தான் முக்கியம் கொடுக்கிறான்?

இன்றைக்கு எல்லோரும் டாக்டராகனும், எஞ்சினியராகனும், வக்கீலாகனும், ஐரி ஒப்பிசராகனும் அப்புறம் உழைக்கிற காச கடையில கொண்டு கொடுத்தா ப்ரசா உணவு வேண்டிச் சாப்பிடலாம். 

ஐயா இந்தச் சாப்பாட்ட என்னுடைய விவசாயப் பெருங்குடி மக்கள் எங்கயோ ஒரு காட்டில மழையிலும் வெயிலிலும் கண்ணுமுழி பிதுங்க, கன்னச் சதை தொங்க உடலில் வேர்வை உப்பா பூக்க உடலால வெம்பாடுபட்டு விளைய வைத்தால்தான் இங்க ப்றசா உணவு வரும். 

ஒரு கவிஞ்ஞன் எழுதுகிறான் ' கடைசி மரமும் வெட்டப்பட்ட பிறகு, கடைசி மீனும் பிடிபட்ட பிறகு கடைசி நதியும் நஞ்சான பிறகுதான் மனிதன் உணருவான் பணத்தைச் சாப்பிட முடியாதென்று'. 

02 October 2022

அறிவை மூலதனமாக மாற்றுவதே வீழ்ந்து கிடக்கும் எமது நாட்டிற்கு ஒரே வழி.

இன்று எமது தேசிய கல்வி மற்றும் சமூகத்தில் ஆசிரியர்களின் பங்கு பற்றி பல விவாதங்கள் உள்ளன. அவர்கள் பழகும் போது முதலில் உணரும் விடயம் என்னவென்றால், சமூகத்தில் கற்றல் மற்றும் கற்பித்தல் பற்றிய உன்னிப்பான அவதானிப்பு உள்ளது. படித்த சமுதாயம் மற்றும் படிக்காத சமூகம் இரண்டும் கல்வியில் ஆர்வமாக உள்ளது. அதுபோல பணக்கார சமூகம் மற்றும் ஏழை சமூகம் கல்வியில் சமமாக ஈடுபடுகின்றனர். கல்வி தொடர்பாக அரசு எடுக்கும் முடிவுகளை ஒட்டுமொத்த சமூகமும் உற்று நோக்குகிறது. எந்தக் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தாலும், இது ஒரு சாதகமான நிலை. கல்வியில் பலவிதத்தில் சாதகமான சூழ்நிலையை தெரிவிக்கும் ஆசிய நாடாகவும் நமது நாடு அறியப்படுகிறது.

01 October 2022

பிறருடைய குழந்கைகளை நமது குழந்தைகள் போல் பாதுகாப்போம்.

இந்த ஆண்டு உலக குழந்தைகள் தினத்தின் கருப்பொருள் 'ஒவ்வொரு குழந்தைக்குமான ஒரு சிறந்த எதிர்காலம்' என்பது ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டுவரப்பட்டுள்ளது.

1857 ஆம் ஆண்டில், ஐக்கிய இராச்சியத்தின் புகழ்பெற்ற பாதிரியாரான டாக்டர் சார்லஸ் லியோனார்ட், ஒரு ஞாயிற்றுக்கிழமைக்கு 'தி ரோஸ் டே' என்று பெயரிட்டார், மேலும் அந்த நாளில் குழந்தைகளின் செயல்பாடுகள் மற்றும் நலன்களை மேம்படுத்துவதில் பெரியவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

1919 ஆம் ஆண்டில், குழந்தைகளைப் பாதுகாப்பது, கல்வி, உணவு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான புறக்கணிப்பு போன்ற 10 காரணிகளின் அடிப்படையில் குழந்தைகளைப் பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை விடுத்தது.